Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
வாழ்வின் கீதம் / Vaazhvin Geetham
Rs. 2,300.00
ஓஷோ
இருளைக் கண்டு பயம் என்பது நாம் தனியாளாக விடப்படுவதனால் ஏற்படும் பயத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் தனிமையின் பயம், இருளின் பயத்தோடு சேர்ந்து வருகிறது.
வெளிச்சத்தில் நீ முற்றிலுமாக தனிமையில் இல்லை, உன்னால் மற்றவர்களைப் பார்க்க முடியும்.
பதிலாக இருளில் எத்தனை பேர் அங்கே உட்கார்ந்திருந்தாலும் நீ தனிமையில்தான் இருக்கிறாய் மற்றவர்கள் தெரிவதில்லை.
மற்றவர்கள் அங்கே இருக்கிறார்களா, இல்லையா என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியாது. மனிதன் இருளில் தனிமையில் இருக்கிறான். யாராவது தனிமையில் இருக்க விரும்பினால் அவர்கள் இருளுக்குள் நுழைய வேண்டும்.
யோகா, தியானம், சமாதி ஆகிய இவையாவும் இருளுக்குள் ஊடுருவும் தன்மையைக் குறிக்கும் பிற வார்த்தைகளே இந்த விஷயங்களை ஒரு அறிமுகம் போல நான் ஏன் சொல்கிறேன் என்றால், இருளை உன்னால் நேசிக்க முடியா விட்டால், வாழ்வின் மிகப் பெரிய உண்மைகளை அறியாமல் நீ வழி மாறிப்போய்விடுவாய்.
அடுத்த முறை நீ இருளுக்குள் இருக்க நேரிட்டால், அதனுள் நேரிடையாகப் பார், அது உன்னை பயமுறுத்தவில்லை என்பதை நீ உணர்வாய். உன்னைச் சுற்றி இருள் இருந்தால், அதனுள் ஒன்றிவிடு, அதனுள் சென்றுவிடு. ஒளி உனக்கு ஒருபோதும் கொடுக்க முடியாத ஒன்றை இருள் உனக்கு கொடுப்பதை நீ காண்பாய்.
வாழ்வு அன்னையின் கருவறை இருளில்தான் பிறக்கிறது. நாம் இருளுக்குள்ளிருந்து பிறப்பு எனும் கதவு வழியாக வருகிறோம், இறப்பு எனும் கதவு வழியாக இருளில் மறைந்து போகிறோம்.
Out of stock
Notify me when stock available
About the Author
1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்தவர்.
Book Specifications
Binding: Paperback
Pages: 420
Published Year:
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
ISBSN: 978-8184028409
Related products
-
பித்தன் The Prophet (Piththan)
Rs. 850.00or 3 X Rs.283.33 withRead moreகலீல் ஜிப்ரான்
கலீல் கிப்ரான்( Kahlil Gibran ) – என்ற ஞானி லெபனான் நாட்டவர். இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர். இவருடைய தாய்மொழி அரபி. ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர், ”THE PROPHET” என்னும் மிகச் சிறந்த நூலை இவர் ஆங்கிலத்தில் இயற்றினார். இதை ஸ்ரீஅருண் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மூலநூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம்.
-
எனக்குப் பிடித்த புத்தகங்கள் / Enakku Pidiththa Puthakangal
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஓஷோ
தமிழில்: ம்.ச. ஆனந்த்ஒரு மிகச் சிறந்த புத்தகம் ஒரு மிகச் சிறந்த தருணத்தில் எழுதப் பெற்றது. ஓஷோவால் பேசப்பெற்று 600 நூல்களாக மாற்றம் பெற்றது. அவர் மிகவும் விரும்பிய 168 நூல்கள் பற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஓஷோ சொல்கிறார்.
என்ன ஒரு ஞாபக சக்தி!! என்ன ஒரு கவனம்!!
தன்னைப் பாதித்த எழுத்தாளர்களைப் பற்றியும் நம்மைப் பாதிக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களையும் நமக்கு அளிக்கிறார். உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள ஞானிகளையும் நீட்சே போன்ற மேற்கத்திய தத்துவ அறிஞர்களையும் அவர்களது நூல்களையும் உங்கள் ஞானக்கண் முன் கொண்டு வருகிறார்.
-
தாயம் ( Thaayam )
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreமஹாத்ரயா ரா
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
:”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.
மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.
தியானம் வெறுமையில் இருக்கிறது.
கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.
அதுதான் வாழ்க்கை.
“குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
“…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்
-
தத்துவத்தின் தொடக்கங்கள் / Thathuvathin Thodakangal
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreதேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில்: இரா சிசுபாலன்
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்.
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..
இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..
-
ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் ( Zennum Motor Cycle Paramarippu Kazhaiyum )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreராபர்ட் எம். பிர்சிக்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் மற்றும் பேரா.ச.வின்சென்ட்
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம் பெறாமலேயே இந்தியாவை விட்டுச் சென்றார்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு இவருடைய முதல் புத்தகமான ‘ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் – பண்புகள் பற்றிய விசாரணை’ வெளியானது. இன்று வரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.
-
பேசும் அமைதி ( Stillness Speaks )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎக்கார்ட் டோலே
ந. முரளிதரன்எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவை. இந்நூலில் நமக்கு உள்ளே இருக்கும் அமைதியினைத் தொடர்பு கொள்கிறபோது, மனநிலைக் கடந்து செல்கிறோம். அங்கே ஒர் ஆழமான அமைதி கிடைக்கிறது
-
மிர்தாதின் புத்தகம் ( The Book of Mirdad )
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartமிகெய்ல் நைமி
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…
மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது!
பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய
தகுதி படைத்த புத்தகம்!
நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்
மட்டுமல்லர். எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே
மாபெரும் எழுத்தாளர்!
நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்.
எதுவுமே இதற்கு ஈடாகாது!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய
விலை மதிக்க முடியாத புத்தகம் இது!
—– ஓஷோ -
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
Rs. 490.00or 3 X Rs.163.33 withRead moreதீபக் சோப்ரா
தமிழில்: M. சீனிவாசன்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே வாழ்க்கையின் வெற்றி என்று விளக்கலாம். வெற்றிக்கு எத்தனயோ முகங்கள் உண்டு. பொருட்செல்வம் என்பது அவற்றுள் ஒன்றுதான். அத்துடன் நில்லாமல், வெற்றி என்பது ஒரு பிரயாணம். ஒரு முடிவு எல்லையல்ல. அல்லது நாம் அடைந்து விடும் முடிவான இடம் அல்ல. புத்தகங்களோ கணக்கிலடங்காதவை. காலம் மிகக்குறுகியது. ஆகவே எது மிகவும் முக்கியமோ அதை உடனே எடுத்துக் கொள்வதுதான் அறிவின் ரகசியம். அதை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சியுங்கள்.
-
ரசவாதி ( Rasavathi ) The Alchemist
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreபாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை
- Grand Prix des lectrices de Elle for roman (1995)
- Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
- Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
- 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்
“ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” — அந்தோனி ராபின்ஸ்
“உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” — ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி
“இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். — ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்
-
பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu
Rs. 6,180.00Original price was: Rs. 6,180.00.Rs. 5,870.00Current price is: Rs. 5,870.00.Read moreராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
பணம்சார் உளவியல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
Reviews
There are no reviews yet.