Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
காதலில் இருந்து திருமணம் வரை ( Kadhalil Irunthu Thirumanam Varai )
Rs. 990.00
சோம வள்ளியப்பன்
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.
காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே
Out of stock
Notify me when stock available
About the Author
BHEL, வேர்ல்பூல், பெப்சி, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர். BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் செய்பவர். அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், உட்பட தமிழில் 50 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில. ஆனந்தவிகடன், குமுதம், நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 19 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் தலைமை நிர்வாகியாக இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து வருகிறார்.
Book Specifications
Title: காதலில் இருந்து திருமணம் வரை
Author: Soma Valliappan / சோம வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages:
Weight:
Published Year: 2008
Publisher: Kizhakku
ISBN:
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
மனதெனும் குரங்கை வெல்லுங்கள் / Manathenum Kurangai Vellungal / Master The Mind Monkey Tamil
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஆனந்த் பாட்கர்
மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல, மனதின் ஆழமான, மிக ஆழமான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் புத்தகம் மனதெனும் குரங்கை வெல்லுங்கள். (MASTER THE MIND MONKEY). எளிதில் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை அது வெளிக் கொணரும் முறை ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் நிலைகளிலும் அவைகளை எளிதாக கடைப்படிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நேரடியான மற்றும் தெளிவான உரையாடல் நடை நீங்கள் கடைமுடிவான அறிவாற்றல் எய்துவதை எளிதாக்குகிறது. ஓட்டத்தில் ஒரு இனிமையான மென்மை சொற்களில் இதயத்தைத் தொடும் எளிமை மேலும் வழக்கு சொற்களை விடுத்த வாக்கியங்களில் ஓர் புத்துணர்வு வீசுகிறது.
நீங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க அருமையான உதாரணங்களும் நகைச்சுவை கலந்த உபகதைகளும் புத்தகம் முழுவதிலும் நிறைந்துள்ளன. நம்மைப் பாராட்டி சக்தியூட்டுகையில் பொய்ம்மையையும், மனச்சோம்பலையும் பழி சுமத்துவதையும் ஒப்பய பொறுப்பன்மையையும் ஓர் இரக்கபாவத்துடன் சாடுகிறது.
நம்மை மாற்றும் ஒர் தாக்கமுள்ள அனுபவமாக நம்முடைய அறிவாற்றலுக்கும் அதனால் எய்தக்கூடிய நிச்சயமான பலன்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.
-
நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreடேல் கார்னகி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
மக்களைக் கையாள்வதில் உங்கள் திறமைகளை அதிகரித்துக்கொள்ள ஆழ்ந்த விருப்பமும் தெளிவான உறுதியும் உங்களிடமிருந்தால், இந்த நூல் உங்களுக்கானதுதான்.
‘மற்றவர் உங்கள்மீது ஆர்வம் காட்டி இரண்டு ஆண்டுகளில் பெறும் நண்பர்களை விட, மற்றவர்களிடம் நீங்கள் ஆர்வம் காட்டுவதன்மூலம் இரண்டே மாதங்களில் அதைவிட அதிகமான நண்பர்களைப் பெறமுடியும்”
மக்களைக் கையாள்வதில் உள்ள அடிப்படை உத்திகள் தொடங்கி அவர்கள் உங்களை விரும்புமாறு செய்வதற்கான பல்வேறு வழிகள் வரை, உங்கள் சிந்தனை வழிமுறைக்கு ஏற்ப மக்களை எப்படி வெற்றி கொள்வது. செயல்கள் நடப்பதற்கு உங்கள் திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது, ஒரு தலைவராய் இருப்பதற்கான வழிகள், வெறுப்பூட்டாமல் மக்களை மாற்றுவது, விரைவாக நண்பர்களை உருவாக்குவது ஆகியன பற்றிய உள்முகப் பார்வையை இந்த நூல் வழங்குகிறது.
காலம் கடந்தும் அதிக விற்பனை நூலாக விளங்கும் டேல் கார்னகியின் ஹௌ டு வின் ஃப்ரன்ட்ஸ் அன்ட் இன்ஃப்ளுயன்ஸ் பீப்பிள் என்ற இந்த நூல் இப்போது புகழோடும் வெற்றியோடும் இருக்கும் பலருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது. எப்பொழுதும் போல நவீன காலத்திலும் பொருந்துவதாக அமைந்த கொள்கைகளோடு. தொடர்ந்து மக்களின் வெற்றிப் பாதைக்கு இது உதவுகிறது.
-
சின்னஞ்சிறு பழக்கங்கள் Sinnanjiru Palakkangal ( Atomic Habits )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஜேம்ஸ் கிளியர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கடுகளவு மாற்றங்களை, கற்பனைக்கெட்டா விளைவுகள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
-
ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க ( Aarokiyamaana Kulanthaikalai Vazharthedukka )
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreடாக்டர் புரூஸ் மில்லர்
தமிழில்: குமாரசாமி
இன்று, குழந்தைகளின் உணவு, அடிப்படையில் புதிய முழு உணவாக இருந்து, அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட, கிரீஸ்-ஊறவைக்கப்பட்ட, இரசாயனத்தால் இயக்கப்படும், சர்க்கரை மற்றும் உப்பு நிரப்பப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து கேள்விக்குரிய உணவுத் தேர்வுகளுக்கு மாறிவிட்டது. உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன் இணைந்து, உங்கள் விலைமதிப்பற்ற குழந்தைகள் ஒரு புதிய வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உணவு தொடர்பான நோய்களை எதிர்கொள்கிறார்கள், இவை அனைத்தும் கிருமிகளுடன் தொடர்பில்லாதவை.
உங்கள் குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் கற்பிக்க வேண்டும், நோய்கள் உருவாகும்போது, அது ஒரே இரவில் தொடங்குவதில்லை. தடுப்பு என்பது உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதாகும், அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வரை அல்ல. ஆரோக்கியம் என்பது பணத்தைப் போன்றது, அதை இழக்கும் வரை அதன் மதிப்பைப் பற்றிய உண்மையான எண்ணம் நமக்கு இருக்காது. எளிதில் புரியும் மொழியில், உணவு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடும் பொருட்டு, குழந்தைகளின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பெற்றோர்கள் இளம் வயதிலேயே மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது; நீங்கள் நோயற்ற குழந்தைகளை வளர்க்க விரும்பினால்.
-
கனவுகளின் விளக்கம் / Kanavukalin Vilakkam
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreசிக்மண்ட் பிராய்ட்
தமிழில்: நாகூர் ரூமி
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா?
இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.
கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.
உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை.
விடைகள் உங்கள் கைகளிலேயே!
படித்துப் பாருங்கள்!
-
மகிழ்ச்சியான மணவாழ்க்கை (Mahilchiyana Manavazhkai) The Forgotten Secrets of Magical Marriage
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreநாகலட்சுமி சண்முகம்
ஒரு அற்புதமான வாழ்க்கைத் துணையுடன் அற்புதமான திருமணத்தை அனுபவிக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் நேரம் வரும்போது, பெரும்பாலானோர் திருமணத்தை அறியாமலேயே ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும் போது, அவர்கள் ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் மற்றும் என்ன தவறு நடந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்த புத்தகம் மகிழ்ச்சியான திருமணமான தம்பதிகளின் சிறந்த நடைமுறைகளை உங்களுக்குக் கற்பிக்கிறது மற்றும் பெரும்பாலான தம்பதிகள் தடுமாறும் பொதுவான ஆபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்று உங்களுக்குச் சொல்கிறது
-
பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள் ( Piraridam Shajamaagap Pesuvathu Eppadi ) How to Talk to Anyone
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreலீல் லவுன்டெஸ்
தமிழில்: PSV குமாரசாமிவாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?
வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.
பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:
- எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
- எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
- உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
- உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
- உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
-
கவலை வேண்டாம் ( Don’t Worry )
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: PSV குமாரசாமி
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.
இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும். -
உருவாகும் உள்ளம் / Uruvaahum Ullam / The Emerging Mind Tamil
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreவிளையனூர் எஸ்.ராமச்சந்திரன்
நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ். ராமச்சந்திரன்
மானுட உள்ளம் என்பது என்ன?
காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது?
கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன?
என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.
எளிய மொழியில், மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன்
-
வாழ்க்கை வாழ்வதற்கே! ( Vaazhkai Vaazhvadetke )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreமேட் ஹெயிக்
தமிழில்: PSV குமாரசாமி
- Waterstones Book of the Year Nominee (2015)
மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!
தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.