Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
புத்தரின் வரலாறு / Budhdharin Varalaru
Rs. 1,090.00
மயிலை சீனி.வேங்கடசாமி
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர்கள் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன.
சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.
உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும், அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன.
பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.
இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால்,
பெளத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்தசரித்திரம் எழுதப்பட்டது.
Out of stock
Notify me when stock available
About the Author
மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 – இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர், தமிழறிஞர், எழுத்தாளர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ் இலக்கண, இலக்கியங்கள், வரலாறு என்பவற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழ், பௌத்த, சமண சமயங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.
Book Specifications
Binding: Paperback
Pages: 144
Published Year: 2013
Publisher: எதிர் வெளியீடு
ISBN: 9789384646752
Related products
-
இந்திய நாகரிகம்
Rs. 3,390.00or 3 X Rs.1,130.00 withRead moreநமித் அரோரா
இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர். இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் நூல் இது.
நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம், இக்ஷ்வாகு வம்சத்தவரின் தலைநகரமான நாகார்ஜூனகொண்டா, பௌத்தர்களின் கல்வி மையமான நாளந்தா, புரியாத புதிரான
கஜுராஹோ, ஹம்பியின் விஜயநகரம், இறுதியாக வாரணாசி, மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோ போலோ போன்ற புகழ்பெற்ற பயணிகளின் சுவையான கதைகளையும் பொருத்தமான இடங்களில் அறிமுகப்படுத்துகிறார்.
தெளிவான, நேர்த்தியான நடையில், நம்முடைய முன்னோர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் எவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை நெறிப்படுத்துகின்றன, எஞ்சியவை எப்படி காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன என்று காட்டுகிறார். நம்முடைய ரத்த நாளங்களில் கலந்துவிட்ட வரலாற்றின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது இந்நூல்.
-
தே ஒரு இலையின் வரலாறு/ A Brief History of Tea
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreராய் மோக்ஷாம்உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா?
-
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
-
இரண்டாம் உலகப் போர் ( Irandam Ulagap Por )
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withAdd to cartமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஹோல்கர் கெர்ஸ்டன்
தமிழில்: உதயகுமார்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.
இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.
-
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Original price was: Rs. 2,790.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
பின்லாந்து காட்டும் வழி ( Finland Kaattum Vazhi ) 100 Social Innovations from Finland
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஇல்க்கா டாய்பாலே
தமிழில்: காயத்திரி மாணிக்கம்
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது.
இந்தப் புத்தகம் பின்லாந்தில் ஏற்பட்ட திகைக்கவைக்கும் 108 சமூகக் கண்டு பிடிப்புகளை எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. சமையலறையில் தொடங்கி அந்நாட்டின் நாடாளுமன்றம்வரை: மருத்துவம் தொடங்கி வர்த்தகம்வரை; அறிவியல் தொடங்கி அடிப்படைக் கட்டுமானம்வரை; கலாசாரம் தொடங்கி பழக்கவழக்கங்கள்வரை ஒவ்வொரு துறையையும் குறிப்பிடத்தக்கமுறையில் வளப்படுத்திய சமூகக் கண்டுபிடிப்புகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
உதாரணத்துக்கு, மருத்துவத் துறையில் என்னென்ன புதுமையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்; எல்லோருக்கும் தரமான கல்வி சென்று சேர்வதை எப்படி உறுதிபடுத்திக்கொள்வது; கல்வியின் தரத்தை எப்படி நிர்ணயம் செய்வது: மருத்துவம், கல்வி போன்றவற்றை ஓர் அரசு இலவசமாக வழங்கலாமா; சமூக மாற்றத்துக்கு மக்கள் செய்யவேண்டியது என்ன; ஓர் அரசின் கடமைகள் என்னென்ன என அனைத்தும் இந்நூலில் உள்ளன.
- மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்நூல் தற்சமயம் 17 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
நெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
-
செர்னோபிலின் குரல்கள்: அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!
இதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.
-
அமெரிக்க உள்நாட்டுப் போர்/ America Ulnaattup Por / American Civil War
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreவானதி
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.”
Reviews
There are no reviews yet.