Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 2
Rs. 3,490.00 Original price was: Rs. 3,490.00.Rs. 2,690.00Current price is: Rs. 2,690.00.
கொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
‘இந்தியாவின் வரலாறு’ (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை) எனும் நூலில் புதிய கால மற்றும் அண்மைக் காலத்தில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது, இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
இப்பிரச்சினை சம்பந்தமான சோவியத் மற்றும் அயல்நாட்டு நவீன ஆராய்ச்சிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: A Histroy of India (from the middle of the 18th century to the present)/ இந்தியாவின் வரலாறு (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை)
Author: K. A. Antonova and G. G. Kotovsky / கொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி
Translator: P. Somasuntharam and Dr. R. Baskaran / பூ. சோமசுந்தரம், டாக்டர், இரா. பாஸ்கரன்
Language: Tamil
Binding: Hardcover
Pages: 574
Weight: 780g
Published Year: 1979
Tamil Translation Published Year: 1987
Publisher: Progress Publishers Moscow / முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
Dimensions: 22 x 14.5 x 2.5 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
-
1877 – தாது வருடப் பஞ்சம்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreவில்லியம் டிக்பி
உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன.
வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி நிற்கும் நூல்களில் ஒன்று, வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேய எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும் உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தைக் கூர்மையாகவும் நேர்மையாகவும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர்.
உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத விநோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியைக் குத்திக் கிளறிவிடும் வரலாற்றின் கதையும்கூட.
-
ஆர்யபடரின் கணிதம்
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreபத்ரி சேஷாத்ரி
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.
ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி.
எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.
-
பின்லாந்து காட்டும் வழி ( Finland Kaattum Vazhi ) 100 Social Innovations from Finland
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஇல்க்கா டாய்பாலே
தமிழில்: காயத்திரி மாணிக்கம்
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது.
இந்தப் புத்தகம் பின்லாந்தில் ஏற்பட்ட திகைக்கவைக்கும் 108 சமூகக் கண்டு பிடிப்புகளை எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. சமையலறையில் தொடங்கி அந்நாட்டின் நாடாளுமன்றம்வரை: மருத்துவம் தொடங்கி வர்த்தகம்வரை; அறிவியல் தொடங்கி அடிப்படைக் கட்டுமானம்வரை; கலாசாரம் தொடங்கி பழக்கவழக்கங்கள்வரை ஒவ்வொரு துறையையும் குறிப்பிடத்தக்கமுறையில் வளப்படுத்திய சமூகக் கண்டுபிடிப்புகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
உதாரணத்துக்கு, மருத்துவத் துறையில் என்னென்ன புதுமையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்; எல்லோருக்கும் தரமான கல்வி சென்று சேர்வதை எப்படி உறுதிபடுத்திக்கொள்வது; கல்வியின் தரத்தை எப்படி நிர்ணயம் செய்வது: மருத்துவம், கல்வி போன்றவற்றை ஓர் அரசு இலவசமாக வழங்கலாமா; சமூக மாற்றத்துக்கு மக்கள் செய்யவேண்டியது என்ன; ஓர் அரசின் கடமைகள் என்னென்ன என அனைத்தும் இந்நூலில் உள்ளன.
- மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்நூல் தற்சமயம் 17 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
கியூப புரட்சிப் போர் குறிப்புகள் ( Cuba Puratchip Por Kurippugal )
Rs. 2,890.00or 3 X Rs.963.33 withRead moreசே குவேரா
சே குவேரா எனும் பெயர், சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில், அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் அவன்.
வரலாற்றின் போக்கினில் பற்பல புரட்சியாளர்களின் பெயர்கள் தேய்ந்துபோக, சே குவேரா எனும் பெயர் மட்டும் இன்னும் இன்னுமென ஒளிரக் காரணம் என்ன? உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை அடுத்து தத்துவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும், திரைப்பட மேதைகளையும் கவர்ந்தவர்களில் அவனே தலையானவன்.
ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைமைத்துவப் போராளியாக அதிகம் வாசித்தவன்; படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன்; தனது அனுபவங்களை, தனது சிந்தனைகளை அதிகமும் எழுத்தில் பதிவுசெய்தவன் உலக வரலாற்றில் சே குவேராதான்.
-
பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை ( Palestine – Israel Por: Oru Varalaatrup Paarvai )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartநாகேஸ்வரி அண்ணாமலை
‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்
‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.
-
செங்கிஸ்கான் ( Genghis Khan Tamil )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
-
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Original price was: Rs. 2,790.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
விஜயநகர பேரரசு
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withஎஸ். கிருஷ்ணன்
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
செர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!
இதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.