Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
காதலில் இருந்து திருமணம் வரை ( Kadhalil Irunthu Thirumanam Varai )
Rs. 990.00
சோம வள்ளியப்பன்
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.
காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே
Out of stock
Notify me when stock available
About the Author
BHEL, வேர்ல்பூல், பெப்சி, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர். BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் செய்பவர். அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், உட்பட தமிழில் 50 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில. ஆனந்தவிகடன், குமுதம், நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 19 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் தலைமை நிர்வாகியாக இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து வருகிறார்.
Book Specifications
Title: காதலில் இருந்து திருமணம் வரை
Author: Soma Valliappan / சோம வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages:
Weight:
Published Year: 2008
Publisher: Kizhakku
ISBN:
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
செக்ஸ் மேனுவல் / Sex Manual
Rs. 990.00Original price was: Rs. 990.00.Rs. 890.00Current price is: Rs. 890.00.or 3 X Rs.296.67 withRead moreமாஸ்டர்ஸ் & ஜான்சன்
கல்பனாதாசன்பாலுறவு பற்றிய மாயைகளும் கவர்ச்சியும் போகப்போக மாறி, மனித வாழ்வில் அதுவும் ஒரு பகுதி இன்றியமையாத பகுதி என்னும் பெருமிதக் கண்ணோட்டம் வளரும்.
சமுதாயம் பாலுறவு பற்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் சிந்திக்கும் நிலையால் பத்தாம்பசலித்தனங்கள் மறைந்து ஒழுக்க நெகிழ்ச்சியும் விடுதலை உணர்வும் மேம்படும். பழைய மூட நம்பிக்கைகளின் பாரத்தில் அழுந்துவது மாறும் ஆண் – பெண்ணுறவு குறித்த இருவேறு ஓரவஞ்சனை எண்ணங்கள் விலகும். ஆணும் பெண்ணும் சுதந்திரமாகத் தமது பாலுறவுக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். இத்தகைய பரிமாற்றமே முன்னேற்றத்தின் முக்கியமான படிக்கல், அதற்கான ஒரு சிறுமுயற்சியே இந்நூல்.
-
கனவுகளின் விளக்கம் / Kanavukalin Vilakkam
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreசிக்மண்ட் பிராய்ட்
தமிழில்: நாகூர் ரூமி
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா?
இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.
கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.
உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை.
விடைகள் உங்கள் கைகளிலேயே!
படித்துப் பாருங்கள்!
-
பரிசு: உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஈடித் எகர்
“ஈடித் எகரின் கதை என்னை அடியோடு மாற்றிவிட்டது” –ஓப்ரா வின்ஃபிரே
“ஈடித்தின் தனித்துவமான பின்புலம் அவருக்கு அற்புதமான உள்நோக்குகளை வழங்கியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அவருடைய பரிந்துரைகள் மக்களுக்குப் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்.” –பில் கேட்ஸ்
-
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreமிட்ச் ஆல்பம்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
–எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
–பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்“அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
–யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்“தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
–ராபர்ட் பிளை, நூலாசிரியர்“மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
— ஏமி டேன் நூலாசிரியர்“நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
–டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்“சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
–ஜெஃப் டேனியல்ஸ் -
அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு (பாகம் 1) / Ignorance to Innocence / Ariyaamaiyil Irunthu Kalangaminmaikku Paagam 1
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஓஷோ
தமிழில்: சுவாமி சியமானந்தன்
அமெரிக்காவில், ஒரேகான் மாநிலத்தில் ஓஷோ, தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை மிகச் சிறப்பானது. 99 ரோல்ஸ்ராய்ஸ் கார்களுடன், அமெரிக்க அரசியல்வாதிகள் நடுங்கும்படி சிறப்பாக உரையாற்றி, மக்களை மாற்றி வந்தார். அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு, தனது சொற்பொழிவுகளில் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நூலில் அதற்கான கேள்விகளையும் ஓஷோவின் பதில்களையும் காணமுடியும். மிகக் கடுமையாக அதே நேரம் நகைச்சுவையாகவும் பேசி இருக்கிறார்.இதுபோன்ற கட்டுரைகள் சில மட்டுமே, பிறகு அவரது பாணியில் கேள்விகளுக்கு பதில்கள் எழுகின்றன! மக்கள் என்னிடம் “எது சரியானது, எது தவறானது?” என இடைவிடாமல் கேட்கின்றனர். எனது பதில் இதுதான்” விழிப்புணர்வில் இருந்து வெளிவருவது சரியானதாக இருக்கின்றது. விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருந்து வருவது தவறானதாக உள்ளது. செயல்களில் சரி அல்லது தவறு என்பது இல்லை. அந்தச் செயல்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற ஆரம்ப இடத்தில்தான் இருக்கிறது.”ஓஷோவின் நூல்களில் இருந்து இந்நூல் வித்தியாசமானதாக இருப்பதைக் காணலாம். -
மகிழ்ச்சியான மணவாழ்க்கை (Mahilchiyana Manavazhkai) The Forgotten Secrets of Magical Marriage
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreநாகலட்சுமி சண்முகம்
ஒரு அற்புதமான வாழ்க்கைத் துணையுடன் அற்புதமான திருமணத்தை அனுபவிக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் நேரம் வரும்போது, பெரும்பாலானோர் திருமணத்தை அறியாமலேயே ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும் போது, அவர்கள் ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் மற்றும் என்ன தவறு நடந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்த புத்தகம் மகிழ்ச்சியான திருமணமான தம்பதிகளின் சிறந்த நடைமுறைகளை உங்களுக்குக் கற்பிக்கிறது மற்றும் பெரும்பாலான தம்பதிகள் தடுமாறும் பொதுவான ஆபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்று உங்களுக்குச் சொல்கிறது
-
சின்னஞ்சிறு பழக்கங்கள் Sinnanjiru Palakkangal ( Atomic Habits )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஜேம்ஸ் கிளியர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கடுகளவு மாற்றங்களை, கற்பனைக்கெட்டா விளைவுகள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
-
பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu
Rs. 6,180.00Original price was: Rs. 6,180.00.Rs. 5,870.00Current price is: Rs. 5,870.00.Read moreராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
பணம்சார் உளவியல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
-
குழந்தை வளர்ப்பு அறிவியல் ( Kulanthai Valarppu Ariviyal )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartஸ்டீவன் ருடால்ப்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.
* உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
* நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
* டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
* சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைப் பல்வேறு உண்மை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.
-
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் ( Athikamaha Sinthippathai Niruthungal ) Stop Overthinking Tamil
Rs. 1,850.00or 3 X Rs.616.67 withRead moreநிக் டிரென்டன்
தமிழில்: PSV குமாரசாமி
நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார்.
உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்:
- எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி
- உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி
- ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
- மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி