Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: நாவல்

Showing all 53 results

  • அஷேரா ( Ashera )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சயந்தன்

     

    அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.

     

    அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.

     

    நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப் போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Add to cart
  • ஆடு ஜீவிதம் ( Aadu Jeevitham )

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    பென்யாமின்

      தமிழில்: விலாசினி

     

    • 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்

     

    நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது.

     

    தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

     

    மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Add to cart
  • Sale!

    இடக்கை / Idakkai

    Original price was: Rs. 2,490.00.Current price is: Rs. 2,290.00.
    or 3 X Rs.763.33 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது.

     

    ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Add to cart
  • மலைகளும் எதிரொலித்தன ( Malaikalum Ethiroliththana )

    Rs. 4,590.00
    or 3 X Rs.1,530.00 with

    காலித் ஹுசைனி

    தமிழில்: சதீஷ் வெங்கடேசன்

    or 3 X Rs. 1,530.00 with Koko Koko
    Add to cart
  • யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது ( Yaarukkaha Indha Mani Olikkirathu )

    Rs. 6,790.00
    or 3 X Rs.2,263.33 with

    எர்னெஸ்ட் ஹெமிங்வே

    தமிழில்: சி. சீனிவாசன்

     

    ‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான்.

     

    எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

    or 3 X Rs. 2,263.33 with Koko Koko
    Add to cart
  • பிரைட் அண்ட் பிரஜுடிஸ் ( Pride and Prejudice Tamil )

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    ஜேன் ஆஸ்டின்

     

    எலிசபெத் பென்னட் முதல் முறையாக ஒரு நடன நிகழ்ச்சியில் ஃபிட்ஸ்வில்லியம் டார்சியை சந்தித்தபொழுது, திமிர்பிடித்த அருவருப்பான மனிதனென்று அவனை அலட்சியப்படுத்துகிறாள். தாங்கிக்கொள்ள முடியாத அளவு துடுக்குத்தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாமல் அவளுடன் நடனமாடும் யோசனையைக் கூட மறுக்கிறான் டார்சி.

     

    வாழ்க்கை அவர்களை ஒருவருக்கெதிராக மற்றவரை நிறுத்தும்பொழுது டார்சி அவளது அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வால் கவரப்பட, எலிசபெத் அவன் மீதான தன் உணர்ச்சிகளைக் குறித்து வியக்க துவங்குகிறாள். ஆனால் டார்சி அவளது கடைசி தங்கை லிடியாவை அவதூறிலிருந்துக் காப்பாற்ற, இதுவரை அகம்பாவத்தினால் அவளைக் குறித்து தன் கருத்தில் பாரபட்சமாக இருந்துவிட்டோமோ என்று சிந்தித்தாள்.

     

    போராடும் இரு உள்ளங்களின் கதை இது என்றாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு நையாண்டியாக இதனை ஜேன் ஆஸ்டின் நெய்துள்ளார். இரண்டு நூந்தாண்டுகளுக்கு முன்னால் பதிப்பிடப்பட்டாலும் இன்றளவிலும் இது வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருகிறது.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Add to cart
  • பனி | Snow Tamil

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    ஓரான் பாமுக்

    தமிழில்: ஜி. குப்புசாமி

     

    ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’.

    சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக்.

     

    ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘கா’வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Add to cart
  • பிராப்ளம்ஸ்கி விடுதி / Problemski Hostel Tamil

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

    தமிழில்: லதா அருணாச்சலம்

     

    பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு.

     

    சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது.

     

    நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ முற்றிலும் ஒரு புதிய முயற்சி.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் / Oru Manithan Oru Veedu Oru Ulagam

    Rs. 2,790.00
    or 3 X Rs.930.00 with

    ஜெயகாந்தன்

     

    தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’

     

    எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

    or 3 X Rs. 930.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வின்சன்ட் வான் கோ: மஞ்சள் வீடு (Vincent Van Gogh: Manjal Veedu)

    Rs. 3,290.00
    or 3 X Rs.1,096.67 with

    பட்டுக்கோட்டை ராஜா

     

    இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது.

     

    அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்…

     

    கறுப்புத் தொப்பி, கரிபடிந்த சீருடை – கைகள் பேண்ட் – பாக்கெட்டில் இருந்தன. முழங்கால்கள் பேண்ட்டின் வெளியே முட்டித் தெரிந்தன. அந்த உருவமும், அவனது நடையும் வின்சென்ட்டின் மனதில் என்னவோ கிளர்ச்சி செய்தன.

     

    தனது சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அப்பா எழுதிய கடிதமும், ஒரு பென்சிலும் கிடைத்தன. கடித உறையின் மேலே, விரல்களின் நடுவே பென்சில் நர்த்தனம் புரிந்தது. உடனே அந்த வயதான தொழிலாளியின் உருவம் அங்கே ஓவியமாய்ப் பதிந்துவிட்டது!

     

    சில நிமிடங்களுக்குப் பிறகு இளைஞன் ஒருவன் வெளிப்பட்டான். அவன் நல்ல உயரமாய் – திடமாய் இருதான். அதே சீருடை. தனது கையில் வின்சென்ட் வைத்திருந்த கடிதத்தின் மறுபக்கம் வெறுமையாக இருந்தது. மீண்டும் விரல்கள் பென்சிலைப் பிடித்தன. கோட்டோவியமாய் அந்த இளைஞனின் உருவம் அங்கே பதிவானது!

     

    அனிச்சையாகவே அந்தச் செயல் நடந்தது. அவர்களை வரைய வேண்டுமென வின்சென்ட் நினைக்கவில்லை. உள்ளிருந்த ஏதோ ஒரு உந்துசக்தி அவனைச் செயல்படுத்தியது.

     

    வின்சென்ட் தனக்குள்ளிருந்த ஓவியனை அடையாளம் கண்ட நாள் அதுதான்!

    or 3 X Rs. 1,096.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பாடும் பறவையின் மௌனம் / Paadum Paravaiyin Maunam / To Kill a Mockingbird Tamil

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    ஹார்ப்பர் லீ

    தமிழில்:  சித்தார்த்தன் சுந்தரம்

     

    1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டது.

     

    முப்பதுகளில் இனப் பிரிவினை வழக்கத்திலிருந்த அலபாமா நகரில் வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நீக்ரோ இளைஞன் டாம் ராபின்சனுக்காக, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஆட்டிகஸ் ஃபின்ச் வாதாட முன்வந்தார்.

     

    நகரத்தில் இருந்த பெரும்பாலன வெள்ளையின மக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்தவரின் உரிமைக்காக வாதாடியே தீர்வேன் என்கிற முடிவிலிருந்து ஆட்டிகஸ் சிறிதும் விலகவில்லை.

     

    வழக்கின் முடிவு என்ன..?

     

    இந்த வழக்கினால் அலபாமா இனப்பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டதா..?

     

    நீக்ரோ இளைஞனின் கதி என்னவாயிற்று..?

     

    ஆட்டிகஸின் ஆறு வயது மகள் ஸ்கெளட் ஃபின்ச்சின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    என் பெயர் பட்டேல் பை / En Peyar Pattel Pai / Life of Pi Tamil

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    யான் மார்ட்டெல்

    தமிழில்:  பொன். சின்னத்தம்பி முருகேசன்

     

    என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு?

     

    பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு?

     

    எல்லாமே மூழ்கிப் போச்சா?

     

    நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை.

     

    எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா?

     

    அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்?

     

    உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எதற்கும் பயன்படாதா?

     

    பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன?

     

    விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது?

     

    சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்) ( Jingalin Aasaan)

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    இர்விங் கர்ஷ்மார்

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.

     

    பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.

     

    ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.

     

    இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரம் விளைந்தது ( How the Steel Was Tempered )

    Rs. 2,640.00
    or 3 X Rs.880.00 with

    நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி

    தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன்

     

    மானுட விடுதலைக்காக அர்ப்பணிப்பான வாழ்வையும் அதன் அர்த்தங்களையும் விவரிக்கும் இந்நாவலின் பாத்திரங்கள் உண்மையானவை. 1915ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டுவரை இந்நூலாசிரியரும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும் தியாகங்களையும் கண்முன் விரித்துச்செல்கிறது. புரட்சிகர அரசியல் போராட்ட உணர்வுகளையும், வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் இந்நாவலில் இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிநதேயம் போன்றவை குறித்தும் செறிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

     

    புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கியால் பெரிதும் போற்றிப் புகழப் பட்ட இந்நாவல் முதன்முதலாக 1934ம் ஆண்டு வெளியானது. உலகெங்கும் 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளியானதென்பது இந்நூல் மகத்துவத்தை உணர்த்தும்.

    or 3 X Rs. 880.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விலங்குப் பண்ணை ( The Animal Farm )

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    ஜார்ஜ் ஆர்வெல்

     

    லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜே.ஜே. சில குறிப்புகள் ( Je Je Sila Kurippugal )

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    சுந்தர ராமசாமி

     

    மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உருமாற்றம் / Urumaatram / The Metamorphosis Tamil

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஃபிரான்ஸ் காஃப்கா

    தமிழில்:  பேரா.ச.வின்சென்ட்

     

    இந்த வாழ்க்கையும், வாழ்வின் மீதுள்ள பிடித்தங்களும் , மனமும் நம்மை உள்முகமாக வேறு ஒரு பக்கம் செலுத்திக்கொண்டிருக்க, வாழ்க்கை ஒரு இறுக்கமான இயந்திரத்தனமான வாழ்வைக் கையளித்தபோது , எப்போதேனும் நாங்கள் நினைத்திருப்போம்தானே? இந்த வாழ்வில் இருந்து வெளியேறுவது எப்படியென்று.

     

    காஃப்காவின் ” உருமாற்றம்”அதன் ஒரு முயற்சியாகத்தான் எனும் நாவலைப் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான மனிதர்களால் அருவருப்பாகப் பார்க்கப்படுகின்ற கரப்பான் பூச்சியைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்ற ஒரு கதை.

     

    ஒரு இளைஞன் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அதன் பின் நடப்பதெல்லாம் என்ன? இதுதான் கதை.

    கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிற இளைஞன், எத்தகையதொரு கற்பனை, உங்களால் இப்படியொரு கற்பனையைச் செய்து பார்க்க முடிகின்றதா?

    ஆம் காஃப்காவின் உருமாற்றம் அத்தகையதொரு முயற்சிதான்.

     

    காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்

     

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குட்டி இளவரசன் / Kutti Ilavarasan / The Little Prince Tamil

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    அந்த்வான் து செந்த் – எக்சுபெரி

    தமிழில்: ச. மதனகல்யாணி

     

    குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

     

    நூலிலிருந்து:

    “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”

     

    “இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”

     

    “உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    முறிந்த பாலம் ( Murintha Paazham )

    Rs. 1,050.00
    or 3 X Rs.350.00 with

    தோர்ன்டன் ஒயில்டர்

    தமிழில்: இரா. நடராசன்

     

    தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.

    or 3 X Rs. 350.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மண்டியிடுங்கள் தந்தையே / Mandiyidungal Thandhaiye

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

     

    எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை.

    அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை.

     

    இதுவே முதன்முறை,  அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.

    இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள்.

    சோபியாவின் டயரிக்குறிப்புகள்.

    டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள், பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள், எனத்தேடித்தேடி படித்தேன்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சித்தார்த்தன் / Sithardhan / Siddhartha Tamil

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    ஹெர்மன் ஹெஸ்ஸே

     

    நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.

    இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.

     

    கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும் கழிவிரக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. 1922ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து பல மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறது. எளிமையான உரைநடையில், தேடலுள்ளவர் அனைவருக்கும் மிகவும் ஆழமான செய்தியை ஹெஸ்ஸே அனுப்பியுள்ளார்.

     

    சத்தியத்திற்கான தேடலில் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறும் ஓர் இளைஞனைச் சுற்றிக் கதை சுழல்கிறது. ஒரு பிராமணச் சிறுவன் தன் தேடலைப் பின்தொடர்ந்து, அறிவொளி பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு தளத்திற்குச் செல்கிறான். அவன் தந்தைக்கு ஒரு பக்தியுள்ள பிராமணனாக, சமணனாக, பணக்கார வணிகனாக, காதலனாக, எளிய படகோட்டியாக வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

     

    இதன்மூலம் அவன் தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் உணர்தல்களுக்கும் உட்படுகிறான், ஒரு பயிற்சியாளனாக பாராயணம் செய்யவோ, பக்தனாகத் தியானிக்கவோ இல்லை. சித்தார்த்தன் உலகத்துடன் கலக்க வருவதில்லை, இயற்கையின் தாளங்களுடன் எதிரொலிக்கிறான்; ஆற்றிலிருந்து பதில்களைக் கேட்க வாசகரின் காதைக் கீழே வளைக்கிறான்.

     

    இந்தப் பதிப்பில் “வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதி இடம்பெறுகிறது. அதில் நாவல், நூலாசிரியர் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதற்கான வினாக்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    தாய் ( Thaai )

    Original price was: Rs. 3,630.00.Current price is: Rs. 3,390.00.
    or 3 X Rs.1,130.00 with

    மாக்ஸிம் கார்க்கி

    தமிழில்: தொ. மு. சி. ரகுநாதன்

     

    படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள். இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள். இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.

    or 3 X Rs. 1,130.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    நிமித்தம் / Nimiththam

    Original price was: Rs. 2,890.00.Current price is: Rs. 2,690.00.
    or 3 X Rs.896.67 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா?

    ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள்.

    இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது.

     

    இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.

    புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான்.

    வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம்.

    நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது.

     

    தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன.

     

    மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஸீரோ டிகிரி ( Zero Degree )

    Rs. 2,650.00
    or 3 X Rs.883.33 with

    சாரு நிவேதிதா

     

    ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வுப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல். இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல். Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.

     

    அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. – சாரு நிவேதிதா

    or 3 X Rs. 883.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    அன்னா கரீனினா 2 பாகங்கள் ( Anna Karenina )

    Original price was: Rs. 9,900.00.Current price is: Rs. 8,900.00.
    or 3 X Rs.2,966.67 with

    லியோ டால்ஸ்டாய்

      தமிழில்: நா. தர்மராஜன்

     

    அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.

     

    மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.

    or 3 X Rs. 2,966.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    19 வயது சொர்க்கம் ( 19 Vayadhu Sorgam )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    ராஜேஷ்குமார்

     

    தன் நண்பனின் வீட்டில் தன் புதுமனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறான் நாயகன், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், சிலநாட்களில் அவனுக்கொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடைகிறது. அவனது புதுமனைவி காணாமல் போய்விட்டால் என்னு ஊருக்கு வந்தவன் அவளைக் காணாமல் பதறிப் போகிறான். எல்லா இடங்களிலும் அவளைத் தேடுகிறான். காவல்துறை உள்ளே நுழைகிறது. அவன் கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு சாதமாக அமைய மறுக்கிறது. அவளுக்கு என்ன நடந்தது? எங்கே சென்றாள்…? அவனுக்கு மறுபடியும் அந்த… 19 வயது சொர்க்கம் கிடைக்குமா? ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் 19 வயது சொர்க்கம்.

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இரண்டாவது தாலி ( Irandavathu Thaali )

    Rs. 1,450.00
    or 3 X Rs.483.33 with

    ராஜேஷ்குமார்

     

    சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து  பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம்  பயம் கலந்த மரியாதை.

     

    ஒரு சமயத்தில் தன்  உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின்  அப்பா தன்னுடனே இருக்கும்  அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.

     

    காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு  இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும்  துரோகம்செய்ய  அவளுக்கு மனம் வரவில்லை.

     

    குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள்  சார்ந்தவர்களின் வாழ்க்கையையும்  புரட்டிப் போடுகிறது.

     

    கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும்  செய்யும்.

     

    பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும்  என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?  அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில்  இரண்டாவது தாலி.

    or 3 X Rs. 483.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்கள்) ( Karamazov Sagothararkal )

    Original price was: Rs. 11,490.00.Current price is: Rs. 10,990.00.
    or 3 X Rs.3,663.33 with

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

      தமிழில்: கவிஞர் புவியரசு

     

    உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள்.அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர். கோ. தேவராசன்.1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது.

     

    கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள்… கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள்… இதில் வரும் கேரக்டர்கள்!மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குழப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான்….. நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்த்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர்.

    or 3 X Rs. 3,663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அமிர்தம் என்றால் விஷம் ( Amirtham Endral Visham )

    Rs. 2,100.00
    or 3 X Rs.700.00 with

    ராஜேஷ்குமார்

     

    எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது. அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன. இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது. பல கோணங்கள். பல பார்வைகள். விசாரணையின்   ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது…காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது.

     

    இது இருதுருவங்களுக்குமான  போர்…இதில் ஜெயிக்கப் போவது யார் ?

    or 3 X Rs. 700.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    போரும் வாழ்வும் (3 பாகங்கள்) ( Porum Vaazhvum )

    Original price was: Rs. 18,150.00.Current price is: Rs. 16,490.00.
    or 3 X Rs.5,496.67 with

    லியோ டால்ஸ்டாய்

      தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்

     

    லியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும் ஒன்று.

     

    போரும் வாழ்வும் ரஷ்யாவின் ”இலியட், ஒடிசி” என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.

     

    போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.

     

    பிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.

     

    இரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.

     

    மேலும் நடக்காதவற்றை நடந்ததாக நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலு‌ம் பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக பகடி செய்கிறது.

     

    சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான சூழலில் நிக்கலஸ் பார்ப்பதும் மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை பேருருவமாக ஆண்ட்ரூ மதித்த நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில் எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும் இல்லாமல் ஆக்குகின்றன.

     

    –  சுரேஷ் பிரதீப்

    or 3 X Rs. 5,496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கோபல்ல கிராமம் ( Gopalla Kiramam )

    Rs. 1,580.00
    or 3 X Rs.526.67 with

    கி. ராஜநாராயணன்

     

    பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    or 3 X Rs. 526.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தனிமையின் நூறு ஆண்டுகள் ( Thanimaiyin Nooru Aandukal ) One Hundred Years of Solitude

    Rs. 2,970.00
    or 3 X Rs.990.00 with

    காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

    தமிழில்: சுகுமாரன், ஞாலன் சுப்பிரமணியன்

     

    லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல்.

     

    ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.

    or 3 X Rs. 990.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தோட்டியின் மகன் ( Thotiyin Magan )

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    தகழி சிவசங்கரப்பிள்ளை

    தமிழில்: சுந்தர ராமசாமி

     

    நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குல்சாரி / Kulsari

    Rs. 900.00
    or 3 X Rs.300.00 with

    சிங்கிஸ் ஐத்மாத்தவ்

     

    இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்ற பரப்புரையை இந்தக் குறுநாவல் தகர்க்கிறது.

     

    சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கதை படிப்போர் நெஞ்சைக் கவர்ந்து ஈர்க்கிறது.

    இந்தக் குறுநாவலில் இடம்பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.

    or 3 X Rs. 300.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அன்புள்ள ஏவாளுக்கு / Anbulla Evaalukku

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ஆலிஸ் வாக்கர் (ஆசிரியர்), ஷஹிதா (தமிழில்)

     

    உக்கிரமான உணர்வெழுச்சியும், நீடித்து நிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது. ஆலிஸ் வாக்கர் ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்தாளர்.- தி நியூயார்க் டைம்ஸ்

     

    பிரமாதம், உலக இலக்கியத்தில் என்றென்றைக்குமான இடத்தைப் பிடிக்கும் எழுத்து- சான் ஃப்ரான்சிஸ்கோ க்ரானிக்கிள்

     

    தி கலர் பர்பிள் எப்போதைக்குமான முக்கியத்துவம் பெற்ற அமெரிக்கப் புதினம்- நியூஸ்வீக்

     

    அருமையான கதாபாத்திரங்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல், நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று-எஸ்ஸென்ஸ் பத்திரிக்கை.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    கடல் புறா (மூன்று பாகங்கள்) ( Kadal Pura – 3 Parts )

    Original price was: Rs. 7,260.00.Current price is: Rs. 6,790.00.
    or 3 X Rs.2,263.33 with

    சாண்டில்யன்

     

    கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

    or 3 X Rs. 2,263.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    யவன ராணி (இரண்டு பாகங்கள்) ( Yavana Rani – 2 Parts )

    Original price was: Rs. 5,200.00.Current price is: Rs. 4,990.00.
    or 3 X Rs.1,663.33 with

    சாண்டில்யன்

     

    யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.

     

    கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை – திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.

     

    கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.

    or 3 X Rs. 1,663.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    கிரானடா (நாவல்) ( Granada )

    Original price was: Rs. 2,470.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    றள்வா ஆஷூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )

    Original price was: Rs. 1,450.00.Current price is: Rs. 1,390.00.
    or 3 X Rs.463.33 with

    றள்வா ஆஷூர்
    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

    – நாவலிலிருந்து…

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    திருமுகம்: ஈரானிய நாவல் ( Thirumugam ) Kiss The Lovely Face of God

    Rs. 1,150.00
    or 3 X Rs.383.33 with

    முஸ்தஃபா மஸ்தூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக  அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

    இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.

    or 3 X Rs. 383.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan ( 5 பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி )

    Original price was: Rs. 8,560.00.Current price is: Rs. 7,900.00.
    or 3 X Rs.2,633.33 with

    கல்கி

    or 3 X Rs. 2,633.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கள்வனின் காதலி (படங்களுடன்) / Kalvanin Kadhali

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    கல்கி

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும் ( Kadunthuyaruttra Kadhalarkal Sadhura )

    Original price was: Rs. 450.00.Current price is: Rs. 420.00.
    or 3 X Rs.140.00 with

    தக்ஷிலா ஸ்வர்ணமாலி

    தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

     

    இந்தத் தொகுப்பு கவிதையா? ஓவியமா? சிறுகதையா? சிறுகதைகள் பலவும் சேர்ந்தவையா? குறுநாவலா? என்றெல்லாம் யோசிப்பது அநாவசியம் என்றே கருதுகிறேன். இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி குடும்ப ஜீவிதம் நோக்கி பின்வாங்க வேண்டி நேர்ந்த சிலருக்குள்ளே காணப்படும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் துயரத்தை எனக்கு இவ்வாறாக ஒரு சித்திரமாக வரையத் தேவைப்பட்டது. என்றாலும், நீங்கள் இதை இவ்வாறே பார்க்க வேண்டியதில்லை. இதை வாசிக்கும் போது, இதைப் பார்க்கும் போது இயல்பாகவே எதையேனும் உணர்வோமானால், நாங்கள் அதை அனுபவிப்போம்.

    —- தக்ஷிலா ஸ்வர்ணமாலி

    or 3 X Rs. 140.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பார்த்திபன் கனவு (Parthiban Kanavu)

    Rs. 1,780.00
    or 3 X Rs.593.33 with

    கல்கி

     

    இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். கல்கியின் மற்றொறு புதினமான சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை காணலாம்.

    or 3 X Rs. 593.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் ( Thozhunoyaliyum Panriyin Elumbum )

    Original price was: Rs. 820.00.Current price is: Rs. 790.00.
    or 3 X Rs.263.33 with

    முஸ்தஃபா மஸ்தூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த தத்துவ நோக்கை முன்வைக்கிறது. எந்தச் சிக்கலுமின்றி வாசகர்கள் மீது தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் ஆசிரியர் இப்பிரச்சினைகளை வார்த்தைகளுக்கும் கதைகளுக்கும் பின்னால் சாமர்த்தியமாக ஒளித்துவைத்திருக்கிறார்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பதினோரு நிமிடங்கள் ( Pathinoru Nimidangal )

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    பாவ்லோ கொய்லோ

     

    உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    வேர்கள் ( Vergel ) The Roots

    Original price was: Rs. 9,900.00.Current price is: Rs. 8,990.00.
    or 3 X Rs.2,996.67 with

    அலெக்ஸ் ஹேலி

    தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்

     

    அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.

     

    வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.

     

    அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்,

    or 3 X Rs. 2,996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நோர்வீஜியன் வுட் ( Norwegian Wood Tamil )

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    ஹாருகி முரகாமி
    தமிழில்: க.சுப்பிரமணியன்

     

    இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சில நேரங்களில் சில மனிதர்கள் ( Sila Nerangalil Sila Manitharkal )

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    ஜெயகாந்தன்

     

    “சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்

     

    இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    சிவகாமியின் சபதம் ( Sivagamiyin Sabatham )

    Original price was: Rs. 5,940.00.Current price is: Rs. 5,700.00.
    or 3 X Rs.1,900.00 with

    கல்கி

     

    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது.

     

    முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

     

    மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும்.

     

    எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி… வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

    or 3 X Rs. 1,900.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உறுபசி / Urupasi

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை.

     

    சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது.

    எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பொன்னியின் செல்வன் (Vol.1 – Vol. 5) / Ponniyin Selvan

    Original price was: Rs. 13,190.00.Current price is: Rs. 12,290.00.
    or 3 X Rs.4,096.67 with

    கல்கி

     

    பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.
     

    சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை – அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
     

    இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல…

    or 3 X Rs. 4,096.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குற்ற விசாரணை / Kutra Visaranai

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    லெ கிளேஸியா

    தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா

     

    மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை ‘குற்ற விசாரணை’யை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.

     

    1963இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது. ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் ‘குற்ற விசாரணை’.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more