Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: வணிகம் & மேலாண்மை
Showing 1–60 of 93 results
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்
Rs. 690.00Rs. 550.00or 3 X Rs.183.33 withAdd to cartராஜீவ் திவாரி
Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.
Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.
-
வியாபாரத்தில் வெற்றி: தொட்டதெல்லாம் பொன்னாகும் / Viyaparathil Vetri
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartசோம வள்ளியப்பன்
வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது.
வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன்.
வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.
-
இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
Rs. 990.00Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartகனினிகா மிஸ்ரா
கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும்.
-
எனக்கும் ஒரு கனவு / I too Had A Dream
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartவர்கீஸ் குரியன்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ‘அமுல்’ மூலம், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியதுடன், தனிநபருக்குக் கிடைக்கும் பாலின் அளவை இருமடங்காக்கியவர் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் வர்கீஸ் குரியன். மேலாண்மையில் அவர் உருவாக்கிய வெற்றிச் சூத்திரங்கள் தலைமுறைகள் தாண்டித் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.
‘மேனேஜ்மெண்ட் குரு’ என்றே அவரைச் சொல்லலாம். தனியார் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவுப் பால் பண்ணைத் தொழிலில் புரட்சி செய்தவர். தான் எதிர்கொண்ட சவால்கள், பெற்ற வெற்றிகள் என்று தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் சுயசரிதை இது!
-
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள் ( Yen Enra Kelviyil Irunthu Thuvakkungal ) Start with Why
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
- குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
- தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
- அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
- தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .
இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
-
இழக்காதே! / Izhakkathey!
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withAdd to cartசெல்லமுத்து குப்புசாமி
பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட.
அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.
-
சிதறா கவனக் குவிப்பு (Hyperfocus) (Sidharaa Kavanak Kuvippu)
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartகிறிஸ் பெய்லி
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனை உயர்த்துகிறது? நாம் நம்முடைய வேலையை எளிதாக்கிக் கொள்ளாமல் அதைக் கடினமாக்கிக் கொள்வது எப்படி நாம் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பதைச் சாத்தியமாக்குகிறது? நாம் களைப்பாக இருக்கும்போது எப்படி நம்மால் படைப்பாற்றல்மிக்க வேலைகளைச் செய்ய முடிகிறது? ஒன்றின்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்க இதற்கு முன்பு ஒருபோதும் நாம் இவ்வளவு திணறியதில்லை.
-
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
-
பெருங்கனவு காணத் துணியுங்கள்! ( Perung Kanavu Kaana Thuniyungal )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஅங்குர் வாரிக்கூ
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது.
நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது.
இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும்.
-
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் (Koodeesvararkalin Sindhanai irahasiyangal)
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartடி. ஹார்வ் எக்கர்
தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
#1 நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல் & யுஎஸ்ஏ டுடே பத்திரிகைகள் தொகுக்கின்ற விற்பனைப் பட்டியல்களில் முதலிடம்
“உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம்பி இதை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்நூலைப் படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் ஏற்படாது” –டோனி ராபின்ஸ், ஊக்குவிப்புப் பேச்சாளர்
“காலாகாலத்திற்கும் நிற்கும் விதத்தில் நம்முடைய செல்வ மாளிகையைக் கட்டியெழுப்புவதற்கான வரைபடத்தையும் கருவிகளையும் ஹார்வ் எக்கர் இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.” –டெனிஸ் வெயிட்லி, நூலாசிரியர்
“எளிதாகக் கடைபிடிக்க முடிகின்ற விதத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான பைபிள் இது. ஹார்வ் எக்கர், இந்நூலில், பணம் சேர்ப்பது தொடர்பான அனைத்து மாயைகளையும் உடைத்து நொறுக்கி, கோடீஸ்வரர்களின் இரகசியங்களை சாதாரண மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். அவற்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:” –ஜில் லுப்லின், நூலாசிரியர்
“இன்று உலகிலுள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஹார்வ் எக்கரும் ஒருவர். அவருடைய உத்திகள் உங்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.” –மார்க் விக்டர் ஹான்சன், நூலாசிரியர்
“ஹார்வ் எக்கர் செல்வத்திற்கான இராஜபாட்டையை எளிதாக அமைக்கும் கலையில் வல்லவர். அவருடைய ஆற்றல்மிக்கக் கோட்பாடுகள் இந்த அருமையான நூல் வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.” –மார்சி சைமாஃப், நூலாசிரியர்
-
மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartலெஸ் ஜிப்லின்
இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார். ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
-
கருமமே கண்ணாக! (Karumame Kannaaha!)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartகால் நியூபோர்ட்
தமிழில்: PSV குமாரசாமி
“ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஏன் முக்கியம் என்பதைத் தக்கக் காரணங்களுடன் எடுத்துரைக்கின்ற இந்நூல், உடனடியாக நடைமுறையில் செயல்படுத்தத்தக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறது.”
–ஆடம் எம். கிரான்ட், ‘ஒரிஜினல்ஸ்’ நூலின் ஆசிரியர்‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது.
ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் – இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்!
கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்.
-
கியோஸாகியின் பிசினஸ் ( Kiyosakiyin Business Bundle )
Rs. 4,580.00Rs. 4,000.00Read moreராபர்ட் கியோஸாகி
பிசினஸ் ஸ்கூல்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாய்ப்புகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,690.00or 3 X Rs.1,563.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
-
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
-
தே ஒரு இலையின் வரலாறு/ A Brief History of Tea
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartராய் மோக்ஷாம்உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா?
-
கஸ்டமர் சைக்காலஜி / Customer Psychology
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார் பிரபல மார்க்கெட்டிங், நிர்வாகவியல் குரு சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. அடிப்படையான சில உளவியல் பாடங்கள் கற்றுக்கொண்டால் போதும். கஸ்டமர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என்கிறார் இவர். மக்கள் ஏன், எப்படி, எதை வாங்குகிறார்கள் என்பதை ஆராயும் துறைக்கு கஸ்டமர் சைக்காலஜி என்று பெயர். மக்களுக்கு ஏற்றவாறு மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பதன்முலம், அவர்கள் ஆழ்மனதிலுள்ள அறிவாற்றல் அவர்கள் தேர்வுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்வதன்முலம், அவர்கள் எதை வாங்குவார்கள், எதை வாங்கமாட்டார்கள் என்பதை நம்மால் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடியும். இந்நூல் கஸ்டமர் சைக்காலஜியின் கச்சிதமாக சாரத்தைக் உங்களுக்கு வழங்குகிறது. இதைப் படித்த பிறகு கஸ்டமர்களை பற்றிய புரிதல் இப்போது இருப்பதைக் காட்டிலும் நிச்சயம் உங்களுக்கு அதிகரித்திருக்கும். அதன்மூலம் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக வெற்றிகளை நீங்கள் குவிக்கவும் முடியும். -
தொட்டதெல்லாம் பொன்னாகும்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreசோம. வள்ளியப்பன்
சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற, வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன் விரிவும் செறிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.
-
TCS: ஒரு வெற்றிக் கதை
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreஎஸ். ராமதுரை
கி. இராமன்ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள்.
வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.
-
கடன்: (அள்ள அள்ளப் பணம் 9 ) / Kadan (Alla Alla Panam 9)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசோம. வள்ளியப்பன்
கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும்.
செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
-
Amazon ஒரு வெற்றிக் கதை ( Amazon Oru Vettrik Kadhai )
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreஎஸ்.எல்.வி.மூர்த்தி
அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான்.
அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட. அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி?
அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி? எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி? அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
-
காஞ்சித் தாரகை
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஅனுஷா வெங்கடேஷ்
சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
-
விளம்பர வேட்டை ( Vilambara Vettai )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 with -
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
என் சீஸை நகர்த்தியது யார்?
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.
-
நாட்டுக் கணக்கு ( Naattu Kanakku )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.
தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது?
அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது?
அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?
சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது?
அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா?
எனில் யாரிடமிருந்து?
அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா?
அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா?
ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்?இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
-
பைப்லைனில் பணம்: உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாகப் பணம் பாய்ந்தோடி வந்து கொண்டேயிருக்க
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreபர்க் ஹெட்ஜஸ்
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.
பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன – வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..
-
No. 1 சேல்ஸ்மேன் ( No. 1 Salesman Tamil )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreசோம. வள்ளியப்பன்
பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன்.
நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்.
டார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும். அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.
-
செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்! ( Selvapurikkana Viraivup Paathai )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஎம்ஜே டிமார்க்கோ
தமிழில்: PSV குமாரசாமி
“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!
-
SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅகியா மொரிடா
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreடேவிட்கோ
உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் .
ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST, DISTRIBUTOR, DEALER, SUB-DEALER, RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .நெட்வொர்க் மார்க்கெட்டிங் – என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும். -
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4) ( Pangusanthai: Portfolio Muthaleedugal )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
-
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6) ( Mutual Fund )
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம. வள்ளியப்பன்
எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.
-
வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil
Rs. 820.00or 3 X Rs.273.33 withRead moreஎன்.சொக்கன்
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்.
அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை.
அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு.
இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.
-
தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு ( Thalaimai Panbu Pattriya Meyyarivu )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreராபின் ஷர்மா
தமிழில்: அ. ராஜமோகன்
“இந்த ஆண்டின் மிகச் சிறந்த வியாபார நுணுக்கம் நிறைந்த நூல்.” -ப்ராஃபிட் மேகஸின்
‘கருத்துக்கள் செறிந்தது, படிக்க எளிதானது, பெரிதும் பயனுள்ளது. நாங்கள் எங்கள் மேலாண்மை தொடர்பான அணியினருக்கும் அங்காடியை நடத்துபவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளோம். அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது.” – டேவிட் ப்ளூம், தலைமை அதிகாரி, ஷாப்பர்ஸ் டிரக் மார்ட்
“இந்த நூல் மெய்யறிவும் பொது அறிவும் நிறைந்த ஒரு தங்கச் சுரங்கம்”- டீன் லேரி டாப் – ரிச்சர்டு ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ், யூனிவர்சிட்டி ஆஃப் ஒன்டாரியோ
“வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறந்த வழியைக் காட்டி பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் நூல்.” -ஜிம் ஓ நீல், டைரக்டர் ஆஃப் ஆப்பரேஷன்ஸ், டிஸ்ட்ரிக்ட் சேல்ஸ் டிவிஷன், லண்டன் லைஃப்
‘தன்னுடைய பொக்கிஷத்தை விற்ற துறவி என்னும் நூலை உருவாக்கியவரிடமிருந்து வந்துள்ள தலைமைப் பண்பு குறித்த மெய்யறிவு என்னும் நூல் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்கிறது.” –இன்வெஸ்ட்மெண்ட் எக்ஸிகியூட்டிவ்
“துறவி வியாபாரத்தில் சமநிலையுடன் இருப்பது பற்றி வழிகாட்டுகிறார். அவருடைய நூல்கள் பலனளிக்கின்றன.” –டொரான்டோ ஸ்டார்
-
கவலை வேண்டாம் ( Don’t Worry )
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: PSV குமாரசாமி
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.
இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும். -
வளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( Valamaana Vazhkaiku Network Marketing )
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreடேவிட் கோ
தலைவர்கள் என்பவர்கள் தமது வினியோகஸ்தர்களுக்கு உதவ வேண்டும். எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதைக் காண்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பின்னிருந்து உதவி செய்து மறுபடியும் கண்காணிக்கவும் வேண்டும். ஒருவேளை அப்போதும் வினியோகஸ்தர்களால் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால் தலைவர்கள் முன்னுதாரணமாக இருந்து தாமே விற்பனை செய்து, ஸ்பான்சர் ஆகியவற்றை வினியோகஸ்தர்களுக்காகச் செய்யவேண்டும். அதுவே தலைமை என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்வது!
இதன் பொருள் என்னவென்றால் உங்களுக்கு விளைவுகள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கவேண்டும் என்றால் அப்போது அவற்றைக் கண்காணிக்கவேண்டும். யாரோ ஒருவரை வியாபாரத்தில் ஸ்பான்சர் செய்துவிட்டு ஒருநாள் கரைசேர்வார் என்று எதிபார்க்கக்கூடாது. நீங்கள் இந்தப் புதிய வினியோகஸ்தர்களுக்கு வியாபாரத்தை வளர்க்க உதவி செய்யவில்லை என்றால் அவர்கள் நிச்சயமாகக் கரை சேரவே மாட்டார்கள்
-
சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரயன் டிரேசி
தமிழில்: வானமாமலை
விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்
“உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்.”
— டாம் ஹாப்கின்ஸ், ஆசிரியர், ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்
எந்தச் சந்தையிலும் உங்களின் விற்னையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்.
நீங்கள் முன்னைவிட அதிகமான, துரிதமான மற்றும் எளிதான விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள் வழிமுறைகள் மற்றும் உத்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்.
-
நேரத்தை வெற்றி கொள் (Nerathai Vetrikol)
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreமேச்சன் மெக்டொனால்டு
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“வாசகர்கள் தங்கள் நேரத்தை ஒழுங்கமைத்து, செயல்பாடுகளை அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி, வேலை, வீடு மற்றும் சமுதாயம் என்று தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் சிறந்த பலன்களைப் பெற நேரத்தை வெற்றி கொள்’ என்னும் இப்புத்தகம் பெரிதும் உதவும்.” -எட்வர்டு ஜி. டாய்ஷ்லான்டர் நிர்வாகத் துணைத் தலைவர் நார்த் ஸ்டார் ரிசோர்ஸ் குரூப்
“உங்கள் குழுவும், உங்கள் வாடிக்கையாளர்களும் மேலும் சாதனைகளைப் புரிய அவர்களுக்குப் பயிற்சி அளிக்க எளிய, திறமையான வழிமுறைகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், இப்புத்தகம் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று.” – லூ கசாரா நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி தி சுசாரா கிளினிக் எல்எல்சி
‘வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி வருகின்றன. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஒரு சிலரே அவ்வாய்ப்புகளைக் கொண்டு என்ன செய்வது என்பதை அறிந்துள்ளனர். வாய்ப்புகளை நீங்கள் கண்டுகொள்வதற்கும் அவற்றைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இப்புத்தகம் உங்களுக்குப் பயிற்சியளிக்கிறது.” – சேத் ஏ. ராடோவ், மூத்த உதவித் தலைவர் & சேர்மன்ஸ் கிளப் உறுப்பினர்
-
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Pirammandamaana Sindhanaiyin Maayajaalam)
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreடேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
-
தள்ளு : மோட்டிவேஷன்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.?
ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும். செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.
-
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
• உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
• மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?
பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
• அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!
-
ஆண்ட்ரு கார்னகி ( Andrew Carnegie )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
-
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1) ( Pangusanthai: Adippadaikal )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும். -
மக்களைக் கையாளும் கலை ( Makkalaik Kaiyaalum Kazhai )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் ஃபாக்ஸ்
தமிழில்: குமாரசாமி
- NEW YORK TIMES BESTSELLER!
மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதுதான் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான ரகசியம். பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் நாம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறோம், ஆனால் மனித உறவுகளின் உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சோதனை மற்றும் பிழை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். சோதனை வேதனையானது மற்றும் பிழை விலை உயர்ந்தது.
மக்கள் கருவிகள்: உறவுகளை கட்டியெழுப்புவதற்கான 54 உத்திகள், மகிழ்ச்சியை உருவாக்குதல் மற்றும் செழிப்பைத் தழுவுதல், சிறந்த, மகிழ்ச்சியான, அதிக வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நேரம் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைத் தேடும் பிஸியான மக்களுக்கு இது சரியான ஆதாரமாகும்.
ஒவ்வொரு பக்கத்திலும் நடைமுறை ஞானம்
-
செல்வம் சேர்க்கும் வழிகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreG. S. சிவகுமார்
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது?
* நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? .
* செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
* எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா?
* தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?
* கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?
யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
-
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் (Cashflow Quadrant)
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.
பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
• தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
-
நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (You Can Sell)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
நீங்கள் ஒரு வெற்றிகரமான விற்பனை நிபுணரை உருவாக்கும் நேர-சோதனை கொள்கைகளை நீங்கள் விற்கலாம். பயன்படுத்தப்படும் வார்த்தை கொள்கைகள்’ மற்றும் தந்திரோபாயங்கள் அல்ல. ஏனெனில் தந்திரோபாயங்கள் கையாளக்கூடியவை, அதேசமயம் கொள்கைகள் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெற்றிபெற நீங்கள் ‘வர்த்தகத்தின் தந்திரங்களை’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் பல முறை கேட்கிறீர்கள். இது உண்மையல்ல. இந்தப் புத்தகம் வித்தியாசமானது!
-
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு / SindhithuParu, Selvandhan Aahu / Think And Grow Rich Tamil
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreநெப்போலியன் ஹில்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 2500க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
-
விற்பனைத் திறமையில் அற்புதம் (vitpanai thiramaiyil atpudham)
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreலெஸ் கிப்ளின்
இந்த புத்தகம் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றி பேசுகிறது- மக்களுக்கு எப்படி விற்க வேண்டும். தயாரிப்பு அறிவு எளிதில் பெறப்படும் டிஜிட்டல் யுகத்தில், விற்பனையைப் பெற மக்களைக் கையாளும் கலை, முன்பை விட மிகவும் பொருத்தமானது. மக்களுடனான திறன் மற்றும் மக்களைக் கையாளும் கலை போன்ற மில்லியன் நகல் பெஸ்ட்செல்லர்களின் ஆசிரியரான லெஸ் கிப்லின், உங்கள் விற்பனையை விண்ணில் உயர்த்துவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறார். இந்தப் புத்தகம் உங்களுக்கு:
* விற்பனையில் வெற்றி
* விற்பனையைத் திறப்பதில் மாஸ்டர் ஆக
* ஒத்துக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
* விற்பனையை நடத்துவதற்கான நுட்பங்களைப் பெறுங்கள்
* அருமையான விற்பனை விளக்கத்தை உருவாக்குங்கள்
* விற்பனையை மூடுங்கள். -
போரின் கலை ( Porin Kalai ) Art of War
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஸுன் ஸு
“இந்த பண்டைய சீன உரை இன்னும் உலகெங்கிலும் உள்ள இராணுவ மற்றும் வணிகப் பள்ளிகளால் பயன்படுத்தப்படுகிறது … போர் கலை என்பது நம் காலத்தின் அத்தியாவசிய மூலோபாய வழிகாட்டியாகும்.” – டைம்-Time
“ஆர்வமுள்ள தலைவர்களுக்காக எழுதப்பட்ட மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான புத்தகம்.” – டொராண்டோ சன் டைம்ஸ் – Toronto Sun Times
“இராணுவக் கோட்பாடு இரண்டு வடிவங்களில் வருகிறது. முதலாவது போரின் தன்மை மற்றும் அரசியலுடனான அதன் தொடர்பைப் புரிந்துகொள்ளும் முயற்சி … இரண்டாவது மற்றும் மிகவும் பரவலான வடிவம் ‘அதை எப்படி செய்வது’ என்ற பிரிவில் வருகிறது … பெரும்பாலான இராணுவ வல்லுநர்கள் ஸுன் ஸுவின் தி ஆர்ட் ஆஃப் வார் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக் கொள்வார்கள், முன்னாள் பட்டியலில். ” – வாஷிங்டன் டைம்ஸ்-Washington Times
-
பிசினஸ் ஸ்கூல்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: க. சுப்பிரமணியன்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
-
டாடா: நிலையான செல்வம் ( The Creation of Wealth )
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஆர். எம். லாலா
தமிழில்: B.R. மகாதேவன்
அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது!
1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது.தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன காலகட்டத்திலும் மேலான நிலைக்குக் கொண்டு செல்ல ஜம்சேட்ஜி மூன்று திட்டங்களை முன் வைத்தார். ஒன்று, எஃகு உருக்காலைத் திட்டம். இரண்டு, நீர் மின்சாரத் திட்டம். மூன்றாவது, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகம்.
அந்தக் கனவுகளை அடியொற்றியே டாடா குழுமம் வளர்ந்து வந்திருப்பதன் மூலம் நிறுவனருக்கு நியாயமான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது. ஆனால், அந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. அரசுக் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலும், தாராளமயமாக்கல் நடைபெற்ற காலகட்டத்திலும் டாடா குழுமம் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவற்றை எப்படி வென்று காட்டியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
டாடா குழுமத்தின் வெற்றி என்பது வர்த்தக, தொழில்துறை சார்ந்த ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் தெளிவாக ஆவணப்படுத்துகிறது. பணியாளர் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், உயர் கல்வி மையங்கள், கலை, கலாசார மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு என பலவகைகளில் டாடா குழுமம் ஆற்றிவரும் தேச நலச் செயல்திட்டங்கள் பற்றியும் அழுத்தமாகச் சித்திரிக்கிறது.
-
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreதீபக் பஜாஜ்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை.
வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கருவிகளும் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம். எந்தவொரு பொருளையும் எந்தவொரு வருவாய்த் திட்டத்தையும் கொண்ட எந்தவொரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்திலும் மேல்மட்ட சாதனையாளர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் இந்த வழிகாட்டி நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
-
வெற்றி நிச்சயம்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஷாட் ஹெம்ஸ்டெட்டர் பி.எச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் ‘நிரல்களை’ மாற்றுவதற்கும், உங்கள் இலக்குகளை அடைவதற்கும், ‘சுய உதவி’யிலிருந்து ‘சுயத்தை’ எடுப்பதற்கும் நம்பமுடியாத தீர்வு. ஊக்கமளிக்கும் நடத்தை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியின் அடிப்படையில், அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டாக்டர் ஷாட் ஹெல்ம்ஸ்டெட்டர், தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறும் நபர்களுக்கு – நாளுக்கு நாள் – மற்றும் வெற்றிபெறாத நபர்களுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறார்.
ஷாட் ஹெல்ம்ஸ்டெட்டர் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் மூன்று அடிப்படை திருப்புமுனை கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். மூன்று கருத்துக்களும் இணைந்தால், அவை வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். சுய உதவியில் இருந்து சுயத்தை வெளியேற்றும் எளிதான பின்பற்றக்கூடிய திட்டத்தில், எடையைக் குறைக்கவும் மேம்படுத்தவும் இந்த முன்னேற்றக் கருத்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை வாசகருக்கு டாக்டர் ஹெல்ம்ஸ்டெட்டர் காட்டுகிறார். உடல் தகுதி, வருமானத்தை அதிகரிப்பது, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்குதல், குடும்பம் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஊக்கமளிக்கும் ஆராய்ச்சித் துறையில் இருந்து மிக முக்கியமான மற்றும் புதுப்பித்த கண்டுபிடிப்புகளை வழங்குதல், டாக்டர் ஹெல்ம்ஸ்டெட்டர் உடனடியாக வாசகருக்கு பழைய மனதிட்டங்களிலிருந்து விடுபடவும், கவனம் செலுத்தவும், இலக்குகளை அமைக்கவும் மற்றும் கண்காணிக்கவும், உந்துதலாக இருக்கவும், வழியில் உதவி செய்யவும் உதவுகிறது.