Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- You cannot add "சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்" to the cart because the product is out of stock.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள்
Rs. 1,290.00
டேவிட்கோ
உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் .
ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST, DISTRIBUTOR, DEALER, SUB-DEALER, RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .நெட்வொர்க் மார்க்கெட்டிங் – என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள்
Author: Davidko / டேவிட்கோ
Translation:
Language: Tamil
Binding: Paperback
Pages: 191
Weight:
Published Year: 2010
Publisher: Kannadasan Padhipagam
ISBN: 9788184024388
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் ( Aazhamaana Kelvikal Arivarntha bathilkal )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஸ்டீபன் ஹாக்கிங்
தமிழில்: PSV குமாரசாமி
உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
-
காலை எழுந்தவுடன் தவளை! ( Kaazhai Elunthavudan Thavalai ) Eat That Frog
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் தவளைகளை சாப்பிடுகிறார்கள்.
ஒரு பழைய பழமொழி உள்ளது, நீங்கள் தினமும் காலையில் முதல் முறையாக ஒரு தவளை சாப்பிட்டால், நீங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய மிக மோசமான காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு கிடைக்கும். டிரேசியைப் பொறுத்தவரை, தவளை சாப்பிடுவது உங்கள் சவாலான பணியைச் சமாளிப்பதற்கான ஒரு உருவகமாகும் – ஆனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை எழுந்தவுடன் தவளை! ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது, இதனால் இந்த முக்கியமான பணிகளை நீங்கள் கச்சிதமாக செய்து அவற்றை திறமையாகவும் செயல் விளைவுடையதாகவும் நிறைவேற்ற முடியும்.
பிரையன் ட்ரேசி பயனுள்ள நேர மேலாண்மைக்கு என்ன முக்கியம் என்பதை துள்ளியமாக கூறுகிறார்: முடிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு. வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தகம், இன்று உங்கள் முக்கியமான பணிகளைச் செய்வதை உறுதி செய்யும்!
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ( Kavalaiyai Viddolithu Magilchiyaga Vaazhvathu Eppadi ) How to Stop Worrying and Start Living
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.
கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.
-
விடை: வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பது எப்படி என்ற கேள்விக்கான விடை ( The Answer )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் பீஸ் & பார்பரா பீஸ்
நாகலட்சுமி சண்முகம்
வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதை எவ்வாறு கண்டுபிடிப்பது, பின்னர் அதைச் சாத்தியமாக்குங்கள்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் ஆகியோரின் இந்த அற்புதமான புத்தகம், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்தே தொடங்குகிறது என்பதைக் காட்டும்.
விடை:
– மாற்றத்தை நோக்கி முதல் படி எடுத்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுகிறது
– உங்கள் வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது
– மூளையின் வெற்றியை இயக்கும் திறன் பற்றிய புதிய அறிவியல் ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது
– ஆலனும் பார்பராவும் முரண்பாடுகளை சமாளிப்பதற்கான தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
பேரழிவு தாக்கியபோது, உத்வேகம் தரும் குருக்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸின் வாழ்க்கையை தோல்வியை இறுதி வெற்றியாக மாற்றுவது எப்படி என்பதை அறிய அவர்கள் அறிவியலின் பக்கம் திரும்பினர். மூளையின் புதிய ஆய்வுகளை அவர்கள் கண்டுபிடித்தனர், இது உங்கள் மனநிலையை நீங்கள் எவ்வாறு மறுபரிசீலனை செய்யலாம் என்பதைக் காட்டுகிறது, இது வாய்ப்புகளைப் பார்க்க உதவுகிறது, சிரமங்களை அல்ல. பதிலில், பீஸ்கள் தங்கள் அனுபவங்களை நேர்மையுடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் விரும்புகின்றபடி மாற்றுவது என்பதை உங்களுக்குக் காட்டுகின்றனர்.
எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால் ஆனால் மாற்றுவதற்கான முதல் படி செய்ய உதவி தேவைப்பட்டால் பதில் எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்:
– நீங்களே சரியான கேள்விகளைக் கேளுங்கள்
– வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்ற நம்பிக்கையைப் பெறுங்கள்
– உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்து வாழ்க்கையில் ஒரு உண்மையான போக்கை நிறுவுங்கள்
பதிலில், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்து தொடங்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
-
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள் ( Yen Enra Kelviyil Irunthu Thuvakkungal ) Start with Why
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
மார்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் ( Marketing Panja Maapathahangal )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும்.
மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் தினம் இதனைத் தவறாகச் செய்து கையைச் சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மார்க்கெட்டிங்கில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மிக அழகாக நமக்கு விளக்குகிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. சாதாரணத் தவறுகள் அல்ல இவை. மாபாதகங்கள். இந்தப் பாதகச் செயல்களைச் செய்வோருக்கு மீளாத பாவம் வந்துசேரும். இந்தத் தவறுகளால் அவர்களுடைய நிறுவனங்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படலாம்.
ஏன், நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். இந்தப் பஞ்ச மாபாதகங்களைப் பற்றிப் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது. குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கமுடியும் என்று சொல்லலாம். சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் முந்தைய நூல்களான ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’, ‘விளம்பர மாயாஜாலம்’ ஆகியவை இந்த நிர்வாகத் துறைகளில் தமிழில் வெளிவந்த முதல் நூல்கள். பல எம்.பி.ஏ கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களாக உள்ளன. இந்த நூலும் அதே வரிசையில் வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்வோருக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.
-
பைப்லைனில் பணம்: உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாகப் பணம் பாய்ந்தோடி வந்து கொண்டேயிருக்க
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreபர்க் ஹெட்ஜஸ்
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.
பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன – வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..