Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- You cannot add "இச்சிகோ இச்சியே ( The Book of Ichigo Ichie Tamil )" to the cart because the product is out of stock.
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Rs. 1,950.00
மிட்ச் ஆல்பம்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
–எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்
இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
–பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்
“அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
–யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்
“தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
–ராபர்ட் பிளை, நூலாசிரியர்
“மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
— ஏமி டேன் நூலாசிரியர்
“நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
–டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்
“சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
–ஜெஃப் டேனியல்ஸ்
Out of stock
Notify me when stock available
நீங்கள் இளமையாக இருந்தபோது, உங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, நீங்கள் இவ்வுலகத்தை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும், வாழ்க்கையில் நீங்கள் எதிர்நீச்சல் போடுவதற்கும் தேவையான ஆழமான அறிவுரைகளை உங்களுக்கு வழங்கிய ஒரு வழிகாட்டி உங்களுக்கு இருந்திருக்கக்கூடும். உங்களுடைய தாத்தா, பாட்டி, ஆசிரியர், சக ஊழியர், அல்லது வேறு யாரோ ஒருவர் அப்பாத்திரத்தை வகித்திருக்கக்கூடும். இந்நூலின் ஆசிரியரான மிட்ச் ஆல்பத்திற்கு அத்தகைய ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மோரி ஷுவார்ட்ஸ். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு மிட்ச் ஆல்பத்தின் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் அவர்.
மிட்சைப்போலவே, நீங்களும் வாழ்வின் ஓட்டத்தில் உங்களைத் தொலைத்துவிட்டு, உங்கள் வழிகாட்டியுடனான தொடர்பை இழந்திருக்கக்கூடும். உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவரை மீண்டும் சந்தித்து, இன்றும் உங்கள் மனத்தை அரித்துக் கொண்டிருக்கின்ற ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்கவும், அவருடைய ஞானத்தைப் பெறவும் நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள், இல்லையா? அதிர்ஷ்டவசமாக, மிட்ச் ஆல்பத்திற்கு அப்படி ஓர் இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் மோரி, மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த நேரத்தில் மிட்ச் அவரை மீண்டும் சந்தித்தார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மோரியின் வீட்டில் நிகழ்ந்த அச்சந்திப்பு, மோரி நடத்திய இறுதி வகுப்பாக மாறியது. அவ்வகுப்பில், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய பாடங்களை மோரியிடமிருந்து மிட்ச் கற்றுக் கொண்டார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து செலவிட்ட அத்தருணங்களின் மாயாஜாலமான விவரிப்புதான் இந்நூல். தன்னுடைய பேராசிரியர் தனக்கு வழங்கியிருந்த அற்புதமான பரிசை மிட்ச் இந்நூலின் வாயிலாக இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
About the Author
மிட்ச் ஆல்பம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற ஒரு நூலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, நாடக ஆசிரியர், இசைக் கலைஞர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். அவர் இதுவரை எழுதியுள்ள ஒன்பது நூல்களும் மொத்தமாக நான்கு கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவருடைய நூல்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பல நூல்கள், விருது பெற்றத் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவி ஜெனீனுடன் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரில் வசித்து வருகிறார்.
Book Specifications
Title: Tuesdays with Morrie / பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Author: Mitch Albom / மிட்ச் ஆல்பம்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 242
Weight: 210g
Published Year: 1997
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 9789355430328
Dimensions: 13 x 20 x 0.5 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
தனிமனித வளர்ச்சி விதிகள் 15 (thanimanidha valarchi vidhihal 15)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
- நியூயார்க் டைம்ஸ் விற்பனை பட்டியலில் முதலிடம்
“உலகில் நாம் எது செய்தாலும் அதற்கு பன்மடங்கு மெருகூட்டுவது எமது ஆளுமை. தனிமனித வளர்ச்சி விதிகள் 15 என்ற இந்தப் புத்தகம் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தது.” — நுஸ்ரி – காலி, இலங்கை ( K. M. Nusry – Galle, Sri Lanka)
ஒரு நபர் வளர உதவுவதற்கு எப்போதும் உறுதியாக இருக்கும் முயற்சித்த மற்றும் உண்மையான கொள்கைகள் உள்ளனவா? பதில் ஆம் என்று ஜான் மேக்ஸ்வெல் கூறுகிறார். அவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருக்கிறார். முதல் முறையாக அவர் நம் திறனை அடைய என்ன தேவை என்பதை அவர் சேகரித்த அனைத்தையும் கற்பிக்கிறார்.
அவரால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியுமான முறையில் ஜான் கற்பிக்கிறார். . .
கண்ணாடியின் சட்டம்: உங்களுக்கான மதிப்பைச் சேர்க்க நீங்கள் உங்கள் மதிப்பைப் பார்க்க வேண்டும்
விழிப்புணர்வுச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள உங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்
மாடலிங் சட்டம்: பின்தொடர உங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதபோது உங்களை மேம்படுத்துவது கடினம்
ரப்பர் பேண்டின் சட்டம்: நீங்கள் இருக்கும் இடத்திற்கும் நீங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கும் இடையிலான பதற்றத்தை இழக்கும்போது வளர்ச்சி நின்றுவிடும்.
பங்களிப்புச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வது மற்றவர்களை வளர்க்க உங்களை அனுமதிக்கிறதுஇந்த புத்தகம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள உதவும், அதன் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
-
தடையேதுமில்லை
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம. வள்ளியப்பன்
‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ – பா.ராகவன்
புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.
ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
-
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி ( Ninaivaatral )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreவில்லியம் வாக்கர் அட்கின்சன்
“நான் வாசித்துள்ள புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமானது இந்தப் புத்தகம் தான். நினைவாற்றல் எவ்வளவு முக்கியமானது என்பதில் தொடங்கி, எமது மனதை மற்றும் உடலை பயன்படுத்தி நினைவாற்றலை வளர்ப்பதை பற்றி, புத்தகங்களில் இருந்து வாழ்க்கையில் பயன்படுத்த விடயங்களை பெறுவது முதல் அனைத்தும் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.” — நிர்மலா – யாழ்ப்பாணம், இலங்கை ( Nirmala – Jaffna, Sri Lanka )
“எல்லா அறிவும் நினைவு மட்டுமே.” நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஏராளமான தகவல்கள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. நமது அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து முக்கியமான சிறிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்வது வரை, நமது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான தரவுகளை மனப்பாடம் செய்வது வரை, நமது மனத் திறன்களின் செயல்திறனை முடிவில்லாமல் நம்புகிறோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் விரும்புவது போல் அது திறமையாக இருக்காது. ஒரு விளக்கக்காட்சியை வழங்குவதை மறந்துவிட்டு, புள்ளிவிவரங்களை நினைவில் கொள்ள முடியாத சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காண்கிறோம். நாங்கள் முன்பு சந்தித்த ஒருவரைச் சந்திக்கிறோம், ஆனால் இப்போது அவர்களின் பெயர் என்னவென்று தெரியவில்லை, நினைவில் இல்லை. நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும், அதனால் விஷயங்களை நொடியில் நினைவுபடுத்த முடியும். நினைவாற்றலில் வில்லியம் வாக்கர் அட்கின்சன், அதை எவ்வாறு உருவாக்குவது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவது, நமது நினைவகத்தை மேம்படுத்த, வளர்ப்பதற்கு மற்றும் பயிற்சியளிக்க எளிதான மற்றும் பொருந்தக்கூடிய முறைகளை வழங்குகிறது.
இந்தப் புத்தகம், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும்; விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.
-
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி ( Vaazhkaiyil Magilchiyaha Iruppathu Eppadi )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreதவத்திரு தலாய் லாமா & டாகடர் ஹோவர்டு கட்லர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு ( Nermarai Sinthanaiyin Viyathaku Sakthi )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
-
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Pirammandamaana Sindhanaiyin Maayajaalam)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreடேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.
-
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் (Aangalin Poorveeham Sevvai Pengalin Poorveeham Sukkiran)
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartஜான் கிரே
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இந்த புத்தகத்தில், ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு ஒரு தனித்துவமான, நடைமுறை மற்றும் நிரூபிக்கப்பட்ட வழியை வழங்குகிறார். மோதல்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடைமுறை ஆலோசனைகள், துணைவர்களின் நடத்தையை எவ்வாறு விளக்குவது மற்றும் புதிய உறவுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து உணர்ச்சிகரமான “கடந்த காலத்திலிருந்து குப்பைகளை” தடுக்கும் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களுடன், இந்த புத்தகம் ஆழமான மற்றும் திருப்திகரமாக வளர விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
-
இச்சிகோ இச்சியே ( The Book of Ichigo Ichie Tamil )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
தமிழில்: PSV குமாரசாமி
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்
-
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க ( Ungalukkul Irukkum Thalaimathuvaththai Vazharthedukka )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.