Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தமிழ் Books

Showing 121–180 of 621 results

  • Sale!
    Sex Manual flashbooks.lk
    Out of Stock

    செக்ஸ் மேனுவல் / Sex Manual

    Original price was: Rs. 990.00.Current price is: Rs. 890.00.
    or 3 X Rs.296.67 with

    மாஸ்டர்ஸ் & ஜான்சன்
    கல்பனாதாசன்

     

    பாலுறவு பற்றிய மாயைகளும் கவர்ச்சியும் போகப்போக மாறி, மனித வாழ்வில் அதுவும் ஒரு பகுதி இன்றியமையாத பகுதி என்னும் பெருமிதக் கண்ணோட்டம் வளரும்.

     

    சமுதாயம் பாலுறவு பற்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் சிந்திக்கும் நிலையால் பத்தாம்பசலித்தனங்கள் மறைந்து ஒழுக்க நெகிழ்ச்சியும் விடுதலை உணர்வும் மேம்படும். பழைய மூட நம்பிக்கைகளின் பாரத்தில் அழுந்துவது மாறும் ஆண் – பெண்ணுறவு குறித்த இருவேறு ஓரவஞ்சனை எண்ணங்கள் விலகும். ஆணும் பெண்ணும் சுதந்திரமாகத் தமது பாலுறவுக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். இத்தகைய பரிமாற்றமே முன்னேற்றத்தின் முக்கியமான படிக்கல், அதற்கான ஒரு சிறுமுயற்சியே இந்நூல்.

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவதற்கான 1% தீர்வு / Vazkaiyil Mahathana Vetri Peruvadhatkana 1% Theervu / The 1% Solution for Work and Life Tamil

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    டாம் கானல்லன்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தங்கப் பதக்கம் வென்றுள்ள ஒலிம்பிக் வீர்ர்கள், அமெரிக்க அதிரடிப் படையினர், விருதுகள் பெற்றுள்ள விற்பனையாளர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிற வெற்றியாளர்களிடையே காணப்படும் ஓர் ஒற்றுமை என்னவென்று தெரியுமா?

     

    அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 1 சதவீதத் தீர்வை அறிந்து வைத்துள்ளனர்.

     

    இப்போது அதை உங்களாலும் கற்றுக் கொள்ள முடியும்!

     

    அது எப்படிச் சாத்தியம் என்பதை மிகப் பிரபலமான பேச்சாளரும், விற்பனையில் சாதனைகள் படைத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளவருமான டாம் கானல்லன், இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

     

    வெற்றியாளர்கள் ஒருபோதும் பிறரைவிட 100 சதவீதம் மேலானவர்களாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களைவிட 1 சதவீதம் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் பந்தய வீரர், பதக்கம் எதுவும் பெறாத, நான்காவது இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிக வேகமாக ஓடி வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

     

    சின்னச் சின்ன விஷயங்கள் பலவற்றில் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களால் உங்கள் வாழ்க்கையில் எப்படி நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் எளிமையான முறையில் விளக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றைத் தொடர்ந்து கடைபிடித்துவர வேண்டும், அவ்வளவுதான்.

     

    நீங்கள் அப்படிச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் உங்களை பிரமிக்க வைக்கும் என்பது உறுதி!.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெண் இரவுகள் ( Ven Iravugal ) White Nights

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

    தமிழில்: எம். ஏ. சுசீலா

     

    தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குழந்தைகளின் மனநலம் / kulanthaikalin Mananalam

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    A. வினோத்குமார்

     
    சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
     
    குழந்தைகளை கையாள்வது எப்படி.. பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள்.அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போதுகுழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கவேண்டும்.
     
    தண்டிப்பது குழந்தையை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம்வருவார்கள். நன்றி;நக்கீரன்

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ராஜீவ் காந்தி: அதிகாரம் . அரசியல் . ஆட்சி

    Rs. 1,890.00
    or 3 X Rs.630.00 with

    சோம வள்ளியப்பன்

     

    இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கிடையாதுதான்.
     

    இருந்தாலும், எமர்ஜென்சி முதல் எம்.ஜி.ஆர் வரை; அசாம் முதல் ஆசிய விளையாட்டு வரை; போபால் முதல் பஞ்சாப் விவகாரம் வரை; அயோத்தி முதல் அமிதாப் பச்சன் வரை; பிரணாப் முகர்ஜி முதல் போஃபர்ஸ் வரை; சார்க் முதல் ஷாபானு வரை; வி.பி.சிங் முதல் விடுதலைப்புலிகள் வரை; கம்ப்யூட்டர் முதல் கட்சித்தாவல் தடைச்சட்டம் வரை; ஜெயவர்த்தனே முதல் ஜெயலலிதா வரை அவர் அரசியல் வாழ்வின் அத்தியாயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் படர்ந்தும், விரிந்தும் உள்ளன. இந்தியாவை அவர் முன்னால் நகர்த்திச் öன்றிருக்கிறார்; பின்னுக்கும் இழுத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமின்றி தோல்விகளிலிருந்தும் தடுமாற்றங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.
     

    ராஜீவ் காந்தியின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் அன்றைய இந்தியாவின் நிழல் எவ்வளவு அழுத்தமாக இன்றைய இந்தியாவின்மீது படிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் விரிவான, விறுவிறுப்பான படைப்பு.

    or 3 X Rs. 630.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    என் பெயர் பட்டேல் பை / En Peyar Pattel Pai / Life of Pi Tamil

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    யான் மார்ட்டெல்

    தமிழில்:  பொன். சின்னத்தம்பி முருகேசன்

     

    என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு?

     

    பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு?

     

    எல்லாமே மூழ்கிப் போச்சா?

     

    நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை.

     

    எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா?

     

    அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்?

     

    உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எதற்கும் பயன்படாதா?

     

    பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன?

     

    விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது?

     

    சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இச்சிகோ இச்சியே ( The Book of Ichigo Ichie Tamil )

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பேசும் அமைதி ( Stillness Speaks )

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    எக்கார்ட் டோலே
    ந. முரளிதரன்

     

    எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவை. இந்நூலில் நமக்கு உள்ளே இருக்கும் அமைதியினைத் தொடர்பு கொள்கிறபோது, மனநிலைக் கடந்து செல்கிறோம். அங்கே ஒர் ஆழமான அமைதி கிடைக்கிறது

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    மு. கோபி சரபோஜி

     

    வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவு உயர்த்தியும் கொண்டாடியும் எழுதுவது இன்னும் சுலபம். நேர் எதிர் முனைக்குச் சென்று, கட்டபொம்மன் சுதந்தரப் போராட்ட வீரரல்ல, அவர் ஒரு கொள்ளையர் என்று வாதிடுவதும் எளிது. இந்த இருவகைப் பதிவுகளும் நிறையவே காணக்கிடைக்கின்றன.
     

    மாறாக, நடுநிலையோடு கட்டபொம்மனை ஆராய்ந்து, தரவுகளின் அடிப்படையில் அவர் வாழ்வைத் தொகுத்து, கூர்மையான புரிதலோடும் ஆழ்ந்த வரலாற்றறிவோடும் அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை உருவாக்குவதுதான் அவருக்கும் வரலாறுக்கும் நாம் செய்யும் நியாயம்.
     

    கட்டபொம்மன் யார்? அவர் வாழ்ந்த காலம் எத்தகையது? பாளையக்காரர்களையும் ஆங்கிலேயர்களையும் கட்டபொம்மன் எவ்வாறு அணுகினார்? பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு என்ன? கட்டபொம்மனின் செயல்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? அவரை எப்படி மதிப்பிடுவது?
     

    ‘தமிழகப் பாளையங்களின் வரலாறு’ எனும் நூலை முன்னதாக எழுதிய கோபி சரபோஜியின் இந்நூல் கட்டபொம்மனின் வாழ்வையும் காலத்தையும் உள்ளது உள்ளவாறு பதிவு செய்கிறது.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரிஸ்க் எடு தலைவா! (Risk Edu Thalaiva)

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    சிபி கே. சாலமன்

     

    செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும்.

     

    அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம் மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக்கூடாது? இதுதான் பிரச்னை, இல்லையா? பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக் கொள்ள முடிந்தால்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம்.

     

    சின்னச் சின்ன சுவாரசியமான கதைகள், நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங் களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமே தேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சார்லஸ் டார்வின் / Charles Darwin Suyasarithai / The Autobiography of Charles Darwin

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சார்லஸ் டார்வின்

    தமிழில்: சுரேஷ்

     

    இங்கே தரப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை.

     

    எப்போதேனும் பிரசுரிக்கப்படலாம் என்கிற எண்ணத்தோடு ஒருபோதும் அவை எழுதப்படவில்லை.

     

    அவ்வாறிருக்கச் சாத்தியமில்லை எனப் பலருக்குத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கோ இது சாத்தியமான விஷயம் மட்டுமன்றி இயல்பானதும் கூட என்பது தெரிந்திருக்கும்.

     

    – ஃபிடல் டார்வின் (டார்வினின் மகன்)

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sony Niruvanam Valarntha Kathai Flashbookslk
    Out of Stock

    SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    அகியா மொரிடா

    இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.

    Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பிள்ளையார் சுழி

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    டெல்லி கனேஷ்

     

    ‘பிள்ளையார் சுழி’ நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல். உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது.

    கீழே கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல். ‘திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்… மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை… ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா… ‘டெல்லிகணேஷ்’ என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி…’ என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது. – திருப்பூர் கிருஷ்ணன்

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கி.மு கி.பி ( Ki Mu Ki Pi )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    மதன்

     

    மதன் ஒரு கில்லாடி.

     

    இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும் – இன்னும் பத்து நிமிஷங்களில் ‘டாபிகல் கார்ட்டூன் ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும்.

     

    உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல ‘ஏவாள்’தான் என்கிறார். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்’ என சந்தோஷப்பட வைக்கிறார்.

     

    இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் மூண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

     

    இன்னொரு சிறப்பு –

     

    இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Nandan Neela Kani Flashbookslk
    Out of Stock

    நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்

    Original price was: Rs. 690.00.Current price is: Rs. 550.00.
    or 3 X Rs.183.33 with

    ராஜீவ் திவாரி

    Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.

    Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.

    or 3 X Rs. 183.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கருப்பு சிவப்பு காவி

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    R.Rangaraj Pandey

     

    எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து?

     

    திருவள்ளுவர் ஹிந்துவா?

     

    கலப்புத் திருமணங்கள் சரியா?

     

    விளம்பரங்கள் – வெப் சீரிஸ் – ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா?

     

    பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா?

     

    சுப.வீயின் ஜாதி துவேஷம்! · திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு… · கறுப்பர் கூட்டம் – முருகன் சர்ச்சை… · அயோத்தி தீர்ப்பு சரியா தவறா? ·
    ஆதிக்க ஜாதி எது?

     

     

    தமிழகச் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள் தொடர்பான ரங்கராஜ் பாண்டேவின் தெளிவான, நிதானமான, அழுத்தமான பார்வைகள். ஒவ்வொரு இந்துவும் இந்துமதம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ( Kavalaiyai Viddolithu Magilchiyaga Vaazhvathu Eppadi ) How to Stop Worrying and Start Living

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.

     

    கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து: உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய…

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    ஜாக் கேன்ஃபீல்டு

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “ஜாக் கேன்ஃபீல்டு, வாழ்வில் அதிகமானவற்றைப் பெற மிகவும் துடிப்போடு இருப்பவர்களுக்கு, அவற்றை அடைவதற்குத் தேவையான அறிவையும், உள்நோக்குகளையும், புரிதலையும், உத்வேகத்தையும் கொடுக்கின்ற, தனது களத்தில் தலைசிறந்து விளங்குகின்ற ஒரு மேதை. வாழ்க்கையை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் இருக்கும் எவரொருவருக்கும் இப்புத்தகம் ஒரு மிகச் சிறந்த பரிசு.” –மைக்கேல் ஜெர்பர், உலகப் புகழ்பெற்ற ‘சிறுதொழில் அதிபர்களின் குரு

     

    “ஜாக் கேன்ஃபீல்டின் வெற்றிக் கொள்கைகள் எளிமையானவை, ஆனால் அவற்றைக் கொண்டு நீங்கள் அடையவிருக்கும் விளைவுகள் அபாரமானவையாக இருக்கும்!” — ஆன்டனி ராபின்ஸ், உலகப் புகழ்பெற்ற ஊக்குவிப்புப் பேச்சாளர்

     

    “இவ்வருடம் உங்களால் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே படிக்க முடியும் என்றால், அது உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகமாக இருக்கட்டும்,” —ஹார்வீ மெக்கே, ‘ஸ்விம் வித் த ஷார்க்ஸ் வித்தவுட் பீயிங் ஈட்டன் லைவ்’ புத்தகத்தின் ஆசிரியர்

     

    “ஜாக் கேன்ஃபீல்டின் படைப்புகளை நான் கவனமாகப் படித்து வருகிறேன். அவரது மிக அருமையான படைப்பான இப்புத்தகம் உங்கள் வாழ்வில் என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” –பேட் வில்லியம்ஸ் ‘ஆர்லேன்டோ மேஜிக்’ கூடைப்பந்து அணியின் மூத்தத் துணைத் தலைவர்

     

    “ஜாக் கேன்ஃபீல்டு, வெற்றிக்கான தனது வழிமுறைகளை அறிவுபூர்வமான, எளிதில் படிக்கக்கூடிய ஒரு புத்தகத்தின் வடிவில் கொடுத்துள்ளார். ஜாக்கின் போதனை மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக உள்ளது. இவ்வருடத்திற்கான சிறந்த பரிசு இது.” —கென்னத் பிளான்சார்டு ‘ஒரு நிமிட மேலாளர்’ புத்தகத்தின் இணையாசிரியர்

     

    “எனது அருமை நண்பரான ஜாக் கேன்ஃபீல்டு, இன்றைய உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர். நீங்கள் அவரோடு சிறிது நேரம் செலவிட்டு, அவரது யோசனைகளையும் உள்நோக்குகளையும் உட்கிரத்துக் கொண்டுவிட்டால், உங்களது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு நேர்மறையான மனிதராக மாறியிருப்பீர்கள்.” — பிரையன் டிரேசி ‘சிந்தனையை மாற்றுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்’ புத்தகத்தின் ஆசிரியர்

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்) ( Jingalin Aasaan)

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    இர்விங் கர்ஷ்மார்

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.

     

    பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.

     

    ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.

     

    இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Read more
  • Sale!
    orukku-ulaga-mannar_Flashbookslk
    Out of Stock

    உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டால்

    Original price was: Rs. 790.00.Current price is: Rs. 650.00.
    or 3 X Rs.216.67 with

    விமலநாத்

    இந்தியாவின் உருக்குத் தொழிலில் முதலிடத்தை, கடின உழைப்பாலும், திறமையாலும் அடைந்த லட்சுமி மிட்டல் குழுமம், நமது பாராட்டுக்குரியவர்கள். “இந்தியா ஏழை நாடு என்ற ஏளனம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா, நாராயண் மூர்த்தி போன்ற தொழில் வல்லுனர்களால் காணாமல் போய்விட்டது. லட்சுமி மிட்டலின் நிறுவனம் உலகின் மிகப் பெரிய உருக்கு இரும்பு உற்பத்தியாளராக மாற, அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது என்ற அளவுக்கு, இந்தோனேஷியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில், சொந்த உருக்கு இரும்பு நிறுவனங்களை வைத்திருக்கும், அந்த மாமனிதரின் எழுச்சி ஊட்டும் வரலாறு!

    or 3 X Rs. 216.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சிந்து சமவெளி நாகரிகம்: கண்டுபிடிக்கப்பட்ட கதை

    Rs. 690.00
    or 3 X Rs.230.00 with

    நிவேதிதா லூயிஸ்

     

    இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம். நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் மேலாண்மை, தொலைதூர தேசங்களுடனான வணிகத் தொடர்பு, ஆடை அணிகலன்கள், கலை என்று ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான உயிர்ப்புள்ள சாட்சி.
     

    சிந்து சமவெளி நாகரிகம் எப்படி, எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? அதில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தனர்? இந்த மாபெரும் பணியில் இந்தியர்களுக்கு என்ன பங்கு இருந்தது? பிரிட்டிஷாருக்குச் சமமாக அவர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆம் எனில் அவர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
     

    சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதையை எளிமையாகவும் விறுவிறுப்பான முறையிலும் இதில் பதிவு செய்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். முன்னதாக அவர் எழுதிய ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ மிகுந்த வரவேற்பு பெற்ற நூலாகும்.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தேடாதே (Thedathey)

    Rs. 890.00
    or 3 X Rs.296.67 with

    சுஜாதா

     

    ஜி.யெஸ், ஒரு ப்ரிலான்ஸ் போட்டோகிராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு நாள் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு கல்யாணம் வரை பேசிக்கொள்கிறார்கள். கல்யாணத்துக்குத் தடையாக அருணாவின் வாழ்க்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. உடனடியாக அதைக் களைந்து விட்டு விருவதாகச் சொல்லிச் செல்கிறாள் அருணா. ஜி.யெஸ் காத்திருக்கிறான். அருணா வராததால் அவளைத் தேடித் செல்கிறான். எதிர்பாராத அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது.

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    திறந்திடு சீஸேம்: அரிய பொக்கிஷங்களின் அபூர்வ வரலாறு! (Thiranthidu Sesame)

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    முகில்

     

    தேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

     

    அபூர்வமான விலை மதிப்பு மிக்கக் கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரசியமான விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். `திறந்திடு சீஸேம்’ என்று சொன்னவுடன் மந்திரக்குகை திறந்து ஏராளமான செல்வத்தை அள்ளிக் கொடுப்பதுபோல், இந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது!

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    எனது பயணம்: கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் ( Enathu Payanam ) My Journey

    Rs. 1,450.00
    or 3 X Rs.483.33 with

    ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

     

    கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்.

    or 3 X Rs. 483.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மாயாஜால விலங்குகளும் அவை ரகசியமாக உலவும் இடங்களும் / Mayajala Vilangugalum Avai Ragasiyamaga Ulavum Idangalum

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    J.K. Rowling

     

    பென்டாஸ்டிக் பிஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைன்ட் தெம் நூலானது இந்த நாட்டில் மந்திர ஜாலங்களை விரும்புவோர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.பஃப்ஸ்கீன் என்ன சாப்பிடுகிறார், ஏன் பாலை திரிய விடாமல் இருக்கவேண்டும் என்று இப்போது மக்கல்ஸும் அறியும் வாய்ப்பு உள்ளது.

     

    இந்தப் புத்தகத்தின் விற்பனையின் மூலம் எட்டும் வருமானத்திலிருந்து காமிக் ரிலீஃப் மற்றும் மந்திரவாதியின் ஆற்றலுக்கு மேலாக ஜாலம் செய்யும் ஜே.கே. ரவுலிங்கின் சர்வதேச தொண்டு நிறுவனமான லுமோஸ் ஆகியவற்றிற்குப் பங்களிக்கப்படும். உங்கள் பணத்தைச் செலவிட இது போதுமான காரணம் அல்ல என்று நீங்கள் நினைத்தால், ஒரு மாண்டிகோரால் நீங்கள் தாக்கப்படுவதை உங்களைக் கடந்து செல்லும் மந்திரவாதிகள் காணும்போது உங்களுக்கு உதவுவார்களா என்பது சந்தேகமே

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    எஸ். குருபாதம்

     

    குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது.

     

    குழந்தைகளிடம் எதிர்மறையாக எதையும் பேசாதிருப்பது, எதையும் செய்யாதே என்று ஆணையிடுவதற்குப் பதிலாக, இதைச் செய்தால் என்ன பயன்? இதைச் செய்தால் என்ன தீங்கு? என்று அவர்களுக்கு விளக்கிக் கூறுவது என பல விஷயங்களை நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

     

    குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த எவ்விதமாக அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்? என்பதையும் விளக்குகிறார். சிறப்பாக வளரக் கூடிய சூழல்களை ஏற்படுத்தினாலே போதும்; அந்தச் சூழல்களில் குழந்தைகள் தாமாகவே சிறப்பாக வளர்வார்கள் என்கிறார் நூலாசிரியர்.

     

    காலங்காலமாக அனுபவஅறிவு சார்ந்ததாக இருந்த குழந்தை வளர்ப்பை, அறிவியல் அடிப்படையில் மாற்றியமைக்க வழிகாட்டுகிறது இந்நூல்.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Read more
  • Bolivion Diary Flashbookslk
    Out of Stock

    சே குவாரா: பொலிவியன் டைரி ( Bolivian Diary Tamil )

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    சே குவேரா
    என்.ராமச்சந்திரன்

     

    சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். பொலிவியப் புரட்சியின் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்களும், நகரத்துப் போராளிகளுக்கு விடுத்த ஆணைகளும், பொலிவிய மக்களுக்கு அறிவிப்புகளும், போராட்டத்தில் சே குவாரா சந்தித்தவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இடங்களும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்( Genghis Khanum Naveena Ulagin Uruvaakkamum ) Genghis Khan and the Making of Modern World

    Rs. 3,090.00
    or 3 X Rs.1,030.00 with

    ஜேக் வெதர்ஃபோர்ட்

     

    400 ஆண்டுகளில் ரோமானியப் பேரரசு பெற்ற வெற்றியை 25 ஆண்டுகளில் பெற்றுவிட்ட மங்கோலியப் பேரரசின் சரிதத்தை, செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றினூடே சித்தரிக்கின்றது இந்நூல். நவீன உலக வடிவமைப்புக்கான மூன்று புத்தாக்கங்களாக இருந்துள்ள அச்சிடும் கருவி, வெடிமருந்து, திசைமானி இம்மூன்றும் மங்கோலியப் பேரரசு மூலம் கிடைத்தவை. அரோப்பாவின் கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் மங்கோலியப் படையெடுப்புகள் என்னும் அய்ரோப்பியரின் வாதத்தை நிராகரிக்கிறார் ஜேக் வெதர்ஃபோர்ட்.

    or 3 X Rs. 1,030.00 with Koko Koko
    Read more
  • சே குவேரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள் Flashbookslk
    Out of Stock

    கியூப புரட்சிப் போர் குறிப்புகள் ( Cuba Puratchip Por Kurippugal )

    Rs. 2,890.00
    or 3 X Rs.963.33 with

    சே குவேரா

     

    சே குவேரா எனும் பெயர், சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில், அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் அவன்.

    வரலாற்றின் போக்கினில் பற்பல புரட்சியாளர்களின் பெயர்கள் தேய்ந்துபோக, சே குவேரா எனும் பெயர் மட்டும் இன்னும் இன்னுமென ஒளிரக் காரணம் என்ன? உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை அடுத்து தத்துவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும், திரைப்பட மேதைகளையும் கவர்ந்தவர்களில் அவனே தலையானவன்.

    ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைமைத்துவப் போராளியாக அதிகம் வாசித்தவன்; படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன்; தனது அனுபவங்களை, தனது சிந்தனைகளை அதிகமும் எழுத்தில் பதிவுசெய்தவன் உலக வரலாற்றில் சே குவேராதான்.

    or 3 X Rs. 963.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கருங்குயில் (Karunguyil)

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    ஷோபாசக்தி

     

     

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • viyathaku vinthai manam flashbooks.lk
    Out of Stock

    வியத்தகு விந்தை மனம் – வெளிக்கொணர்வோம் அறிய திறம்

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    அல் கொரன்

    தமிழில்: எஸ். அப்துல் லத்திப்

     

    உலகளாவிய விற்பனையில் முதலிடம்

     

    விந்தைகள் புரிவது உங்கள் மனமே!

    உங்கள் மனத்தின் திறக்கப்படாத பொக்கிஷத்தை திறந்துவைக்கும் சாவி இதோ உங்கள் கரங்களில்… உங்கள் வாழ்வையும் வருங்காலத்தையும் வளமாக்கும் அதிசய ரகசியம். நீங்கள் ஒரு மந்திரவாதி ஆகவேண்டியதில்லை. மனத்தின் சக்தியைப் பெறக்கட்டளையிடும் “மூலை”யாகச் செயல்பட வேண்டாம். உங்களுடைய உள்மனத்தில் பொதிந்திருக்கும் இயற்கையான காந்த சக்தியை இந்த நூல்காட்டும் வழிறையில் மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் மகிமை புரியலாம். வணிகமென்றாலும், சமுதாய வாழ்க்கை என்றாலும் வெற்றிக்கு வழிகாட்டி மனவலிமையும் கூட்டும்.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இலங்கையில் சிங்களவர்: இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    பக்தவத்சல பாரதி

     

    இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது.

     

    அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக-பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது.

     

    இதை, சிங்கள மொழி, சிறீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை, திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார்.

     

    சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு (டிஎன்ஏ) ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம் என்றும், அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் என்றும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன.

     

    இதற்காக சிங்களவர்கள் பௌத்தர்களாயினும் பத்தினித் தெய்யோ (கண்ணகி), கதரகமத் தெய்யோ (முருகன்) உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த் தெய்வங்களை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதில் தொடங்கி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவையும் திராவிட உறவுமுறையை அவர்கள் பின்பற்றும் விதத்தையும் விவரிக்கின்றார்.

     

    மேலும் சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசினாலும் தமிழ் இலக்கண மரபைப் பின்பற்றும் விதத்தையும் அவர்களின் இயல், இசை, நாடகத்தில் திராவிடத்தின் தாக்கம் பெற்றுள்ளதையும் பாரதி தமது களப்பணி அனுபவத்தின் மூலம் விவரிப்பது இனப்பகையூட்டப்பட்டச் சூழலில் புதிய வெளிச்சத்தைத் தருவதாய் இருக்கின்றது.

     

    இதன் மூலம் இனவேறுபாடுகளுக்கு அப்பால் அறிவார்ந்த புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். இவையே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மாணவர்களுக்கான தமிழ்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    என். சொக்கன்

     

    திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்மீன் என்று ஏன் அழைக்கிறார்கள்? இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு?
     

    திருவாசகம் படித்தால் நாம் அழகாக மாறிவிடுவோமா? வள்ளல் என்று யாரை அழைக்கலாம்? அறநூல்கள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? வரலாற்றையும் கதையையும் ஒன்று கலந்து எழுதலாமா?
     

    சுவையான எடுத்துக்காட்டுகளோடு கதைப்போக்கில் அமைந்திருக்கும் இந்நூல் தமிழ் இலக்கணத்தை இனிக்க, இனிக்க அறிமுகப்படுத்துகிறது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சிந்தனைகள் / Meditations Tamil

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    மார்க்கஸ் அரேலியஸ்

     

    வாழ்க்கை மற்றும் மரணத்தின் இயல்பை ஆராய்வதில் இருந்து இந்தப் பிரபஞ்சம் இயங்கும் முறையை அறிந்துகொள்வது வரை சிந்தனைகள் என்னும் இப்புத்தகம் தலைசிறந்த தத்துவ இலக்கியமாக இருப்பதுடன், பண்டைய ஞானத்தின் பொக்கிஷப் பெட்டியாக தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வாசகர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • motorcyclen diarygal -Flashbookslk
    Out of Stock

    மோட்டார் சைக்கிள் டைரிகள் (The Motorcycle Diaries)

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    சே குவேரா

     

    நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.

    அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம். பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரம் விளைந்தது ( How the Steel Was Tempered )

    Rs. 2,640.00
    or 3 X Rs.880.00 with

    நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி

    தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன்

     

    மானுட விடுதலைக்காக அர்ப்பணிப்பான வாழ்வையும் அதன் அர்த்தங்களையும் விவரிக்கும் இந்நாவலின் பாத்திரங்கள் உண்மையானவை. 1915ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டுவரை இந்நூலாசிரியரும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும் தியாகங்களையும் கண்முன் விரித்துச்செல்கிறது. புரட்சிகர அரசியல் போராட்ட உணர்வுகளையும், வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் இந்நாவலில் இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிநதேயம் போன்றவை குறித்தும் செறிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

     

    புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கியால் பெரிதும் போற்றிப் புகழப் பட்ட இந்நாவல் முதன்முதலாக 1934ம் ஆண்டு வெளியானது. உலகெங்கும் 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளியானதென்பது இந்நூல் மகத்துவத்தை உணர்த்தும்.

    or 3 X Rs. 880.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    போராட்டங்களின் கதை / Poratangalin Kadhai

    Rs. 2,050.00
    or 3 X Rs.683.33 with

    அ.முத்துக்கிருஷ்ணன்

     

    போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர்.

     

    ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான்.

     

    காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது.

     

    வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!

    or 3 X Rs. 683.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    செந்தமிழ் நாடும் பண்பும்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    இரா. நாகசாமி

     

    தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும் தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும் இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் எதிரெதிரானவையா?
     

    வரலாற்றை அவ்வப்போது மீள்பார்வை பார்க்கவேண்டியது அவசியம். புதிய ஆய்வுகளின் ஒளியில், புதிய புரிதல்களின் அடிப்படையில் திரிபுகளைச் சரி செய்வதும் இடைவெளிகளை நிரப்பவதும் முக்கியம். அவ்வாறு செய்வது கடந்த காலத்துக்கு மட்டுமல்ல எதிர்காலத்துக்கும் நல்லது.
     

    அந்த மகத்தான பணியைத்தான் தன் வாழ்நாள் எல்லாம் செய்து வந்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி. சங்ககாலம் தொடங்கி சமீபத்திய காலம்வரை பல்வேறு தலைப்புகளில் ‘தினமலர்’ இதழில் அவர் எழுதி வந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வரலாறு, இலக்கியம், இலக்கணம், தொன்மம், பண்பாடு, மதம், மொழி, சமூகம் என்று பல விரிவான தளங்களில் பயணம் செய்வதோடு அவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப் புதிய தரிசனங்களையும் அளிக்கிறது இந்நூல்

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரகசியக் கடிதங்கள் ( Ragasiyak Kadithangal ) The Secret Letters

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: வானமாமலை

     

    உங்கள் வாழ்க்கையை மிகச் சிறந்த வாழ்க்கையாக அமைத்திடும், தனது பொக்கிஷத்தை விற்ற துறவியின், கதைத்திரட்டுகள்.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    திறம்பட்ட மேடைப்பேச்சாளராக எளிய மற்றும் விரைவான வழி / The Quick And Easy Way To Effective Speaking Tamil

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    டேல் கார்னகி 

     

    திறம்பட்ட மேடைப்பேச்சிற்கான அடிப்படைத் தேவைகளிலிருந்து கருத்துப் பரிமாற்றம் மற்றும் சொற்பொழிவாற்றுவது என்னும் கலையில் வல்லமை பெறுவது என்பது வரைக்கும் இப்புத்தகம், நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமாக பேசுவதற்கான உரிமையைப் பெறவும், உங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் கருத்துக்களை முறையாக அடுக்கி வைப்பது மற்றும் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் உரையாடுவது ஆகியவற்றிற்குமான மிகச் சிறந்த வழிகாட்டியாகும் மேலும் மக்களை உங்கள் பேச்சின் வாயிலாக இணங்க வைப்பதும், ஆயத்தமற்ற முறையில் சொற்பொழிவாற்றுவதும் எப்படி என்பதைப் பற்றியும் விவாதிக்கிறது

     

    திறம்பட்ட மேடைப் பேச்சாளராக எளிய மற்றும் விரைவான வழி என்னும் டேல் கார்னகி அவர்களின் காலத்தை வென்று மிளிரும் இப்புத்தகம் லட்சக்கணக்கானவர்களுக்கு மேடைகளில் திறம்படவும், நம்பிக்கையுடனும் பேச உறுதுணை புரிந்துள்ளது மேடைகளில் ஆற்றலுடன் அற்புதமாக உரையாற்றும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் எண்ணங்களை சுலபமாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் பல்லாயிரக் கணக்கானோர்க்கு, இன்னும், இப்புத்தகம் உற்சாகமளிப்பதாகத் தொடர்ந்து விளங்குகிறது

     

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.

    அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Nam valvu Flashbookslk
    Out of Stock

    நல் வாழ்வு நம் கையில்  

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    லூயிஸ் எல். ஹே

     

    சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது,

    “”உன்னையே நீ அறி என்பது தான். “”உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்குள்ளேயே உள்ளன என்பதைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. இதற்கான எளிய பயிற்சிகளைத் தான் இந்நூல் அருமையாக விவரிக்கிறது. மனவலிமையை வளர்த்துக் கொண்டே சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்தே முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்ட பெண்மணியான லூயிஸ் எல்.ஹே, உலக மக்களின் உயர்வுக்கான பல சூட்சுமங்களை இதில் விவரித்துள்ளார்.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விலங்குப் பண்ணை ( The Animal Farm )

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    ஜார்ஜ் ஆர்வெல்

     

    லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம் (Master Your Time, Master Your Life)

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    பிரையன் ட்ரேசி

     

    வாழ்க்கையை மாற்றும் நுண்ணறிவுகளைக் கண்டறியவும். ஒவ்வொரு பணிக்கும் சரியான நேரத்தைக் கண்டறிந்து, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் உங்கள் நேரத்தை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதை அறிக. உற்பத்தித்திறன் மற்றும் ட்ரேசியின் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியை வரைந்து,

    இந்தப் புத்தகம் உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிக இலக்குகளை முன்னெப்போதையும் விட வேகமாகவும் எளிதாகவும் அடைய எளிய வழிமுறைகளை வழங்குகிறது. பிரையன் ட்ரேசி ஒரு புகழ்பெற்ற சுய-உதவி பேச்சாளர், 70 புத்தகங்களின் சிறந்த விற்பனையான எழுத்தாளர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுடன் ஆலோசனை மற்றும் உரையாடலில் விரிவான அனுபவமுள்ள மனித திறன் நிபுணர்.

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இருட்கனி : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

    Rs. 5,990.00
    or 3 X Rs.1,996.67 with

    ஜெயமோகன்

     

    இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.

    இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.

    or 3 X Rs. 1,996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )

    Rs. 3,690.00
    or 3 X Rs.1,230.00 with

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

    or 3 X Rs. 1,230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள்

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    டேவிட்கோ

     
    உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் .
     
    ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST, DISTRIBUTOR, DEALER, SUB-DEALER, RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
     
    இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .நெட்வொர்க் மார்க்கெட்டிங் – என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    செர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்

    தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

     

    1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!

     

    இதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.

     

    இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இடி அமீன் ( Idi Amin )

    Rs. 1,380.00
    or 3 X Rs.460.00 with

    ச. ந. கண்ணன்

     

    இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்.

     

    இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும், உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்-களை மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார். இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்தது. அவர் காலத்தில், அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே.

     

    இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே அழிந்துபோயிருந்தது. ஹிட்லர், முஸோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை உகாண்டாவின் வரலாறோடு சேர்த்தே வழங்கிஇருக்கிறார் ச.ந. கண்ணன்.

    or 3 X Rs. 460.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வட்டியும் முதலும் / Vattiyum Mudhalum

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ராஜு முருகன்

     

    பசியில் தொடங்கியதாலோ என்னவோ… ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்!

     

    தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.

     

    புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே… பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை.

     

    இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட – கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!…….

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    என் வாழ்க்கை பயணம் (En Vaazhkai Payanam) My Life in Full

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    இந்திரா கே. நூயி

     

    இந்திரா கே. நூயியின் “மை லைஃப் இன் ஃபுல்” என்பது உலகின் மிகவும் போற்றப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரின் குறிப்பிடத்தக்க பயணத்தை விவரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவுக் குறிப்பு ஆகும்.

     

    இந்தியாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒரு மூலோபாய சிந்தனையாளர் மற்றும் நிர்வாகியாக உயர்ந்தது வரை, அவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் நேரடிக் காட்சியை வாசகர்களுக்கு வழங்குகிறது, அவரது தலைமைத்துவ தத்துவம், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வழியில் அவர் செய்த தியாகங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். . கருணை, மனக்கசப்பு மற்றும் நல்ல நகைச்சுவை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட, “மை லைஃப் இன் ஃபுல்” என்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு அசாதாரண வாழ்க்கையின் அழுத்தமான பிரதிபலிப்பு மற்றும் வெற்றிக்கான வரைபடமாகும்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • aangal-yen-ketpathillai-pengalaal-saalai-varaipadam-padikkamudivathillai_Flashbookslk
    Out of Stock

    ஆண்கள் ஏன் கேட்பதில்லை பெண்களால் சாலை வரைபடம் படிக்க முடிவதில்லை ( Aangal En Ketpathillai Pengalal Salai Varaipadam padikka Mudivathillai )

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    ஆலன் பார்பரா பீஸ்

    அதிகாலை 2 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு தங்கள் கணவன், அல்லது மனைவியிடம் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் என்று கெஞ்சும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

    ஒரு பெண் ஏன் ஆணைப் போல் இருப்பதில்லை என்று ஆண்கள் இன்றும் புரிந்து கொள்ளாததாலும், தங்களைப் போலவே ஆண்களும் நடந்து கொள்ள வேணடும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதாலும்தான் உறவுகள் தோற்கின்றன. எதிர்பாலின‌த்தைப் புரிந்து உதவுவது மட்டுமின்றி, உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். நீங்கள் இருவரும், இணைந்து அதிக சந்தோஷமாக ஆரோக்கியான, ஒத்திசைந்த வாழ்வை வாழலாம்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    திருவள்ளுவர்

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ஜெயமோகன்

     

    திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
     

    இந்து, சைவர், வைணவர், பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர், முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள் அவருக்கு.
     

    சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும் இன்னும் சிலவற்றில் மயிலாப்பூராகவும் இருக்கிறது. அவர் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவிவிட்டோமா என்றால் அதுவுமில்லை. இருந்தும் பல்கலைக்கழகம், சிலை, கோட்டம், கோயில், விருது, பீடம், மாநாடு அனைத்தும் அமையப் பெற்றவராக வள்ளுவர் திகழ்கிறார். தமிழின் முகமும் தமிழரின் இதயமும் அவரே.
     

    வள்ளுவரையும் குறளையும் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஆய்வுகளையும், பொருட்படுத்தத்தக்க அத்தனை விவாதங்களையும், அவற்றிலிருந்து உருதிரண்ட அனைத்துக் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் இந்நூல் திறன்பட தொகுத்து அளிக்கிறது. பரிமேலழகர், உ.வே.சா, மறைமலையடிகள், அயோத்திதாசர், மு. வரதராசனார், வையாபுரிப் பிள்ளை, கிருபானந்த வாரியார், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜி.யு. போப், எல்லீஸ், கால்டுவெல் என்று வள்ளுவர் மீதும் குறள் மீதும் அக்கறை கொண்டிருந்த அனைவரும் இந்நூலில் கவனம் பெறுகிறார்கள்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

    Rs. 1,850.00
    or 3 X Rs.616.67 with

    ஜான் பெர்க்கின்ஸ்

    தமிழில்: இரா. முருகவேள்

     

    “நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம் பெற்றிருந்த நூல்.”

     

    சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல்.

     

    “…மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன். அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன்.” –நிக்கோலஸ் லெசார்ட், திகார்டியன்

     

    உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.

    or 3 X Rs. 616.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    நாகரிகங்களின் மோதல் ( Naharihangalin Modhal ) The Clash of Civilizations

    Original price was: Rs. 3,560.00.Current price is: Rs. 3,390.00.
    or 3 X Rs.1,130.00 with

    சாமுவேல் பி.ஹண்டிங்டன்

      தமிழில்:  க.பூரணச்சந்திரன்

     

    சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு.

     

    உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது.

     

    இன்றைய உலகம் முதலாளியம், கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல, மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது; முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல், கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது.

     

    அணுஆயுதப் பெருக்கம், புலம்பெயர்தல், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை, கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில், உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது; பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.

     

    ஜப்பானியம், சீனியம், இந்துத்துவம், இஸ்லாமியம், மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம், யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு, இன்று ஆப்கான் முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது. இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது.

    or 3 X Rs. 1,130.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மக்கள் தொடர்புத் திறன்கள் தொகுப்பு / Makkal Thodarfu Thirangal Thohuppu

    Original price was: Rs. 6,380.00.Current price is: Rs. 5,790.00.

    லெஸ் ஜிப்லின், லீல் லவுன்டெஸ்

     

    மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி

     

    இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார்.

     

    ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

     

    பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள்

     

    வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?

     

    வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.

     

    பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.

     

    இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:

     

    • எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
    • எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
    • உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
    • உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
    • உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
    or 3 X Rs. 1,763.33 with Koko Koko
    Read more
  • Prabhala Kolai Vazhakkugal Flashbookslk
    Out of Stock

    பிரபல கொலை வழக்குகள்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    எஸ். பி. சொக்கலிங்கம்

     

    எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?

     

    இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.

     

    ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?

     

    தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?

     

    சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.

     

    க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் S.P.சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Kamaththilirundhu Kadavulukku Flashbookslk
    Out of Stock

    காமத்திலிருந்து கடவுளுக்கு ( Kamathilirunthu Kadavulukku )

    Rs. 4,390.00
    or 3 X Rs.1,463.33 with

    ஓஷோ

     

    சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். | கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது: இந்த பிரபஞ்சத்திலிலேயே அவரைவிட மிகப்பெரிய பாவி இருக்க முடியாது…”

    or 3 X Rs. 1,463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆதவன் சிறுகதைகள்

    Rs. 4,990.00
    or 3 X Rs.1,663.33 with

    ஆதவன்

     

    ‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை – அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப்போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை. ’இண்டர்வியூ’, ’அப்பர் பெர்த்’ போன்ற அவருடைய பக்குவம் மிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்திரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன்.’

    – அசோகமித்திரன்
     

    ‘நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்.’

    – இந்திரா பார்த்தசாரதி
     

    ‘தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை ஆதவன் எழுதியிருக்கிறார். இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்… இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.’

    – திருப்பூர் கிருஷ்ணன்

    or 3 X Rs. 1,663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வியாபாரத்தில் வெற்றி: தொட்டதெல்லாம் பொன்னாகும் / Viyaparathil Vetri

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    சோம வள்ளியப்பன்

     

    வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது.

     

    வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன்.

     

    வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more