Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தமிழ் Books
- You cannot add "24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்" to the cart because the product is out of stock.
Showing 1–60 of 620 results
-
கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை ( Kanam Kanam Velvorkkana Kolkai )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartராபின் ஷர்மா
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.
இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.
-
மூலதனம் ( Mooladhanam ) Das Capital (3 பாகங்கள்)
Rs. 20,790.00Original price was: Rs. 20,790.00.Rs. 18,990.00Current price is: Rs. 18,990.00.or 3 X Rs.6,330.00 withAdd to cartகார்ல் மார்க்ஸ்
“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக நடைபெற்று வரும் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்கு குளிர்கால மாதங்களை, குறிப்பாக, ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன.
பொதுவாக, ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும் போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டக் கூடிய அளவில் மதமதப்புடன் செயல்படுகின்றன. இந்நிலையில், கையாளுவதற்குக் கடினமான மெய்யியல் சிக்கல்களில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே, ஒரு குளிர்காலத்தில் முடிக்கப்பட வேண்டிய பணி எதிர்பார்த்தபடி பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் அதே பணியை பெரும்பாலும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டது.
மூலதனம் நூலில் மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியைப் பதிப்பிப்பதில் நடந்தது இதுவே!”
-எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து
-
நான் மலாலா: பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை ( Naan Malala )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartமலாலா யூசுஃப்சாய்
தமிழில்: பத்மஜா நாராயணன்
ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபன்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள். வாய்மூடி அமைதியாக இருக்க மறத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினாள். 2012 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி செவ்வாயன்று இப்போராட்டத்திற்குக் கடுமையான பின்விளைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் போது அவள் பயணித்த பேருந்திலேயே தாலிபன் ஒருவன், மிக அருகிலிருந்து அவள் தலையில் சுட்டான். அவள் பிழைப்பாள் என்று யாரும் நம்பவில்லை.
ஆனால் அதிசயமாக உயிர்தப்பி, வட பாகிஸ்தானின் பள்ளத்தாக்கில் ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து ஐ.நா சபைவரை அவள் பயணம் செய்திருக்கிறாள். பதினாறு வயதிலேயே அமைதியான எதிர்ப்பிற்கு உலகச் சின்னமாய் குறிப்பிடப்படுகிறாள். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறாள். பயங்கரவாதத்தால் இடம்பெயர்த்து சென்ற ஒரு குடும்பத்தின் உருக்கமான கதைதான் ‘நான் மலாலா’. ஆண் குழந்தைகளே குடும்பச் சொத்து என்று கருதும் சமூகத்தில் தன் பெண் குழந்தைமேல் அபரிமித அன்பு கொண்ட பெற்றோரின் கதை.
பெண் கல்விக்கான போராட்டத்தின் கதை. இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு குரலின் சக்தி போதும் என்று இந்நூல் நம்மை நம்பவைக்கும். யார் மலாலா ? என்று துப்பாக்கி ஏந்தியவன் வினவினான். நான் தான் மலாலா. இது தான் என் கதை.
-
ஆயிரம் சூரியப் பேரொளி (A Thousand Splendid Suns)
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withதமிழில்: ஷஹிதா
பதினைந்தே வயதினளான மரியம் ரஷீதுக்கு மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையில் தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க, வாழ்க்கை, பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப்போகிறது. ஆனாலும் அன்பு, மனிதர்களை எதிர்பாராத வகைகளில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்க வைத்து, எல்லாத் தடைகளையும் தகர்க்கச் செய்கிறது.
‘ஒருவேளை எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ், தி கைட் ரன்னரைப் போலவே சிறந்ததுதானா என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இதோ அதற்கான பதில்: இல்லை, இது அதை விடவும் சிறந்தது’ வாஷிங்டன் போஸ்ட்
-
குழந்தை வளர்ப்பு அறிவியல் ( Kulanthai Valarppu Ariviyal )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartஸ்டீவன் ருடால்ப்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.
* உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
* நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
* டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
* சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைப் பல்வேறு உண்மை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.
-
நிலமெல்லாம் ரத்தம் / Nilamellam Ratham
Rs. 6,290.00or 3 X Rs.2,096.67 withAdd to cartபா.ராகவன்
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை.
இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது? ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள்.
அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்? பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.
-
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க ( Ungalukkul Irukkum Thalaimathuvaththai Vazharthedukka )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.
-
[RARE] ஆற்றலியல் இன்றும் நாளையும் (Energy today and Tomorrow)
Rs. 1,890.00Original price was: Rs. 1,890.00.Rs. 1,190.00Current price is: Rs. 1,190.00.or 3 X Rs.396.67 withAdd to cartவி.அ . கிரீலின்
தமிழில் கி. பரமேஸ்வரன்
இந்நூலில், புகழ்பெற்ற சோவியத்து விஞ்ஞானியும் சோவியத்து விஞ்ஞானப் பேரவை உறுப்பினருமான வி. அ. கிரீலின் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஆற்றலியல் வளர்ந்த விதம், வெப்ப ஆற்றல், நீராற்றல், அணு ஆற்றல் போன்றவற்றிலிருந்து மின்னாற்றலைச் சேமித் துவைத்தல், மின்னாற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு அனுப்புதல் போன்றவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். மேலும் அவர் நாளைய ஆற்றலியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
தி பிரின்ஸ் / The Prince Tamil
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartநிக்கோலோ மாக்கியவெல்லி
தமிழில்: பேரா எஸ்.ஆர்.விவேகானந்தம்
அரசியலில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டுமென்றால் அவசியம் படிக்க வேண்டிய நூல்.மாபெரும் சர்வாதிகாரிகளையும், அறிஞர்களையும் உருவாக்கியதுடன் இந்த நூல் வெளிவந்த காலத்திலும் சரி, இன்றும் சரி விவாதிக்கப்பட்டே வருகிறது. நீங்களும் படிங்க விவாதிக்க….
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
லென்ஸ்: புகைப்படம் எடுக்கும் கலை ( Lens: Puhaippadam Edukkam Kalai )
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartஎரிக் கிம்
தமிழில்: தீஷா
கற்றலுக்கான, வாழ்வின் நீண்ட பயணத்தில், அர்ப்பணிப்புடன் பங்கெடுத்துக்கொள்கிற ஒரு பணிவான மாணவன், போட்டோகிராஃபி துறையில் மாஸ்டர்களாகத் திகழ்கிற பலரிடமிருந்தும், கற்றுக்கொண்டவைகளை வடிகட்டி இப்புத்தகத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்கள் புகைப்படக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்றால், உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதுதான் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டிட அதுதான் உங்கள் போட்டோகிராஃபி மாஸ்டர். அந்த மனதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் எடுக்கிற புகைப்படங்களில், உங்கள் சொந்த பாணி (Style) மற்றும் பார்வையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மனிதனாக உங்களை நீங்களே அடையாளம் காண வேண்டும். இதுதான், புகைப்படக் கலையின் பிரதானம்.
பழங்கால தத்துவவாதிகள் பலராலும், நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய ஞானம், ‘உன்னை அறிந்துகொள்’ என்பதுதான். இந்தப் புத்தகத்தின் வாயிலாகவும் உங்களை, நீங்களே கண்டுபிடியுங்கள் மற்றும் உங்களை ஒரு போட்டோகிராஃபராக அடையாளம் காணுங்கள்.
-
ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
Rs. 4,390.00or 3 X Rs.1,463.33 withAdd to cartயுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Wellcome Book Prize Nominee for Longlist (2017)
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி -
அத்தியாவசியவாதம் / Athiyavasiyavadham / Essentialism Tamil
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartGreg Mckeown
தமிழில்: PSV குமாரசாமி
அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும்.
• வீட்டில் அல்லது அலுவலகத்தில், ‘இதற்கு மேல் என்னால் முடியாது’ என்ற நிலையை நீங்கள் எப்போதாவது அடைந்ததுண்டா?
• அதிகமாக வேலை செய்தும் குறைவானவற்றையே சாதித்துள்ளதுபோல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
• படுசுறுசுறுப்பாக இருந்திருந்தும் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்கவில்லை என்ற உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?
• எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்து வந்துள்ளபோதிலும் எங்கும் போய்ச் சேர்ந்திருக்காததைப்போல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
இக்கேள்விகளில் எவற்றுக்கேனும் ‘ஆமாம்’ என்று நீங்கள் பதிலளித்திருந்தால், நீங்கள் ஓர் அத்தியாவசியவாதியாக மாறுவதே உங்களுக்கான ஒரே தீர்வு.
-
No. 1 சேல்ஸ்மேன் ( No. 1 Salesman Tamil )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartசோம. வள்ளியப்பன்
பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன்.
நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்.
டார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும். அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.
-
செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்! ( Selvapurikkana Viraivup Paathai )
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartஎம்ஜே டிமார்க்கோ
தமிழில்: PSV குமாரசாமி
“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!
-
[RARE] விலங்கியல் (Zoology)
Rs. 3,990.00Original price was: Rs. 3,990.00.Rs. 2,690.00Current price is: Rs. 2,690.00.or 3 X Rs.896.67 withAdd to cartவ. ஷாலாயேவ் , நி. ரிக்கவ்
இந்த விலங்கியல் பாடபுத்தகம் ஆரம்பத்தில் சோவியத் யூனிய னுக்காகத் தயாரிக்கப்பட்டது. அங்கே இதன் இருபது மறு பதிப்புக்கள் வெளியாயின. ருஷ்ய சோவியத் சோஷலிஸக் கூட்டுக் குடியரசிலும் மற்ற யூனியன் குடியரசுகளிலும் இருபது ஆண்டுக் காலம் இது உயர் நிலைப் பள்ளிகளில் பாடபுத்தகமாகப் பயிலப்பட்டது. அறுபதுக்களின் தொடக்கத்தில் இந்நூல் தெற்கு ஆசிய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டது. தற்போது இப்பாடபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இம்மொழிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பதிப்பில் போலவே இந்தப் பதிப்பிலும் ஓரணுவுயிர்கள் முதல் பிரைமேட்டுகள் ஈறாக விலங்குலகின் முக்கியக் குழுக்களைப் பற்றிய முறையான சுருக்க விவரம் தரப்பட்டிருக்கிறது. இயற்கை உருவ இயல், உடலியல், சூழ்நிலை இயல், கருவியல், தொல்லுயிரியல், வகைப் பாகு பாட்டியல் ஆகிய விலங்கியலின் பல்வேறு துறைகளிலிருந்து திரட்டப் பட்டுள்ள தகவல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
தாஜுத்தீன் பாபா
Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartநாகூர் ரூமி
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
டாலர் தேசம்: அமெரிக்காவின் அரசியல் வரலாறு / Dollar Thesam
Rs. 7,290.00or 3 X Rs.2,430.00 withAdd to cartபா.ராகவன்
இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு. அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும்.
நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் – அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம். தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை.
இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம். டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
-
நாகரிகங்களின் மோதல் ( Naharihangalin Modhal ) The Clash of Civilizations
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartசாமுவேல் பி.ஹண்டிங்டன்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு.
உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது.
இன்றைய உலகம் முதலாளியம், கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல, மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது; முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல், கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது.
அணுஆயுதப் பெருக்கம், புலம்பெயர்தல், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை, கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில், உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது; பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.
ஜப்பானியம், சீனியம், இந்துத்துவம், இஸ்லாமியம், மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம், யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு, இன்று ஆப்கான் முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது. இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது.
-
21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் / 21 Am Nutrandil Muladhanam / Capital In The 21st Century Tamil
Rs. 5,490.00or 3 X Rs.1,830.00 withAdd to cartதாமஸ் பிக்கெட்டி
தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி
பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.
தொழிற்சங்கங்களை நசுக்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாகும். முதலாளித்துவம் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு நூல்.
-
வியாபாரத்தில் வெற்றி: தொட்டதெல்லாம் பொன்னாகும் / Viyaparathil Vetri
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartசோம வள்ளியப்பன்
வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது.
வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன்.
வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.
-
பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம் / Parinamathin Uudaha Vazkaiyin Vilakam / Explaining Life Through Evolution
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartபுரோசாந்தா சக்கரவர்த்தி
தமிழில்: PSV குமாரசாமி
பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பதையும், உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காண்கின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில், பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், சுவாரசியமாகவும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார். அந்தப் புரிதல் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எந்த அளவு அவசியமாகியுள்ளது என்பதை அவர் இதில் வலியுறுத்துகிறார். சார்லஸ் டார்வினைப் பற்றி அவர் மேற்கொண்ட வித்தியாசமான விவாதங்கள், பரிணாம வளர்ச்சி குறித்த எண்ணங்களின் தோற்றம் போன்றவை இதில் விவரிக்கப்படுகின்றன.
நம்முடைய இன்றைய சூழலைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் இவையும் அடங்கும்: மரபணுத் திரிபு, இனம், பாலினம், மற்றும் பாலீர்ப்பு, வம்சாவளிச் சோதனைகளின் வரம்பெல்லைகள், உலகையே புரட்டிப் போட்டக் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்க் கிருமிகளின் பரிணாம வளர்ச்சி.
ஸ்டீபன் ஜே கோல்டு, ஜெர்ரி கோயின் போன்ற பரிணாம உயிரியலாளர்களின் புத்தகங்களின் வரிசையில், தற்காலத்திய தகவல்களையும் உள்ளடக்கி வந்துள்ள இப்புதிய நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, நம் அனைவரின் ஒட்டுமொத்த வருங்காலச் சவால்களை நாம் எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவியல் அறிவை வழங்குகின்ற ஓர் அடிப்படைக் கையேடாகவும் விளங்குகிறது.
-
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் ( Athika Aatralvaayntha Manithargalin 7 Palakkangal ) The 7 Habits of Highly Effective People
Rs. 4,990.00or 3 X Rs.1,663.33 withAdd to cartஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
-
மலையே நீங்கள்தாம்! / Malaiye Neegaltham! / The Mountain is You
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபிரியானா வீஸ்ட்
தமிழில்: PSV குமாரசாமி
இது சுய நாசவேலை பற்றிய புத்தகம். நாம் ஏன் அதைச் செய்கிறோம், எப்போது செய்கிறோம், அதைச் செய்வதை எப்படி நிறுத்துவது- நன்மைக்காக. ஒன்றிணைந்த ஆனால் முரண்பட்ட தேவைகள் சுய-நாசகார நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான் மாற்றத்திற்கான முயற்சிகளை நாங்கள் எதிர்க்கிறோம், பெரும்பாலும் அவை முற்றிலும் பயனற்றவை என்று உணரும் வரை.
ஆனால் நமது மிகவும் தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களிலிருந்து முக்கியமான நுண்ணறிவைப் பிரித்தெடுப்பதன் மூலமும், நமது மூளை மற்றும் உடல்களை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் உணர்ச்சி நுண்ணறிவை உருவாக்குவதன் மூலமும், செல்லுலார் மட்டத்தில் கடந்த கால அனுபவங்களை வெளியிடுவதன் மூலமும், நமது மிக உயர்ந்த எதிர்கால மனிதர்களாக செயல்பட கற்றுக்கொள்வதன் மூலமும்.
-
எனக்கும் ஒரு கனவு / I too Had A Dream
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartவர்கீஸ் குரியன்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ‘அமுல்’ மூலம், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியதுடன், தனிநபருக்குக் கிடைக்கும் பாலின் அளவை இருமடங்காக்கியவர் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் வர்கீஸ் குரியன். மேலாண்மையில் அவர் உருவாக்கிய வெற்றிச் சூத்திரங்கள் தலைமுறைகள் தாண்டித் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.
‘மேனேஜ்மெண்ட் குரு’ என்றே அவரைச் சொல்லலாம். தனியார் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவுப் பால் பண்ணைத் தொழிலில் புரட்சி செய்தவர். தான் எதிர்கொண்ட சவால்கள், பெற்ற வெற்றிகள் என்று தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் சுயசரிதை இது!
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
அஷேரா ( Ashera )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartசயந்தன்
அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.
அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.
நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப் போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?
-
காதல் மொழிகள் ஐந்து Kadhal Mozhigal Ainthu ( The Five Love Languages Tamil )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartகேரி சேப்மேன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!
-
உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் (Make Your Bed)
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartவில்லியம் எச் மெக்ராவன்
பி.எஸ்.வி.குமாரசாமி2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில், தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும், தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல், நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.
-
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் (Aangalin Poorveeham Sevvai Pengalin Poorveeham Sukkiran)
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartஜான் கிரே
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இந்த புத்தகத்தில், ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு ஒரு தனித்துவமான, நடைமுறை மற்றும் நிரூபிக்கப்பட்ட வழியை வழங்குகிறார். மோதல்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடைமுறை ஆலோசனைகள், துணைவர்களின் நடத்தையை எவ்வாறு விளக்குவது மற்றும் புதிய உறவுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து உணர்ச்சிகரமான “கடந்த காலத்திலிருந்து குப்பைகளை” தடுக்கும் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களுடன், இந்த புத்தகம் ஆழமான மற்றும் திருப்திகரமாக வளர விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
-
மொசாட்: இஸ்ரேலிய இரகசியப் புலனாய்வு அமைப்பின் வீரதீர சாகசங்கள் (Mossad Tamil)
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartமைக்கேல் பார்-ஜோகர் & நிசிம் நிஷால்
தமிழில்: PSV குமாரசாமி
இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட, மிகவும் ஆபத்தான, நம்புதற்கரிய, மயிர்க்கூச்செறிய வைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளை அப்படியே தத்ரூபமாக விவரிக்கின்ற இந்நூல், அவை தொடர்பாகத் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
கொடூரமான நாஜி கொலைகாரன் அடால்ஃப் ஐக்மேனின் கடத்தலில் தொடங்கி, சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஈரானிய அணுசக்தி அறிவியலறிஞர்களின் களையெடுப்புவரை, இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள, அசாத்தியமான உண்மைக் கதைகள், ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதிரடி சாகசக் கதைகளை விஞ்சி நிற்கின்றன. சர்வதேச உளவு, இரகசியப் புலனாய்வு, திரைமறைவுப் போர்கள் போன்றவை உங்களுக்குக் குதூகலமும் பிரமிப்பும் ஊட்டும் என்றால், இப்புத்தகம் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.
-
சஹீர் ( Zahir Tamil )
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartபாலோ கோயல்ஹோ
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டுவருகின்றபோதிலும், அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கிறார், அதே நேரத்தில், அந்த மர்மத்தால் அவர் அதிகமாக ஆட்கொள்ளப்படுகிறார். ‘யாரேனும் அவளைக் கடத்திச் சென்றுவிட்டனரா? அவள் மிரட்டப்பட்டாளா? அல்லது, என்னுடனான மணவாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு அவள் தானாகவே எங்கோ போய்விட்டாளா?’
பாலோ கொயலோ, படிப்போரின் மனங்களை வசீகரித்துக் கட்டிப் போடும் விதத்தில் கதை சொல்வதற்கான தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓர் உலகில் ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்தத் தன்னுடைய அசாதாரணமான, ஆழமான உள்நோக்கையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
-
ஆடு ஜீவிதம் ( Aadu Jeevitham )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartபென்யாமின்
தமிழில்: விலாசினி
- 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது.
தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.
மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.
-
இடக்கை / Idakkai
Rs. 2,490.00Original price was: Rs. 2,490.00.Rs. 2,290.00Current price is: Rs. 2,290.00.or 3 X Rs.763.33 withAdd to cartஎஸ்.ராமகிருஷ்ணன்
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது.
ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.
-
சின்னஞ்சிறு பழக்கங்கள் Sinnanjiru Palakkangal ( Atomic Habits )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஜேம்ஸ் கிளியர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கடுகளவு மாற்றங்களை, கற்பனைக்கெட்டா விளைவுகள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
-
செல்வந்தர் ஆகுங்கள் நீங்கள் தூங்கும்போது
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartபென் ஸ்வீட்லாண்ட்
தமிழில்: என். ஜெயராமன், கே.ஆர். ஸ்ரீநிவாசன்
இப் புத்தகத்தை முடிக்கும் முன்னரே நீங்கள் இவற்றை நிச்சயம் தெரிந்து கொள்வீர்கள்:
- யார் உங்களிடம் எதைச் சொல்லியிருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் உண்மையான இலக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது.
- உங்கள் சுய-ஆளுமை. உங்கள் உண்மையான ஆற்றல்கள், உங்களிடம் மறைந்திருக்கும் அளவற்ற திறமைகளுடன் எவ்வறு உங்களை இணைத்துக் கொள்வது.
- நீங்கள் விரும்புவதைச் சாதிக்க மற்றவர்கள் உங்களுக்கு உதவி அளிக்க விருப்பத்துடன் முன்வர வழைக்கும் சத்தியம், ஆழமான தன்னம்பிக்கை, உத்வேகம் மற்றும் நல்லெண்ணங்களை எவ்வாறு உங்கள் மனதில் நிறைத்துக் கொள்வது
- உங்கள் சொந்த வெற்றிகளைப் பறைசாற்றும் பிரகாசமான மனக் காட்சிகளை எவ்வாறு முழுமையாகத் தேர்ந்தெடுத்து உங்கள் மனதில் பதித்து தக்க வைத்துக் கொள்வது.
-
மிர்தாதின் புத்தகம் ( The Book of Mirdad )
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartமிகெய்ல் நைமி
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…
மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது!
பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய
தகுதி படைத்த புத்தகம்!
நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்
மட்டுமல்லர். எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே
மாபெரும் எழுத்தாளர்!
நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்.
எதுவுமே இதற்கு ஈடாகாது!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய
விலை மதிக்க முடியாத புத்தகம் இது!
—– ஓஷோ -
ஆக்கப்படுவதே வாழ்க்கை
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartபிரீத்தி ஷெனாய்
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா?
எண்பதுகளின் முற்பகுதியில் இந்தியாவின் இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது அங்கிதாவின் சில குறிப்பிடத்தக்க வருட வாழ்க்கையின் ஒரு பிடிப்புக் கணக்கு. அங்கிதா ஷர்மா உலகத்தை தன் காலடியில் வைத்திருக்கிறாள். அவள் இளமையாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், புத்திசாலியாக இருக்கிறாள், மேலும் பல நண்பர்கள் மற்றும் பையன்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் எம்பிஏவுக்கான முதன்மையான மேலாண்மைப் பள்ளியில் சேரவும் முடிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறாள். வாழ்க்கை கொடூரமாகவும் குளிராகவும் அவளுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததை பறித்துக்கொண்டது, அதையெல்லாம் திரும்பப் பெற அவள் இப்போது போராட வேண்டும்.
இது வளர்ந்து வரும், நம்பிக்கையின் சக்தி மற்றும் உறுதியும், அடக்க முடியாத ஆவியும் எப்படி விதி உங்கள் மீது வீசினாலும் அதை எப்படி வெல்ல முடியும் என்பது பற்றிய ஆழமான நகரும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவு. ஒரு கதை, அதன் மையத்தில் ஒரு காதல் கதை, இது நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகளையும், நமது நல்லறிவுக் கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, மேலும் ஒருவர் அதை உருவாக்குவதுதான் வாழ்க்கை என்று நம்பும்படி நம்மைத் தூண்டுகிறது.
-
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1) ( Pangusanthai: Adippadaikal )
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும். -
[Rare] அடுப்பு முதல் அணு உலை வரை / From the Bonfire to the Reactor / Aduppu Mudhal Anu Ulai Varai
Rs. 1,800.00or 3 X Rs.600.00 withAdd to cartஅலெக்ஸி கிரைலோவ்
தமிழில்: நா. தர்மராஜன்
“அடுப்பு முதல் அணு உலை வரை” ஒரு தூசி நிறைந்த வரலாற்று புத்தகம் அல்ல, ஆனால் ஒரு வெடிக்கும் கேம்ப்ஃபயர் கதை! இது ஒளிரும் தீப்பிழம்புகளிலிருந்து ஒளிரும் அணு கருக்கள் வரை உங்களை வழிநடத்துகிறது, இது மனிதர்கள் காலப்போக்கில் ஆற்றலை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. காற்றால் சக்கரங்கள் சுழல்கின்றன, நீராவி இயந்திரங்கள் பேரரசுகளை இயக்குகின்றன, அணுக்கள் ஒளி நகரங்களாகப் பிரிகின்றன என்பதை கற்பனை செய்து பாருங்கள். இது இயந்திரங்கள் ஒலிப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆற்றல் பாய்ச்சலுடனும் முழு சமூகமும் மாறுகிறது. அறிவியல், வரலாறு மற்றும் தனிப்பட்ட கதைகளின் இந்த கலவையானது உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது, இது நம்மிடம் உள்ள சக்தியையும் அது உருவாக்கக்கூடிய எதிர்காலத்தையும் சிந்திக்க வைக்கிறது. அற்புதமான மற்றும் வியக்கத்தக்க வசதியாக இருக்கும் ஒரு பயணத்திற்கு தயாராகுங்கள்!
-
இக்கிகய் ( Ikigai Tamil )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
தமிழில்: PSV குமாரசாமி
ஒருநீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள். -
நெடுங்குருதி (Nedunguruthi)
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartஎஸ்.ராமகிருஷ்ணன்
குற்றப்பரம்பரையாகக் கருதப்பட்ட வேம்பர்கள் தனது விடுதலைக்காகப் போராடிய கதையைச் சொல்கிறது நெடுங்குருதி. வேம்பலை என்ற புனைவில் உருவான கிராமத்தினை உருவாக்கி அதில் வரலாற்றின் உண்மைகளைக் கதையென உருமாற்றியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களைப் பதிவு செய்துள்ளது இந்நாவலின் தனிச்சிறப்பு.
-
தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு ( Thozharkal )
Rs. 8,910.00or 3 X Rs.2,970.00 withAdd to cartநூருத்தீன்
நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.
-
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் (Cashflow Quadrant)
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.
பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
• தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
-
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு / Thuppakihal Kirumihal Eghku
Rs. 3,890.00or 3 X Rs.1,296.67 withAdd to cartஜாரெட் டைமண்ட்
இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார்.
ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாகமாற்ற முடிந்தது எவ்வாறு? ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை? மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சூழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது.
மேலும் மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது.
-
கள்ளிக்காட்டு இதிகாசம் (Kallikattu Ithikasam)
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartவைரமுத்து
‘கவிஞர் வைரமுத்து படைத்த நூல்கள் பல, அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கள்ளிக்காட்டு இதிகாசம்’ —அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர், டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், 26 மார்ச் 2003
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத் தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
-
நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartடேல் கார்னகி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
மக்களைக் கையாள்வதில் உங்கள் திறமைகளை அதிகரித்துக்கொள்ள ஆழ்ந்த விருப்பமும் தெளிவான உறுதியும் உங்களிடமிருந்தால், இந்த நூல் உங்களுக்கானதுதான்.
‘மற்றவர் உங்கள்மீது ஆர்வம் காட்டி இரண்டு ஆண்டுகளில் பெறும் நண்பர்களை விட, மற்றவர்களிடம் நீங்கள் ஆர்வம் காட்டுவதன்மூலம் இரண்டே மாதங்களில் அதைவிட அதிகமான நண்பர்களைப் பெறமுடியும்”
மக்களைக் கையாள்வதில் உள்ள அடிப்படை உத்திகள் தொடங்கி அவர்கள் உங்களை விரும்புமாறு செய்வதற்கான பல்வேறு வழிகள் வரை, உங்கள் சிந்தனை வழிமுறைக்கு ஏற்ப மக்களை எப்படி வெற்றி கொள்வது. செயல்கள் நடப்பதற்கு உங்கள் திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது, ஒரு தலைவராய் இருப்பதற்கான வழிகள், வெறுப்பூட்டாமல் மக்களை மாற்றுவது, விரைவாக நண்பர்களை உருவாக்குவது ஆகியன பற்றிய உள்முகப் பார்வையை இந்த நூல் வழங்குகிறது.
காலம் கடந்தும் அதிக விற்பனை நூலாக விளங்கும் டேல் கார்னகியின் ஹௌ டு வின் ஃப்ரன்ட்ஸ் அன்ட் இன்ஃப்ளுயன்ஸ் பீப்பிள் என்ற இந்த நூல் இப்போது புகழோடும் வெற்றியோடும் இருக்கும் பலருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது. எப்பொழுதும் போல நவீன காலத்திலும் பொருந்துவதாக அமைந்த கொள்கைகளோடு. தொடர்ந்து மக்களின் வெற்றிப் பாதைக்கு இது உதவுகிறது.
-
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை (Adhisayangalai Nihazthum Adhikaalai)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartஹால் எல்ராட்
தமிழில்: PSV குமாரசாமி
நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி!
காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
-
ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartஜே. கே. ரோலிங்
தமிழில்: குமாரசாமி
அந்த கோடையில் டர்ஸ்லிகள் மிகவும் மோசமானவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருந்தனர். ஹாரிக்கு ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிச் செல்வதையே விரும்பினார். ஆனால் அவர் தனது பைகளை பேக் செய்யும் போது, ஹாரி பாட்டர் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பினால், பேரழிவு ஏற்படும் என்று கூறும் டோபி என்ற விசித்திரமான, இழிவான உயிரினத்திடமிருந்து ஒரு எச்சரிக்கையைப் பெறுகிறார். ஹாக்வார்ட்ஸில் ஹாரிஸின் இரண்டாம் ஆண்டில், புதிய வேதனைகளும் பயங்கரங்களும் எழுகின்றன. ஆனால் இவை ஒவ்வொன்றும் உண்மையான பிரச்சனை தொடங்கும் போது சிறிய எரிச்சல்களாகத் தோன்றுகின்றன, மேலும் யாரோ ஒருவர் – ஹாக்வார்ட்ஸ் மாணவர்களை கல்லாக மாற்றத் தொடங்குகிறார். அது டிராகோ மால்ஃபோயாக இருக்க முடியுமா? இது ஹாக்ரிடாக இருக்க முடியுமா, அதன் மர்மமான கடந்த காலம் இறுதியாக சொல்லப்பட்டதா? அல்லது ஹாக்வார்ட்ஸில் உள்ள அனைவரும் அதிகம் சந்தேகப்படும் ஒருவராக இருக்கலாம்… ஹாரி பாட்டர் தானே?
-
இரகசியம் ( Irahasiyam ) The Secret
Rs. 3,790.00or 3 X Rs.1,263.33 withAdd to cartரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.
-
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு / SindhithuParu, Selvandhan Aahu / Think And Grow Rich Tamil
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartநெப்போலியன் ஹில்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 2500க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
-
விமானத்தின் பயணத்திட்டம் (Flight Plan) Vimanathin Payanthittam
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartபிரையன் ட்ரேசி
பி.எஸ்.வி.குமாரசாமிவாழ்வில் பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கும், மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்குமான ஒரு திட்டத்தை வடிவமைப்பது எப்படி என்பதை ஒரு விமானப் பயண உருவகத்தின் மூலம் இந்நூல் விளக்குகிறது.
ஒரு விமானப் பயணத்தைப்போல, வெற்றியும், அதிர்ஷ்டத்தையோ, எதிர்பாராத வாய்ப்புகளையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாத சக்திகளையோ சார்ந்த ஒன்றல்ல என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பின்னாலிருந்து அடிக்கின்ற சாதகமான காற்று ஒரு விமானப் பயணத்தை விரைவுபடுத்தலாம்; முகத்திற்கு எதிராக அடிக்கின்ற எதிர்க்காற்று தாமதங்களை உருவாக்கலாம்; ஆனால், ஒரு விமானி, இந்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்பியல் விதிகளோடு ஒத்திசைவாகச் செயல்பட்டு, சென்றடையத் திட்டமிட்டுள்ள இடத்தை அடைகின்ற விதத்தில் தன்னுடைய விமானத்தைத் திறமையுடனும் இலகுவாகவும் கையாள்கிறார். வெற்றியும் அதைப் போன்றதுதான்.
-
உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி ( Ungal Aazhmanathin Atputha Sakthi )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartடாக்டர் ஜோஸப் மர்ஃபி
தமிழில்: மாலதி கிருஷ்ணா
உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.
-
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவின் மறுபக்கம்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartநாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.
நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
-
ஜென்: எளிமையாக வாழும் கலை (Zen: Elimaiyaaha Vaazhum Kazhai)
Rs. 3,790.00or 3 X Rs.1,263.33 withAdd to cartஷுன்மியோ மசுனோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள்.
புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்றாட வாழ்வில் எளிதில் செயல்படுத்தத்தக்க 100 பாடங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
உண்மையான மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கைவசப்படுத்துவதற்கான எளிய வழிகளை நீங்கள் இந்நூலில் கற்றுக் கொள்வீர்கள். எதிர்மறையான உணர்ச்சிகளைக் களைவதற்கு மூச்சை ஆழமாக வெளியே விடுவது எப்படி, உங்களுடைய சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உங்கள் வீடு எளிமையாக இருக்கும்படி அதை ஒழுங்கமைப்பது எப்படி, உங்கள் மனத்திற்கு ஒழுங்கைக் கொண்டு வருவதற்காக முதல் நாள் இரவிலேயே உங்கள் காலணிகளை வரிசையாக அடுக்கி வைப்பது எப்படி, ஓர் ஒற்றை மலரை நட்டு வைத்து அது வளர்வதை கவனித்து வருவது எப்படி, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எப்படி ஆகியவற்றையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
-
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?(Yaar azhuvar nee uyir thurakkaiyil?)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartராபின் ஷர்மா
தமிழில்: வானமாமலை
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் ?
மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா? வாழ்க்கை நழுவிக் கொண்டிருக்கும் வேகத்தின் காரணமாக மகிழ்வுடனும், அர்த்தத்துடனும், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சந்தோஷங்களுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் ”தனது பொக்கிஷத்தை விற்ற துறவி எழுதி ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாக்கிய ராபின் ஷர்மாவின் இந்த பிரத்யோக நூல் ஒரு கலங்கரை விளக்கம் போல் உங்களை ஓர் ஒளிர்விடும் புதிய வாழும் முறைக்கு அழைத்துச் செல்லும்.
-
செங்கிஸ்கான் / Ghenkhis Khan By S.L. Moorthi
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartஎஸ்.எல்.வி.மூர்த்தி
செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக – ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.
போர்களின்போது செங்கிஸ்கான் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியைத் தாண்டும். காட்டு மிராண்டி , ரத்தக் காட்டேரி என்று பல சரித்திர மேதைகளால் சித்தரிக்கப்பட்ட அதேவேளையில், மங்கோலியர்கள் செங்கிஸ்கானைத் தங்கள் தேசத்தந்தையாக, பொன்மனச்செம்மலாக, கடவுளாக இன்றும் மதிக்கிறார்கள்.
பெண்மையை மதித்த – சாதி வேற்றுமைகளை வெறுத்த இவர் கொண்டுவந்த சில நியமங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சி சிந்தனைகள் எப்படி இவர் மனதில் உருவாகின என்னும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.
எதிரிகளை துவம்சம் செய்ய அவர் காட்டியது ரத்தவெறி பிடித்த ஓநாய் முகத்தை. குடிமக்களுக்கு நல்லது செய்யக் காட்டியது மருள்விழி மானின் சாந்த சொரூபத்தை. இருதுருவங்களான ஓநாயும் மானும் ஒரே மனித நெஞ்சிற்குள் குடியிருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே! சாத்தியப்படுத்தியிருக்கிறாரே இந்த மனிதர்!
உலக வரலாறு சில பார்வைகள் (Glimpses of world history) என்ற தனது நூலில் நேருகூட வரலாற்றிலேயே மாபெரும் இராணுவத் தளபதி செங்கிஸ்கான்தான். அலெக்சாண்டரும் சீசரும் இவர் முன்னால் கத்துக்குட்டிகள் என்றாரே.
அது எதனால்?
பதில் காண படியுங்கள்!
-
மனிதனின் எண்ணங்கள் (As A Man Thinketh) (Manidhanin Ennangal)
Rs. 990.00or 3 X Rs.330.00 withAdd to cartஜேம்ஸ் ஆலன்/ James Allen
உங்கள் மனம் வெறுமையாகவும் சிந்தனையற்றதாகவும் இருக்கும் ஒரு நாள் முழுவதையும் உங்களால் நினைக்க முடியுமா? ஒவ்வொரு எண்ணமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது தெரியுமா?
எண்ணங்களின் ஆற்றலைப் பற்றிய நுண்ணறிவை வழங்குதல்; அவை நமது ஆரோக்கியம், உடல் மற்றும் சூழ்நிலைகளில் ஏற்படுத்தும் தாக்கம்; மற்றும் நாம் எப்படி நினைக்கிறோமோ அதுவாக மாறுகிறோம்; இந்த அழுத்தமான இலக்கியக் கட்டுரையில் நடைமுறை ஞானம் உள்ளது, இது நமது மறைந்திருக்கும் சக்திகளைக் கண்டறியவும், அறிவூட்டவும், நமக்கு உதவும்.