Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
வீரயுக நாயகன் வேள்பாரி (VOL-I & II) / Veerayuga Nayagan Velpari
Rs. 11,490.00
சு.வெங்கடேசன்
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: வீரயுக நாயகன் வேள்பாரி
Author: சு.வெங்கடேசன்
Translator:
Language: Tamil
Binding: Hardcover
Pages:
Weight: 1Kg 900g
Published Year: 2019
Publisher: Vikatan Prasuram
ISBN:
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை ( Palestine – Israel Por: Oru Varalaatrup Paarvai )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartநாகேஸ்வரி அண்ணாமலை
‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்
‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.
-
விஜயநகர பேரரசு
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withஎஸ். கிருஷ்ணன்
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
செர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!
இதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 2
Rs. 3,490.00Original price was: Rs. 3,490.00.Rs. 2,690.00Current price is: Rs. 2,690.00.or 3 X Rs.896.67 withRead moreகொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
‘இந்தியாவின் வரலாறு’ (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை) எனும் நூலில் புதிய கால மற்றும் அண்மைக் காலத்தில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது, இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
இப்பிரச்சினை சம்பந்தமான சோவியத் மற்றும் அயல்நாட்டு நவீன ஆராய்ச்சிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ( Sapiens Tamil )
Rs. 4,990.00Original price was: Rs. 4,990.00.Rs. 4,490.00Current price is: Rs. 4,490.00.or 3 X Rs.1,496.67 withRead moreயுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்தூல். இதை படிக்கத் தொடங்கிவிடடால் கீழே வைக்கவே மனம் வராது” — பிBல் கேட்ஸ்
சுவாரஸ்யமான மற்றும் ஆர்வத்தைத்துாண்டும் … இந்த பூமியில் நாங்கள் எவ்வளவு சுருக்கமான காலம் இருந்தோம் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது – பBராக் ஒபாமா
முதலிலிருந்து இருந்து கடைசி வரை ஆச்சர்யமூட்டும் … நான் படித்த சிறந்த புத்தகம் இதுவாக இருக்கலாம்- கிறிஸ் எவன்ஸ்
வரலாறு மற்றும் நவீன உலகின் மிகப்பெரிய கேள்விகளைக் கையாளுகிறது … மறக்க முடியாத தெளிவான மொழியில் எழுதப்பட்டது – ஜாரெட் டயமண்ட்
திடுக்கிடும் … இது உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது – சைமன் மாயோ
நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று … நம் இனங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது – லில்லி கோல்
உங்கள் மூளையிலிருந்து சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது, உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் ஆக்குகிறது – சண்டே டைம்ஸ்
சேபியன்ஸ் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படட சிந்தனைகளுக்கு மாற்றமாக மற்றும் ஆச்சரியமான உண்மைகளால் நிரம்பியுள்ளது. இந்த புதிரான, புராணத்தை உடைக்கும் புத்தகத்தை எந்த விவரத்திலும் சுருக்கமாகச் சொல்ல முடியாது; நீங்கள் அதை படிக்க வேண்டும் – ஜான் கிரே – பைfனான்சியல் டைம்ஸ்
நெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
அமெரிக்க உள்நாட்டுப் போர்/ America Ulnaattup Por / American Civil War
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreவானதி
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.”
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஹோல்கர் கெர்ஸ்டன்
தமிழில்: உதயகுமார்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.
இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பிரபல கொலை வழக்குகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஎஸ். பி. சொக்கலிங்கம்
எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?
இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.
ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?
தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?
சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.
க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் S.P.சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.