Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
Showing 61–82 of 82 results
-
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி (Cleopatra)
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreஎஸ்.எல்.வி. மூர்த்தி
சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மை நாயகர்கள் ஜூலியஸ் ஸீைைரயும், மார்க் ஆன்ட்டனியையும் தன் சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் சுவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம் காலமாகத் தொடரும் இந்தப் பொதுஜன பிம்பத்தை ஆதாரபூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார்.
அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகிய துறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலகலா வல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம் பாதிக்கப்பட்ட வேளையில் தயங்காமல் மரணத்தைத் தழுவிய இரும்புப் பெண்மணி.
ஜூயியஸ் ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என எஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திர நாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப் பாய்ச்சல் நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்.
-
பரிசு: உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஈடித் எகர்
“ஈடித் எகரின் கதை என்னை அடியோடு மாற்றிவிட்டது” –ஓப்ரா வின்ஃபிரே
“ஈடித்தின் தனித்துவமான பின்புலம் அவருக்கு அற்புதமான உள்நோக்குகளை வழங்கியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அவருடைய பரிந்துரைகள் மக்களுக்குப் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்.” –பில் கேட்ஸ்
-
8 மாபெரும் சாதனையாளர்களின் பண்புகள்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreகேமரூன் சி. டெய்லர்
“அறிவுள்ள உலக உண்மைகள் இந்த புத்தகத்தில் அழகாகப் பரவியுள்ளன. அறுவடைச் சட்டங்களுக்கான ஒரு உண்மையான விளக்கம்”
டா. ஸ்டீபன் ஆர். கவி, அமெரிக்காவின் நம்பர் 1 ஆக விற்பனையாகும், தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள் புத்தகத்தை எழுதியுள்ளார்.“வெற்றி, சந்தோஷம், ஆன்மீகம் மற்றும் நிதி சுதத்திரம் சிக்கலானது அல்ல, நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று கேமருன் சி. டெய்லரின் புத்தகத்தை படித்த பின்னர் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
லூ ஹோல்ட்ஸ், நேஷனல் சேம்பியன் மற்றும் ஹெட் ஃபுட்பால் கோச், நாட்டர்டாம் பல்கலைக்கழகம், 1985-1996“நீங்கள் உங்களது வாழ்க்கையின் நடைமுறைப்படுத்தக்கூடிய காலங்கடந்த உண்மைகள் கொண்ட இது இதமான அற்புதமான புத்தகம்”
பிரெயன் டிரேசி, சிறப்பாக விற்பனையாகும் தி வேட்டு வெல்த் புத்தகத்தின் எழுத்தாளர்“இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இதில் உள்ள உறுதியான நெறிகளின் செல்வத்தின் மீது செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்!’
ஜான் எம். ஹன்ட்ஸ்மேன் பில்லியனர், ஹன்ட்ஸ்மேன் கார்பரேஷனின் நிறுவனர்“புத்திசாலியான வர்கள் இந்த தகவலை பின்பற்றுவார்கள்!’
வில்லியம் டி. டான்கோ பிஎச்.டி., நம்பர் 1 ஆக விற்பனையாகும் தி மில்லினியர் நெக்ஸ்ட் டோர் புத்தகத்தை எழுதியவர் -
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்: ஒரு வாழ்க்கை வரலாறு ( Abdul Kalam – A Life )
Rs. 3,590.00or 3 X Rs.1,196.67 withRead moreஅருண் திவாரி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் மேலாக விண்வெளித்துறையில் அவர் சாதித்தவை, குடியரசுத்தலைவரான பின்பு மக்களால் நேசிக்கப்படும் தலைவராக அவர் மாறியது என இந்த வாழ்க்கை வரலாறு விரிகிறது.
எதையும் சாதிக்க வேண்டும் என்ற வேகத்துடன் செயல்பட்ட கலாம், இளைஞர்களுக்குத் துணிச்சல் வேண்டும் என்று விரும்பினார். ” சாத்தியமில்லாதவற்றைக் கண்டுபிடிப்பதற்கான துணிச்சல், பயணிக்கப்பட்டிராத ஒரு பாதையில் பயணிப்பதற்கான துணிச்சல், எட்டப்பட முடியாதவற்றை எட்டுவதற்கான துணிச்சல், பிரச்னைகளைச் சந்தித்து வெற்றி பெறுவதற்கான துணிச்சல்’ ஆகியவை இளைஞர்களுக்கு வேண்டும் என விரும்பிய கலாமின் வாழ்க்கை முழுவதுமே துணிச்சலான செயல்களால் நிரம்பியிருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’, ‘நான் ஏன் இங்கு இருக்கிறேன்?’, ‘வாழ்க்கை என்பது எதைப் பற்றியது?’, ‘என் வாழ்வின் நோக்கம் என்ன?’ போன்ற தங்களுடைய சொந்தக் கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்வார்கள் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது உண்மை.
-
சுபாஷ்: மர்மங்களின் பரம பிதா ( Subash: Marmangalin Parama Pitha )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreமருதன்
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை. ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.
போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம். இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் வழி ( Steve Jobs Vazhi )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreஜெ எலியட் & வில்லியம் எல். சைமன்
ஸ்டீவ் ஜாப்ஸ் வழியில், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு நெருங்கியவர்கள் மட்டுமே கண்ட மனிதரை வசகர்களும் அறிந்துகொள்ளவும், அவரை உருவாக்கியது எது என்று தெரிந்து கொள்ளவும் உதவுகிறது இந்நூல்.
-
எனக்குப் பிடித்த புத்தகங்கள் / Enakku Pidiththa Puthakangal
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஓஷோ
தமிழில்: ம்.ச. ஆனந்த்ஒரு மிகச் சிறந்த புத்தகம் ஒரு மிகச் சிறந்த தருணத்தில் எழுதப் பெற்றது. ஓஷோவால் பேசப்பெற்று 600 நூல்களாக மாற்றம் பெற்றது. அவர் மிகவும் விரும்பிய 168 நூல்கள் பற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஓஷோ சொல்கிறார்.
என்ன ஒரு ஞாபக சக்தி!! என்ன ஒரு கவனம்!!
தன்னைப் பாதித்த எழுத்தாளர்களைப் பற்றியும் நம்மைப் பாதிக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களையும் நமக்கு அளிக்கிறார். உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள ஞானிகளையும் நீட்சே போன்ற மேற்கத்திய தத்துவ அறிஞர்களையும் அவர்களது நூல்களையும் உங்கள் ஞானக்கண் முன் கொண்டு வருகிறார்.
-
ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம் ( Fidel Castro: Simma Soppanam )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreமருதன்
க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்ட வம்சத்தில் இருந்து வந்தவரல்லர் அவர். மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர். ஆனால் தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர்.
சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. வீரமும், விடுதலை வேட்கையும் நெïசுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இது.
-
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? ( Koondup Paravai Yen Paadugirathu )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreமாயா ஏஞ்சலோ
தமிழில்: அவை நாயகன்
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ. கறுப்பெழுத்தின் முன்னோடி. மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.
அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர். ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.
-
தமிழகத்து பிசினஸ்மேன்கள் ( Thamizhakaththu Businessmankal)
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஏ.ஆர். குமார்
வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம்.
பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது.
போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது!
இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்’ எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது.
உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய… உள்ளே வாருங்கள்!
-
ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும்
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreகிட்டி ஃபெர்கூசன்
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
ஸ்டீபன் ஹாக்கிங்கை நோய் மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.
-
நெல்சன் மண்டேலா ( Nelson Mandela )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreதா.பாண்டியன்
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.
திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; படித்துப் பயன்பெறும்.
-
செங்கிஸ்கான் ( Genghis Khan Tamil )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
-
பெரியார் ( Periyar )
Rs. 940.00or 3 X Rs.313.33 withRead moreஆர். முத்துக்குமார்
- இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை.
- அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும்.
- பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.
- இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது.
- தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.
-
மகாராஜாவின் பயணங்கள்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreஜகத்ஜித் சிங்
அக்களூர் ரவிசீனா, ஜப்பான், ஜாவா என்று உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்த ஒரு மகாராஜாவின் இதயத்தை அள்ளும் பயண அனுபவங்கள்.
ஒரு மகாராஜாவின் கண்களைக் கொண்டு உலகைப் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பயண நூல்களுக்கு எப்போதும் சிறப்பிடம் கொடுக்கப்படுவது வழக்கம். கிரேக்கப் பயணிகளும் சீனப் பயணிகளும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால் பண்டைய இந்தியாவை நம்மால் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா?
இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கிருந்து பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் தங்கள் அனுபவங்களை அவ்வாறு எழுதி வைத்திருக் கிறார்களா என்று பார்த்தால் பெருமளவு வருத்தமே மிஞ்சுகிறது. அந்த வருத்தத்தை ஈடுசெய்யும் வகையில் ஒரு மகாராஜா மிகவும் சுவையான, மிகுந்த பயனளிக்கும் பயணக் குறிப்புகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். பிரிட்டிஷ் காலத்தில் கபுர்தலா எனும் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜாவாக இருந்த ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர்தான் அவர்.
மூன்று முறை உலகை வலம் வந்த இந்த மகாராஜா சீனா, ஜப்பான், ஜாவா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து எழுதிய பயண நூல் முதல் முறையாகத் தமிழாக்கம் பெறுகிறது. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் அட்டகாசமான நடையில் எழுதியிருக்கிறார் ஜகத்ஜித் சிங். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்நாடுகள் எப்படி இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு. அக்களூர் இரவியின் அழகிய மொழியாக்கத்தில் ஒரு வண்ணமயமான உலகம் நம்முன் விரிகிறது.
-
முத்துலட்சுமி ரெட்டி
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreவி. ஆர். தேவிகா
அக்களூர் ரவிஇப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கமுடியுமா, இவ்வளவு துணிச்சலோடு போராடியிருக்கமுடியுமா, இந்த அளவுக்கு நவீனமாகவும் புரட்சிகரமாகவும் ஒருவர் அப்போதே சிந்தித்துச் செயல்பட்டிருக்கமுடியுமா என்று வியக்கவும் ஏங்கவும் வைக்கிறார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
போராடிப் போராடித்தான் ஒவ்வோர் அடியையும் அவர் எடுத்து வைக்கவேண்டியிருந்தது. அந்த ஒவ்வொரு அடியும் ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டு வந்தது. புதுக்கோட்டை மகாராஜா ஆண்கள் பள்ளியின் முதல் மாணவி. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினர். சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர். முதல் பெண் துணை சபாநாயகர். நகரக்குழுவின் முதல் பெண் உறுப்பினர்.
பெண் உரிமைப் போராட்டத்துக்கு முத்துலட்சுமி வகுத்துக் கொடுத்த பாதை உறுதியானது. வீட்டுச் சிறை தொடங்கி சமூகக் சிறை வரை அனைத்திலிருந்தும் பெண்கள் விடுபடவேண்டும். என்னும் பெருங்கனவோடு வாழ்ந்தவர். அந்தக் கனவுக்காகத் தன் வாழ்நாளைக் கரைத்துக்கொண்டவர். உடலைப் பாதிக்கும் நோயோடு போராட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார் என்றால் பெண்களைப் பீடித்துள்ள சமூக நோய்களை எதிர்க்க குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார்.
-
ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் : இந்திய சூஃபிகள் வரிசை
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreநாகூர் ரூமி
சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்.
சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார்.
நாகூர் ரூமியின் இந்நூல் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது.
இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்.
-
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? ( Che Guevara Puradchiyaalar Aanathu Eppadi? )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreமருதன்
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.
தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.
ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.
-
காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreநாகூர் ரூமி
காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்.
மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச் செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய மக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்ற நேர்மையால் கவர்ந்தவர்.
விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து, தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து, எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர். தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர். ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம் போகமுடியாது என்ற நிலையை போக்கியவர். கல்விக் கண் திறந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக, முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். பதவியை பெரிதாக நினைக்காதவர். முதல்வர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தவர். நேருவுக்கு பிறகு இரண்டு முறை நாட்டின் பிரதமர்களை முடிவு செய்தவர். லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பிரதமர்களாக தேர்வு செய்தவர்.
ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் உயிராக கருதியவர். கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். தனக்கென்று சொந்தமாக வீடுகூட இல்லாதவர். ஒரு செண்ட் நிலம் கூட சம்பாதிக்காதவர். காந்தியின் கடைசி வாரிசாக வாழ்ந்து, அவருடைய பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மகத்தான தலைவர். காமராஜ் ஒரு சகாப்தம். பள்ளிகள் இருக்கும்வரை அவர் புகழ் இருக்கும். அணைகள் இருக்கும் வரை அவர் புகழ் அணையாது.
-
யாஸீன் மௌலானா நாயகம்
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreநாகூர் ரூமி
சமயங்களோடும் அற்புதங்களோடும் தொடர்பு கொண்ட சீர்காழிக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதம்தான் யாஸீன் மௌலானா நாயகம். நபிகள் நாயகத்தின் 33வது தலைமுறையில் வரும் இந்த ஞானி தன் அறிவாலும் அற்புதத்தாலும் செய்த சேவைகளும் சாதனைகளும் மகத்தானவை. பல நேரங்களில் சேவையே சாதனையாகவும் சாதனையே சேவையாகவும் ஆனதுண்டு.
அரபிகள் வியக்கும் அரபி அறிவு. தமிழர்கள் வியக்கும் தமிழறிவு. மதம் பார்க்காத மானிட சேவை. இவற்றின் மொத்த உருவம்தான் யாஸீன் மௌலானா நாயகம் அவர்களது வாழ்க்கை பற்றிய தகவல்களை முழுமையாகவும் விரிவாகவும் இணையம் முதலான பொதுவெளியில் காணமுடியவில்லை.
கவிதை, தத்துவார்த்த விளக்க உரைகள், பாமாலைகள், அரபு தமிழ் அகராதி என யாஸீன் நாயகத்தின் படைப்புலகம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. யாஸீன் நாயகத்தின் வாழ்வையும், சிந்தனைகளையும், சாதனைகளையும் சுருக்கமாக ஆவணப்படுத்துகிறார் நாகூர் ரூமி. இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்
-
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
-
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreமருதன்
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் சுருக்கமான அறிமுகம் அவருடைய படைப்புகளை மேலும் நெருங்கிச் சென்று வாசிப்பதற்கான உந்துதலை வழங்கும்.