Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1) ( Pangusanthai: Adippadaikal )
Rs. 2,090.00
சோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.
In stock
About the Author
சோம. வள்ளியப்பன் ஒரு இந்திய எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் ஆகிய துறைகளில் நிபுணர் ஆவார். சுய மேம்பாடு, பங்குச் சந்தை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 60 புத்தகங்களை எழுதியுள்ளார்.
Book Specifications
Title: பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1)
Author: Soma. Valliyappan / சோம. வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 248
Weight: 250g
Published Year: 2005
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9788183680059
Print size: Please feel free to drop us a message.
Related products
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்! ( Selvapurikkana Viraivup Paathai )
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartஎம்ஜே டிமார்க்கோ
தமிழில்: PSV குமாரசாமி
“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,990.00or 3 X Rs.1,663.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசோம. வள்ளியப்பன்
அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.
உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.
தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.
‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.
-
விற்பனைத் திறமையில் அற்புதம் (vitpanai thiramaiyil atpudham)
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreலெஸ் கிப்ளின்
இந்த புத்தகம் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றி பேசுகிறது- மக்களுக்கு எப்படி விற்க வேண்டும். தயாரிப்பு அறிவு எளிதில் பெறப்படும் டிஜிட்டல் யுகத்தில், விற்பனையைப் பெற மக்களைக் கையாளும் கலை, முன்பை விட மிகவும் பொருத்தமானது. மக்களுடனான திறன் மற்றும் மக்களைக் கையாளும் கலை போன்ற மில்லியன் நகல் பெஸ்ட்செல்லர்களின் ஆசிரியரான லெஸ் கிப்லின், உங்கள் விற்பனையை விண்ணில் உயர்த்துவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறார். இந்தப் புத்தகம் உங்களுக்கு:
* விற்பனையில் வெற்றி
* விற்பனையைத் திறப்பதில் மாஸ்டர் ஆக
* ஒத்துக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
* விற்பனையை நடத்துவதற்கான நுட்பங்களைப் பெறுங்கள்
* அருமையான விற்பனை விளக்கத்தை உருவாக்குங்கள்
* விற்பனையை மூடுங்கள். -
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4) ( Pangusanthai: Portfolio Muthaleedugal )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
-
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் (21am Nutraandukaana business)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாய்ப்புகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
-
பிசினஸ் ஸ்கூல்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: க. சுப்பிரமணியன்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
-
பைப்லைனில் பணம்: உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாகப் பணம் பாய்ந்தோடி வந்து கொண்டேயிருக்க
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreபர்க் ஹெட்ஜஸ்
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.
பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன – வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..