Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: உற்பத்தித்திறன்

Showing 1–9 of 17 results

  • அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

    Rs. 4,390.00

    ஸ்டீபன் ஆர். கவி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.

    Read more
  • இக்கிகய்

    Rs. 2,790.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

     

    ஒருநீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

     

    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
    உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை.  அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து,  உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
    இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

    Read more
  • இச்சிகோ இச்சியே

    Rs. 2,590.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

    Read more
  • இலக்குகள்!

    Rs. 2,790.00

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

     

    இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.

     

    எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

     

    இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.

    Read more
  • உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

    Rs. 2,790.00

    ஜான் சி. மேக்ஸ்வெல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை!

     

    ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

    Read more
  • எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்

    Rs. 990.00

    இலந்தை சு. இராமசாமி

     

    99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.

     

    எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.

     

    சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.

     

    எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.

     

    இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.

     

    தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?

    Read more
  • Free Shipping
    In Stock

    ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்

    Rs. 2,590.00

    சைமன் சினெக்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    ஏன்‌ வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும்‌ தட்டிக்‌ கொண்டிருக்கிறாள்‌?

     

    ஏன்‌ ஒரு சில நிறுவனங்கள்‌ மட்டும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மாபெரும்‌ சாதனைகளை நிகழ்த்திக்‌ கொண்டே இருக்கின்றன?

     

    ஏனெனில்‌, தனிப்பட்ட வாழ்க்கையிலும்‌ சரி, தொழில்வாழ்க்கையிலும்‌ சரி, நீங்கள்‌ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பது முக்கியமல்ல. ஏன்‌ அதைச்‌ செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பதுதான்‌ முக்கியம்‌.

     

    ஸ்டீவ்‌ ஜாப்ஸ்‌, ரைட்‌ சகோதரர்கள்‌, மார்ட்டின்‌ லூதர்‌ கிங்‌ ஜூனியர்‌, ஆகியோருக்கு இடையே ஓர்‌ ஒற்றுமை இருந்தது. அவர்கள்‌ அனைவரும்‌ ஏன்‌ என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்‌.

     

    பிறரை ஊக்குவிக்க வேண்டும்‌ என்று விரும்புகின்றவர்களுக்கும்‌ சரியான தலைவர்களை அடையாளம்‌ காண ஆசைப்படுகின்றவர்களுக்கும்‌ இந்நூல்‌ உறுதுணையாக இருக்கும்‌.

    Add to cart
  • கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

    Rs. 1,890.00

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.

     

    கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.

    Read more
  • சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி

    Rs. 2,990.00

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.

    அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop