Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
போராடுவதே நமது கடமை ( Poraduvathe Namathu Kadamai )
Rs. 1,650.00

ஃபிடல் காஸ்ட்ரோ
ஆட்சி பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் காஸ்ட்ரோ கட்டிலுக்கு பாரமாக கிடக்கவில்லை…
தனது 90 வயதில் பலத் துறை (உலக) அறிஞர்களை ஒன்று கூட்டி உரையாடுகிறார்…
இயற்கை அதன் பரிணாம வளர்ச்சி போக்கில் பல நூறு கோடி ஆண்டுகளில் உருவாக்கிய செல்வங்களை முதலாளித்துவம் ஒரு நூறாண்டுகளில் அழித்தொழிப்பதை பற்றி பேசுகிறார்கள்…
மனித இனமே அழிந்துவிடும் அபாயம் பற்றி பேசுகிறார்கள்…
ஒற்றை பயிர் விவசாய முறையை பற்றி பேசுகிறார்கள்…
காடுகளின் பன்மை தன்மையை பற்றி பேசுகிறார்கள்…
சமூக ஊடகங்கள் ஐந்தாம் அதிகாரம் என்று பேசுகிறார்கள்…
வளர்ந்து வரும் விழிப்புணர்வை நம்பிக்கையுடன் அலசுகிறார்கள்…
போராடுவது நமது கடமை என்கிறார்கள்…
இயக்கங்களின் தலைவர்கள், ஊழியர்கள் எவர் கவனத்திலிருந்தும் நழுவக்கூடாத நூல்…
Out of stock
Notify me when stock available
Author | ஃபிடல் காஸ்ட்ரோ |
---|---|
Binding | Paperback |
Pages | 242 |
Published Year | 2019 |
Publisher | சிந்தன் புக்ஸ் |
Related products
-
ஹிட்லர்: வாழ்வும் அரசியலும் ( Hitler: Vaazhvum Arasiyalum )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreபா. ராகவன்
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர்.
உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர். தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
-
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
-
புலனாய்வாளரின் குறிப்புகள் ( Pulanayvaalarin Kurippugal )
Rs. 590.00or 3 X Rs.196.67 withRead moreலெவ் ஷெய்னின்
தமிழில்: கே. சுப்பிரமணியன், முஹம்மத் செரீஃப்
…பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றோடு புலனாய்வாளர் இடையறாது தொடர்பு கொள்ள நேர்கிறது. மறுநாளே தனது மேசைமீது எத்தகைய வழக்கு வந்து விழும் என்பதை எந்தப் புலனாய்வாளராலும் முன்கூட்டிக் கூற முடியாது. கொள்ளை, பொறாமையால் விளைந்த கொலை, கையாடல், லஞ்சம் என எதைப் பற்றிய வழக்காயினும் சரியே, குற்றம் இழைத்த மனிதர்களே அதில் எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவரவர் சுபாவம், உணர்வெழுச்சி, சூழல் போன்ற ஒவ்வொன்றும் தனித்தனியானவை. புலனாய்வாளர் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஓர் எழுத்தாளருக்கும் ஒரு புலனாய்வாளருக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன…
– லெவ் ஷெய்னின்
-
சச்சின் டென்டுல்கர் சுயசரிதை: என் வழி தனி வழி ( Sachin Tendulkar: Playing It My Way Tamil)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreசச்சின் டென்டுல்கர்
எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான் பேசியாக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.
இதோ நான் எனது கடைசி இன்னிங்ஸின் முடிவில் நின்று கொண்டிருக்கிறேன், கடைசியாக பெவிலியன் நோக்கி நடைபோடும் போது முதன் முதலாக கிரிக்கெட் மட்டையை தொட்ட காலம் முதல் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சுயசரிதை அந்த அடிப்படையில் எழுதப்பட்டதே.
– சச்சின் டென்டுல்கர்
-
எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreஇலந்தை சு. இராமசாமி
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.
எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.
சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.
எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.
இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.
தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?
-
என் வாழ்க்கை பயணம் (En Vaazhkai Payanam) My Life in Full
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartஇந்திரா கே. நூயி
இந்திரா கே. நூயியின் “மை லைஃப் இன் ஃபுல்” என்பது உலகின் மிகவும் போற்றப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரின் குறிப்பிடத்தக்க பயணத்தை விவரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவுக் குறிப்பு ஆகும்.
இந்தியாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒரு மூலோபாய சிந்தனையாளர் மற்றும் நிர்வாகியாக உயர்ந்தது வரை, அவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் நேரடிக் காட்சியை வாசகர்களுக்கு வழங்குகிறது, அவரது தலைமைத்துவ தத்துவம், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வழியில் அவர் செய்த தியாகங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். . கருணை, மனக்கசப்பு மற்றும் நல்ல நகைச்சுவை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட, “மை லைஃப் இன் ஃபுல்” என்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு அசாதாரண வாழ்க்கையின் அழுத்தமான பிரதிபலிப்பு மற்றும் வெற்றிக்கான வரைபடமாகும்.
-
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreஆன் ஃப்ராங்க்
தமிழில்: மைதிலி சம்பத்
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம். ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,
அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…
-
நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (Naval Ravikanthin Naatkurippuhal) The Almanack Of Naval Ravikant
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஎரிக் ஜோர்கன்சன்
செல்வந்தராக ஆவது என்பது வெறும் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல; மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போது நம்மோடு பிறந்த விஷேச குணம் அல்ல. இந்த அபிலாஷைகள் நம்மால் எட்டப்பட முடியாதவை அல்ல. செல்வத்தை உருவாக்குவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் கற்றுக் கொள்ளப்படக்கூடிய திறன்களே.
அத்திறன்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் கற்றுக் கொள்வது? நம்முடைய முயற்சிக்கு வழிகாட்டுகின்ற கொள்கைகள் எவையெவை?
நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர், ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர். செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொகுப்புதான் இந்நூல். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் எப்படி அடைவது என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் ஒரு நூல் அல்ல இது. மாறாக, நீங்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கான உங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.
-
உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்: நாஜி வதை முகாமிலிருந்து (Ulahileye Mahilchiyana Manidhar)
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஎடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.
அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.
-
SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅகியா மொரிடா
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
Reviews
There are no reviews yet.