Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்கள்) ( Karamazov Sagothararkal )
Rs. 11,490.00 Original price was: Rs. 11,490.00.Rs. 10,990.00Current price is: Rs. 10,990.00.
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தமிழில்: கவிஞர் புவியரசு
உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள்.அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர். கோ. தேவராசன்.1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது.
கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள்… கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள்… இதில் வரும் கேரக்டர்கள்!மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குழப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான்….. நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்த்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: The Brothers Karamazov
Author: Fyodor Dostoevsky
Translator: Kavingar Puviyarasu
Binding: Hardcover
Pages: 1560
Published Year: 1880
Tamil Translation Published Year: 2014
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் / NCBH
ISBN: 9788123420455
Related products
-
முறிந்த பாலம் ( Murintha Paazham )
Rs. 1,050.00or 3 X Rs.350.00 withRead moreதோர்ன்டன் ஒயில்டர்
தமிழில்: இரா. நடராசன்
தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.
-
கோபல்ல கிராமம் ( Gopalla Kiramam )
Rs. 1,580.00or 3 X Rs.526.67 withRead moreகி. ராஜநாராயணன்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
போரும் வாழ்வும் (3 பாகங்கள்) ( Porum Vaazhvum )
Rs. 18,150.00Original price was: Rs. 18,150.00.Rs. 16,490.00Current price is: Rs. 16,490.00.or 3 X Rs.5,496.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்
லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும் ஒன்று.
போரும் வாழ்வும் ரஷ்யாவின் ”இலியட், ஒடிசி” என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.
போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.
பிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.
இரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.
மேலும் நடக்காதவற்றை நடந்ததாக நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலும் பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக பகடி செய்கிறது.
சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான சூழலில் நிக்கலஸ் பார்ப்பதும் மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை பேருருவமாக ஆண்ட்ரூ மதித்த நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில் எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும் இல்லாமல் ஆக்குகின்றன.
– சுரேஷ் பிரதீப்
-
விலங்குப் பண்ணை ( The Animal Farm )
Rs. 860.00or 3 X Rs.286.67 withRead moreஜார்ஜ் ஆர்வெல்
லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
-
19 வயது சொர்க்கம் ( 19 Vayadhu Sorgam )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreராஜேஷ்குமார்
தன் நண்பனின் வீட்டில் தன் புதுமனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறான் நாயகன், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், சிலநாட்களில் அவனுக்கொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடைகிறது. அவனது புதுமனைவி காணாமல் போய்விட்டால் என்னு ஊருக்கு வந்தவன் அவளைக் காணாமல் பதறிப் போகிறான். எல்லா இடங்களிலும் அவளைத் தேடுகிறான். காவல்துறை உள்ளே நுழைகிறது. அவன் கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு சாதமாக அமைய மறுக்கிறது. அவளுக்கு என்ன நடந்தது? எங்கே சென்றாள்…? அவனுக்கு மறுபடியும் அந்த… 19 வயது சொர்க்கம் கிடைக்குமா? ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் 19 வயது சொர்க்கம்.
-
அன்னா கரீனினா 2 பாகங்கள் ( Anna Karenina )
Rs. 9,900.00Original price was: Rs. 9,900.00.Rs. 8,900.00Current price is: Rs. 8,900.00.or 3 X Rs.2,966.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: நா. தர்மராஜன்
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.
மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.
-
நோர்வீஜியன் வுட் ( Norwegian Wood Tamil )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஹாருகி முரகாமி
தமிழில்: க.சுப்பிரமணியன்இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.
-
அஷேரா ( Ashera )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartசயந்தன்
அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.
அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.
நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப் போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?
-
அமிர்தம் என்றால் விஷம் ( Amirtham Endral Visham )
Rs. 2,100.00or 3 X Rs.700.00 withRead moreராஜேஷ்குமார்
எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது. அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன. இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது. பல கோணங்கள். பல பார்வைகள். விசாரணையின் ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது…காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது.
இது இருதுருவங்களுக்குமான போர்…இதில் ஜெயிக்கப் போவது யார் ?
-
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது ( Yaarukkaha Indha Mani Olikkirathu )
Rs. 6,790.00or 3 X Rs.2,263.33 withAdd to cartஎர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: சி. சீனிவாசன்
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான்.
எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
Reviews
There are no reviews yet.