Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
பணம் தரும் மந்திரம் / Panam Tharum Manthiram
Rs. 790.00
எஸ். கே. முருகன்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: பணம் தரும் மந்திரம்
Author: எஸ். கே. முருகன்
Language: Tamil
Binding:Paperback
Pages:
Weight:
Published Year: 2022
Publisher: Vikatan
ISBN: 9788195164707
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?
· தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?
· கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?
தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.
வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.
-
இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
Rs. 990.00Original price was: Rs. 990.00.Rs. 890.00Current price is: Rs. 890.00.or 3 X Rs.296.67 withRead moreகனினிகா மிஸ்ரா
கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும்.
-
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் ( Selvantharakkum Sulaba Vinganam ) The Science of Getting Rich
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
-
இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் 8 ) / Insurance (Alla Alla Panam 8)
Rs. 1,690.00Original price was: Rs. 1,690.00.Rs. 1,490.00Current price is: Rs. 1,490.00.or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப் பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.”
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
பணம்சார் உளவியல் ( Panamsar Ulaviyal ) The Psychology of Money
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreமார்கன் ஹெளஸ்ஸேல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
-
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு / SindhithuParu, Selvandhan Aahu / Think And Grow Rich Tamil
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartநெப்போலியன் ஹில்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 2500க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
-
நாட்டுக் கணக்கு ( Naattu Kanakku )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.
தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது?
அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது?
அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?
சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது?
அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா?
எனில் யாரிடமிருந்து?
அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா?
அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா?
ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்?இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
-
செல்வந்தர் ஆகுங்கள் நீங்கள் தூங்கும்போது
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartபென் ஸ்வீட்லாண்ட்
தமிழில்: என். ஜெயராமன், கே.ஆர். ஸ்ரீநிவாசன்
இப் புத்தகத்தை முடிக்கும் முன்னரே நீங்கள் இவற்றை நிச்சயம் தெரிந்து கொள்வீர்கள்:
- யார் உங்களிடம் எதைச் சொல்லியிருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் உண்மையான இலக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது.
- உங்கள் சுய-ஆளுமை. உங்கள் உண்மையான ஆற்றல்கள், உங்களிடம் மறைந்திருக்கும் அளவற்ற திறமைகளுடன் எவ்வறு உங்களை இணைத்துக் கொள்வது.
- நீங்கள் விரும்புவதைச் சாதிக்க மற்றவர்கள் உங்களுக்கு உதவி அளிக்க விருப்பத்துடன் முன்வர வழைக்கும் சத்தியம், ஆழமான தன்னம்பிக்கை, உத்வேகம் மற்றும் நல்லெண்ணங்களை எவ்வாறு உங்கள் மனதில் நிறைத்துக் கொள்வது
- உங்கள் சொந்த வெற்றிகளைப் பறைசாற்றும் பிரகாசமான மனக் காட்சிகளை எவ்வாறு முழுமையாகத் தேர்ந்தெடுத்து உங்கள் மனதில் பதித்து தக்க வைத்துக் கொள்வது.
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி