Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தமிழ் Books
Showing 361–420 of 622 results
-
அன்புள்ள ஏவாளுக்கு / Anbulla Evaalukku
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreஆலிஸ் வாக்கர் (ஆசிரியர்), ஷஹிதா (தமிழில்)
உக்கிரமான உணர்வெழுச்சியும், நீடித்து நிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது. ஆலிஸ் வாக்கர் ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்தாளர்.- தி நியூயார்க் டைம்ஸ்
பிரமாதம், உலக இலக்கியத்தில் என்றென்றைக்குமான இடத்தைப் பிடிக்கும் எழுத்து- சான் ஃப்ரான்சிஸ்கோ க்ரானிக்கிள்
தி கலர் பர்பிள் எப்போதைக்குமான முக்கியத்துவம் பெற்ற அமெரிக்கப் புதினம்- நியூஸ்வீக்
அருமையான கதாபாத்திரங்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல், நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று-எஸ்ஸென்ஸ் பத்திரிக்கை.
-
ராபின் ஷர்மாவின் சுயமுன்னேற்ற தொகுப்பு / Robin Sharmavin Suyamunnetra Thohuppu
Rs. 5,580.00Original price was: Rs. 5,580.00.Rs. 5,020.00Current price is: Rs. 5,020.00.Read moreராபின் ஷர்மா
கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.
இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.
அதிகாலை 5 மணி குழு
உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.
புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.
இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.
வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.
ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.
-
இறவான்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreபா. ராகவன்
A brilliant and exceptional symphonic novel.<Br>
‘ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள். இன்னொன்று தேவை என்று அவனுக்கே தோன்றினால் அவன் கலைஞனே இல்லை என்று பொருள்.’
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது. அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது.
பா. ராகவனின் ‘இறவான்’, மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளின் ஊடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த பாரா இதில் கையாண்டிருக்கும் எழுத்து முறையை மயக்கநிலை யதார்த்த எழுத்து என்கிறார்.
-
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
• உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
• மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?
பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
• அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!
-
ஆக்கப்படுவதே வாழ்க்கை
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreபிரீத்தி ஷெனாய்
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா?
எண்பதுகளின் முற்பகுதியில் இந்தியாவின் இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது அங்கிதாவின் சில குறிப்பிடத்தக்க வருட வாழ்க்கையின் ஒரு பிடிப்புக் கணக்கு. அங்கிதா ஷர்மா உலகத்தை தன் காலடியில் வைத்திருக்கிறாள். அவள் இளமையாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், புத்திசாலியாக இருக்கிறாள், மேலும் பல நண்பர்கள் மற்றும் பையன்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் எம்பிஏவுக்கான முதன்மையான மேலாண்மைப் பள்ளியில் சேரவும் முடிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறாள். வாழ்க்கை கொடூரமாகவும் குளிராகவும் அவளுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததை பறித்துக்கொண்டது, அதையெல்லாம் திரும்பப் பெற அவள் இப்போது போராட வேண்டும்.
இது வளர்ந்து வரும், நம்பிக்கையின் சக்தி மற்றும் உறுதியும், அடக்க முடியாத ஆவியும் எப்படி விதி உங்கள் மீது வீசினாலும் அதை எப்படி வெல்ல முடியும் என்பது பற்றிய ஆழமான நகரும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவு. ஒரு கதை, அதன் மையத்தில் ஒரு காதல் கதை, இது நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகளையும், நமது நல்லறிவுக் கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, மேலும் ஒருவர் அதை உருவாக்குவதுதான் வாழ்க்கை என்று நம்பும்படி நம்மைத் தூண்டுகிறது.
-
ஆண்ட்ரு கார்னகி ( Andrew Carnegie )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
-
உடல் மனம் புத்தி : நீடித்த மகிழ்ச்சியும் நிறைவான வாழ்வும் பெற…
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreசோம. வள்ளியப்பன்
அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி?
· நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி?
· பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?
· தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி?
· வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது?
· மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி?
· ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி?
· ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா? -
சே குவேரா: வாழ்வும் மரணமும் ( Che Guevara: Vaazhvum Maranamum )
Rs. 7,290.00or 3 X Rs.2,430.00 withRead moreஜோர்ஜ் ஜி. காஸ்டநாடா
சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்.
-
ஃபிராய்ட் / Freud Tamil
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஜோனத்தன் லியர்
தமிழில்: பேரா.ச.வின்சென்ட்மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது…
அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்.
மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள்.
ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது. – ஃபிராய்ட்
-
கடல் புறா (மூன்று பாகங்கள்) ( Kadal Pura – 3 Parts )
Rs. 7,260.00Original price was: Rs. 7,260.00.Rs. 6,790.00Current price is: Rs. 6,790.00.or 3 X Rs.2,263.33 withRead moreசாண்டில்யன்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
-
கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 / Kadaisi Mugalayan / The Last Mughal Tamil
Rs. 5,490.00or 3 X Rs.1,830.00 withRead moreவில்லியம் டேல்ரிம்பிள்
தமிழில்: இரா.செந்தில்
‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்
‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்
‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!
கேளுங்கள்!
இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.
இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
-
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00Original price was: Rs. 1,990.00.Rs. 1,790.00Current price is: Rs. 1,790.00.or 3 X Rs.596.67 withRead moreலியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
-
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreமருதன்
‘நீங்கள் எத்தனை பலமிக்கவராக வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள். நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பதாகையின் நிறம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் உதடுகள் எத்தகைய உயர்ந்த உண்மையை உச்சரித்தாலும் கவலையில்லை. நீங்கள் மக்களை மதியாதவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக, அவர்களுடைய சடலங்கள் பெருகுவதைப் பொருட்படுத்தாதவராக இருந்ததால் உங்கள் பலமும் சித்தாந்தமும் உண்மையும் எம்மக்களுக்குப் பயனற்றவை’ என்றார் ராஜனி திராணகம. ஒரு புத்திரனால் அவர் கொல்லப்பட்டார்.
நக்சல்பாரி அலையால் ஈர்க்கப்பட்ட அனுராதா கண்டிக்கு ராஜனி போலவே வாழ்க்கை என்பதையும் போராட்டம் என்பதையும் வெவ்வேறானவையல்ல. இருவரும் கொல்லப்படுவதற்கு அவர்கள் எழுப்பிய எதிர்க்குரலே காரணமாக அமைந்துவிட்டது. சில்வியா பிளாத்தின் கலகம் கவிதையாக வெளிப்பட்டது என்றால் அருந்ததி ராய்க்கு அரசியலாக. <Br> மீராவின் பாடல், கங்குபாய் ஹங்கலின் இசை, மஹாஸ்வேதா தேவியின் சிறுகதை, உமா சக்கரவர்த்தியின் பௌத்தம், ரொமிலா தாப்பரின் வரலாறு என்று பிரிக்கமுடியாதபடி நம்மோடு கலந்துவிட்டிருக்கும் தனித்துவமிக்க சில பெண்களின் எதிர்க்குரல்களைத் தொகுத்தெடுத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.
-
தண்ணீர் தேசம் ( Thanneer Thesam )
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreவைரமுத்து
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
-
திப்பு சுல்தான் / Tippu Sulthan
Rs. 3,890.00or 3 X Rs.1,296.67 withRead moreமொஹிபுல் ஹசன்
தமிழில்: எஸ். அர்ஷியா
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது.
கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.
அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.
-
சத்திய சோதனை: மகாத்மா காந்தி சுயசரிதை ( Saththiya Sothanai )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமகாத்மா காந்தி
“இந்த உலகத்திற்கு நான் அறிவுறுத்த வேண்டியது எதுவுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப்போல பழமையானவை.”
“சத்திய சோதனை, என்ற அரிதான, அபூர்வமான சுயசரிதை மகாத்மா காந்தியின் மனத்தின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் ஒரு சாளரம், பலகணி – அவரது இதய உணர்வுகளை வெளிப்பபடுத்தும் சாளரம் – சாதாரணமாக இருந்த மனிதரை இந்திய நாட்டின் தந்தை என்ற உயர்ந்த நிலைக்கு, உன்னத நிலைக்கு எது உயர்த்தியது என்பதைப் புரிந்து கொள்வதற்கான தெளிவைக்காட்டும் பலகணி.
காந்தி சிறுவராக இருந்த காலத்திலிருந்து தொடங்கி இந்தியாவில் சுதந்திர இயக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த காலம் வரையுள்ள அவரது வாழ்க்கையின் நிலைகளைக் காட்டுவது வரை அழைத்துச் சென்று அவரது பரிசோதனைகளையும் மனக்குமுறல்களையும் அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்கிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணம், இங்கிலாந்தில் கல்வி தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில், அங்கே அவரது சத்தியாகிரகம் உள்ளிட்டலை இவற்றுள் அடங்கும்.
அவருக்கு சுயசரிதை எழுதும் நோக்கம் இல்லை. ஆனால் இனவெறி வன்முறை, காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான அவருடைய போராட்டத்தால் முழுமையான சத்தியத்தைத் தேடிய தன்னுடைய சத்திய சோதனை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
-
மக்களைக் கையாளும் கலை ( Makkalaik Kaiyaalum Kazhai )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் ஃபாக்ஸ்
தமிழில்: குமாரசாமி
- NEW YORK TIMES BESTSELLER!
மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதுதான் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான ரகசியம். பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் நாம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறோம், ஆனால் மனித உறவுகளின் உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சோதனை மற்றும் பிழை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். சோதனை வேதனையானது மற்றும் பிழை விலை உயர்ந்தது.
மக்கள் கருவிகள்: உறவுகளை கட்டியெழுப்புவதற்கான 54 உத்திகள், மகிழ்ச்சியை உருவாக்குதல் மற்றும் செழிப்பைத் தழுவுதல், சிறந்த, மகிழ்ச்சியான, அதிக வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நேரம் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைத் தேடும் பிஸியான மக்களுக்கு இது சரியான ஆதாரமாகும்.
ஒவ்வொரு பக்கத்திலும் நடைமுறை ஞானம்
-
சிந்து சமவெளி சவால்
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreதுர்காதாஸ்
ஜனனி ரமேஷ்வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி, புனைவை நாடுவதுதான்.
இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது ஏன்? உலகால் வெல்லமுடியாத மாவீரரருக்கு இந்தியாவில் நடந்தது என்ன? அவர் இறந்தது ஏன்? எளிய பின்னணியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியது எப்படி? அவருக்கு உதவியவர்கள் யார்?
‘விதியின் சிறையில் மாவீரன்’ நாவலைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாவது கதை ருத்ராவின் இரண்டாவது அவதாரமாக விரிவடைகிறது. தனது அசாதாரணமான துப்பறியும் திறனால் பெருமைமிகு பாரதப் பண்பாட்டின் அடியாழத்திலுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்துகிறான் ருத்ரா.
-
யவன ராணி (இரண்டு பாகங்கள்) ( Yavana Rani – 2 Parts )
Rs. 5,200.00Original price was: Rs. 5,200.00.Rs. 4,990.00Current price is: Rs. 4,990.00.or 3 X Rs.1,663.33 withRead moreசாண்டில்யன்
யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.
கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை – திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.
கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.
-
இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு ( Ilakkai Ettum Varai Idaividdathu Iyangu )
Rs. 2,190.00Original price was: Rs. 2,190.00.Rs. 1,990.00Current price is: Rs. 1,990.00.or 3 X Rs.663.33 withRead moreகேரென் மெக்ரீடி
தமிழில்: எஸ். ராமன்
இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு’ என்னும் இந்த நூல், உலகில் தனி நபர் ஒருவரால் உருவாகிக்கொண்டிருக்கும் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை விண்ணளவு உயர்ந்த கதை. 1992ல் குறைவான முதலீட்டுடன், உறுதியான மனத்தோடு 2860 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச் சுமாரான நிலத்தை வாங்கினார். அடுத்த இருபது வருட காலத்தில் எண்ணிலடங்கா பின்னடைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி உலகமே வியக்கும் வண்ணம் இன்று மிகப்பெரிய நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏழ்மை சூழ்ந்த பிறப்பிலிருந்து இந்த அளவிற்கு இவரை உயர்த்தியது சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள். இந்தப் பத்து கட்டளைகள் எப்படி மஹாவின் கனவுகளுக்கு உயிரூட்டம் கொடுத்தன?….. படியுங்கள்
-
வால்காவிலிருந்து கங்கை வரை (Volgavilirundhu Gangai Varai)
Rs. 2,790.00Original price was: Rs. 2,790.00.Rs. 2,290.00Current price is: Rs. 2,290.00.or 3 X Rs.763.33 withRead moreராகுல சாங்கிருத்தியாயன்
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.
-
பயங்கரவாதம்: நேற்று – இன்று – நாளை ( Payangaravaatham Nettru Inru Naalai )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreபி. ராமன்
இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுள் முக்கியமானது, பயங்கரவாதம். இன்னொரு 9/11 நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்தது அந்தக் காலம். இன்று, புதிய வகை பயங்கரவாதிகள் சாத்தியமுள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் இவர்கள் சீர்குலைக்கின்றனர். மத உரிமை, சமூகக் கடமை என்றெல்லாம் மயக்கும்படி பேசி, இளைஞர்களை இவர்கள் ஈர்க்கிறார்கள். மதத்தையும் அதன் லட்சியங்களையும் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில், நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி சிவிலியன்களைக் கொல்கிறார்கள். பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடிச் செல்லும் இந்நூல் இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்கிறது.
-
மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி / Marx’in Mooladhanathirku Oru Vazhikatti / A Companion to Marx’s Capital Tamil
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreடேவிட் ஹார்வி
இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.
மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார். அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, அரசியல் நோக்கமும் கொண்டதாகும்.
மூலதனக் குவிப்புக்கு எதிரான அரசியல் போராட்டமானது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைப்பதுடன், பாரம்பரியமான தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. ஏகாதிபத்தியம், இப்போதும் புதிய சந்தைகளுக்காக ஒடுக்குமுறையான அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகளை கையாள்கிறது என்பதையும் இந்நூல் பகிரங்கப்படுத்துகிறது.
-
செல்வம் சேர்க்கும் வழிகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreG. S. சிவகுமார்
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது?
* நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? .
* செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
* எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா?
* தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?
* கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?
யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
-
மகாபாரதம் (ராஜாஜி) ( Mahabaratham )
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreவியாச முனிவர்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.
இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்
-
அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு (பாகம் 1) / Ignorance to Innocence / Ariyaamaiyil Irunthu Kalangaminmaikku Paagam 1
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஓஷோ
தமிழில்: சுவாமி சியமானந்தன்
அமெரிக்காவில், ஒரேகான் மாநிலத்தில் ஓஷோ, தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை மிகச் சிறப்பானது. 99 ரோல்ஸ்ராய்ஸ் கார்களுடன், அமெரிக்க அரசியல்வாதிகள் நடுங்கும்படி சிறப்பாக உரையாற்றி, மக்களை மாற்றி வந்தார். அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு, தனது சொற்பொழிவுகளில் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நூலில் அதற்கான கேள்விகளையும் ஓஷோவின் பதில்களையும் காணமுடியும். மிகக் கடுமையாக அதே நேரம் நகைச்சுவையாகவும் பேசி இருக்கிறார்.இதுபோன்ற கட்டுரைகள் சில மட்டுமே, பிறகு அவரது பாணியில் கேள்விகளுக்கு பதில்கள் எழுகின்றன! மக்கள் என்னிடம் “எது சரியானது, எது தவறானது?” என இடைவிடாமல் கேட்கின்றனர். எனது பதில் இதுதான்” விழிப்புணர்வில் இருந்து வெளிவருவது சரியானதாக இருக்கின்றது. விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருந்து வருவது தவறானதாக உள்ளது. செயல்களில் சரி அல்லது தவறு என்பது இல்லை. அந்தச் செயல்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற ஆரம்ப இடத்தில்தான் இருக்கிறது.”ஓஷோவின் நூல்களில் இருந்து இந்நூல் வித்தியாசமானதாக இருப்பதைக் காணலாம். -
யாமம் (Yamam)
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஎஸ்.ராமகிருஷ்ணன்
இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன் விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது. இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது. யாமத்தின் பெரும் நிகழ்வுகள், போராட்டங்கள், துயரங்கள், களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள். பண்டாரமும் நாயும் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம். — கவிஞர் சமயவேல்
-
திறனின் திறவுகோல் அமைப்பு
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசார்ல்ஸ் எப். ஹானல்
இந்த புத்தகம் வெற்றிக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் ரகசியத்தை வைத்திருக்கிறது, இது எழுத்தாளர் சார்லஸ் எஃப். ஹானெலால் தனக்கென ஒரு செல்வத்தை குவிக்க பயன்படுத்தப்பட்டது. மாஸ்டர் கீ சிஸ்டம் ஈர்ப்பு விதியின் மூலம் படைப்பு வெளிப்பாட்டின் கொள்கைகளின் அடித்தளத்தை அமைக்கிறது. பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த சக்தியைக் குறிப்பிடும் போது, இன்று மிகவும் பிரபலமான வார்த்தையாக மாறியுள்ள, ஈர்ப்பு விதி என்ற சொற்றொடரைப் பயன்படுத்திய முதல் புத்தகங்களில் இது ஒன்றாகும். உங்கள் மனதின் படைப்புக் கருவியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
-
ஜப்பான்: ஒரு கீற்றோவியம்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreஜெயமோகன்
ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்டும் சித்திரம் மிக தனித்தன்மையானது. இந்நூல் ஜப்பானைப்பற்றிய ஒரு மின்கணப் புகைப்படம் என்று சொல்வேன். இதிலும் ஜப்பானிய இலக்கியம், கலை, அரசியல், மதம், வரலாறு பற்றிய சுருக்கமான ஒரு முழுமைச்சித்திரம் உள்ளது.
-
ஹிட்லர்: வாழ்வும் அரசியலும் ( Hitler: Vaazhvum Arasiyalum )
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreபா. ராகவன்
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர்.
உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர். தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
-
டாக்டர் வைகுண்டம் கதைகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஜெயராமன் ரகுநாதன்
முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்றொருவர் இருந்தார். தாத்தா முதல் குழந்தை வரை ஒரு வ் யாருக்கு எதுவென்றாலும் போன் செய்தால் போதும், பெட்டியோடு வீட்டுக்கே ஓடி வந்துவிடுவார். வந்தவுடன் ஊசி, மாத்திரை என்று தாவிவிடாமல் சில நிமிடங்களாவது சிநேகத்தோடு வீட்டு விஷயங்களைப் பேசுவார். உடம்புக்கு என்ன ஆச்சு என்று கனிவோடு விசாரிப்பார். அவரோடு பேச்சுக் கொடுக்கும்போதே எந்த உபாதையாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட சரியாகிவிட்டது போல் தோன்றும்.
‘அதெல்லாம் ஒரு காலம்! இப்போதெல்லாம் அப்படி யார் இருக்கிறார்கள்?’ என்று ஏங்குபவர்களுக்காகவே டாக்டர் வைகுண்டத்தை கற்பனை உலகிலிருந்து எழுந்தருளச் செய்திருக்கிறார் ரகுநாதன் ஜெயராமன். சம்பாதிப்பது அல்ல, சேவையே அவர் நோக்கம். அதுவேதான் அவர் மதிக்கும் தர்மமும்கூட. அவருடைய மிடுக்கு, புத்திசாலித்தனம், சாதுரியம் அனைத்தையும் அவருடைய சிநேகம் விஞ்சிவிடுகிறது.
நமக்கெல்லாம் மிகவும் நெருக்கமானவராக, நம் குடும்பத்தில் ஒருவராக, ஒரு லட்சிய மருத்துவராக வைகுண்டம் உயர்ந்துவிடுகிறார். இவர் ஏன் நிஜத்தில் வரக்கூடாது என்று நாம் மெய்யாகவே கனவு காண ஆரம்பித்துவிடுகிறோம்.
மிருதுவான மொழிநடையில் ஓர் அசாதாரணமான உலகைக் கட்டமைத்திருக்கிறார் கதாசிரியர். அந்த உலகை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது. -
ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள் ( Sherlock Homsin Ninaivuk Kurippukal )
Rs. 2,640.00or 3 X Rs.880.00 withRead moreசர் ஆர்தர் கோனான் டாயில்
தமிழில்: குகன்
“The Memories of Sherlock Holmes” ஆங்கில நூலின் தமிழாக்கம்.
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet” என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four” என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes” என்ற குறுநாவல்களை எழுதினார்.
இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான்.
-
தலித்துகள்: நேற்று இன்று நாளை
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஆனந்த் தெல்தும்ப்டே
பாலு மணிவண்ணன்இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல்.
· சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது?
· அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன?
· பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன?
பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
. அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை?
· அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன?
பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
· இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா?
· தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா?
மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா?
· தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?
அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை?
ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது.
-
ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள் ( Sherlock Homsin Sagasak Kadhaigal )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreசர் ஆர்தர் கோனான் டாயில்
தமிழில்: குகன்
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet” என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four” என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes” என்ற குறுநாவல்களை எழுதினார்.
இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். ‘RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?’, ‘C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு’, ‘உளவு ராணிகள்’, ‘இனப்படுகொலைகள்’ போன்ற நூல்கள் எழுதிய எழுத்தாளர் குகன், “The Adventures of Sherlock Holmes” நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
-
ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreகான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி
தமிழில்: ஜார்ஜினா குமார்
மகத்தான நடிகர்கள் அனைவரும் உணர்ந்தோ உணராமலோ பயன்படுத்தி வந்துள்ள அடிப்படை நடிப்புக்கலைக் கொள்கைகளை எழுத்தில் வடித்துள்ளதைத் தவிர தான் வேறு ஏதும் பெரிதாகச் செய்துவிட்டதாக ஸ்தனிஸ்லாவ்ஸ்கி கூறிக்கொள்வதில்லை. அவரது கூற்றுகள் அசைக்க முடியாத விதிகளாகவோ அல்லது அவரது பயிற்சிகள் எல்லாவிதமான சூழல்களுக்கும் பொருந்தும் என்றோ, எல்லாராலும் பயன்படுத்தப்படலாம் என்றோ அவர் கருதவில்லை. குறிப்பாக, வசனங்களின் உச்சரிப்பு மற்றும் பேசுதல் பற்றிய கேள்விகள் எழும்போது அந்தக் குறிப்பிட்ட பயிற்சியின் முதன்மைக் குறிக்கோளானது நடிப்புக்கலையின் மாணவரது கற்பனையைத் தூண்டிவிடும் ஒரு சவாலாக இருக்க வேண்டும், தனது சொந்தத் தேவைகளை அவன் உணருமாறு எழுப்ப வேண்டும். தனது கலையின் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ளடங்கியுள்ள ஆக்க சக்தியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான்.
-எலிசபெத் ரேனால்ட்ஸ் ஹாப்குட் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்
-
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) ( Kadhalin Naatpathu Vithigal ) The Forty Rules of Love
Rs. 3,890.00Original price was: Rs. 3,890.00.Rs. 3,490.00Current price is: Rs. 3,490.00.or 3 X Rs.1,163.33 withRead moreஎலிஃப் ஷஃபாக்
தமிழில்: ரமீஸ் பிலாலி
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. — தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன. —— ஆல்ட்முஸ்லிமா.காம்
காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம். —– ஜாக் கார்ன்ஃபீல்டு
-
தத்துவத்தின் தொடக்கங்கள் / Thathuvathin Thodakangal
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreதேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில்: இரா சிசுபாலன்
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்.
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..
இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..
-
நல்லதாக நாலு வார்த்தை : மனிதர்களைப் புரிந்துகொள்ள… வாழ்க்கையை வெற்றிகொள்ள..
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
பணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?
என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி?
-
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
Rs. 490.00or 3 X Rs.163.33 withRead moreதீபக் சோப்ரா
தமிழில்: M. சீனிவாசன்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே வாழ்க்கையின் வெற்றி என்று விளக்கலாம். வெற்றிக்கு எத்தனயோ முகங்கள் உண்டு. பொருட்செல்வம் என்பது அவற்றுள் ஒன்றுதான். அத்துடன் நில்லாமல், வெற்றி என்பது ஒரு பிரயாணம். ஒரு முடிவு எல்லையல்ல. அல்லது நாம் அடைந்து விடும் முடிவான இடம் அல்ல. புத்தகங்களோ கணக்கிலடங்காதவை. காலம் மிகக்குறுகியது. ஆகவே எது மிகவும் முக்கியமோ அதை உடனே எடுத்துக் கொள்வதுதான் அறிவின் ரகசியம். அதை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சியுங்கள்.
-
மைல்கற்கள் (Milekatkal) (Maalim Fi at-Tariq)
Rs. 2,310.00Original price was: Rs. 2,310.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreசையித் குதுப்
தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரீ
நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.
இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் நிம்மதியான வாழ்க்கையை வாழவும் முடியும் என்பதை விளக்குவதுடன்; மற்ற கண்ணோட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் என்பதையும், அவை எப்படி மனித சமூகத்தை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டலின் பாதையிலுள்ள மைல்கற்களைப் பட்டியலிடும் குதுப், வரலாற்றில் அப்படியொரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு உருவானது என்பதையும், அதற்குப் பின்னாலிருந்த காரணிகள் குறித்தும், அதன் தனித்தன்மைகள் குறித்தும் தெளிவுற விவரிக்கிறார்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஓர் கட்டாய வாசிப்பு.
-
கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0 / Kattral Enbathu Yathenil
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஆயிஷா இரா. நடராசன்
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
-
ரூமியின் வைரங்கள் ( Roomiyin Vairangal )
Rs. 400.00or 3 X Rs.133.33 withRead moreஜலாலுத்தீன் ரூமி
தமிழில்: ரமீஸ் பிலாலி
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.
மௌலானா ரூமியின் கவிதைகளில் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, சில நேரங்களில் அவரின் கவிதை மிகவும் எளிமையானதாகத் தென்படலாம். இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவது போல் தெரியலாம். ஆனால் மனித காதல் என்பதும்கூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை மௌலானா ரூமி மீண்டும் மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்கள். ஒவ்வொரு அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். ஏனெனில் அன்பின் மூல முகவரி இறைவன்தான். அதற்கான வழியை மௌலானா ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.
-
புதுமைப்பித்தன் கதைகள் / Puthumaipithan Kathaikal
Rs. 4,790.00or 3 X Rs.1,596.67 withRead moreசெம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது.
பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.
-
ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and the Cursed Child)
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreஜே. கே. ரோலிங்
ஹாக்வர்ட்ஸ் போர் முடிந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாரி போட்டர் ஜின்னியை மணம் புரிந்து ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். ஹெர்மியோனி – ரோன் தம்பதியினருக்கு ரோஸ் எனும் பெண் குழந்தை இருக்கிறது. டிராகோ மால்ஃபோய்’யின் மகனாக ஸ்கோர்பியஸ் வருகிறான்.
தனது மகன் சிட்ரிக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அமோஸ், நேரத்தின் ஊடாக பயணம் செய்து தனது மகனை மீட்டுத்தரும்படி ஹாரி போட்டரிடம் உதவி நாடுகிறான். அதனால் விளையும் பின்விளைவுகளை எண்ணி ஹாரி உதவ மறுக்கிறான். இதனை ஒட்டுக்கேட்ட அல்பஸ் அமோசுக்கு உதவ முன்வருகிறான். டெல்பியின் துணையுடன் அல்பசும் ஸ்கோர்பியசும் நேரத்தின் ஊடாகப் பயணம் செய்யும் கருவியைக் கைப்பற்றுகின்றனர். சிட்ரிக்கைக் காப்பாற்றுவதற்காக இரு முறைப் பயணம் செய்து, அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சி அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரத்தின் ஊடாகப் பயணம் செய்வது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதனை அழிக்கவும் ஆயத்தமாகின்றனர்.
-
எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreஇலந்தை சு. இராமசாமி
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.
எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.
சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.
எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.
இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.
தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?
-
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2)
Rs. 490.00or 3 X Rs.163.33 withRead moreகோபிநாத்
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர்.
ஊடகத் துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ டாக்டர் பட்டம். இந்தியா டுடே இதழின் இளம் சாதனையாளர் விருது. சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் இளைஞரின் முன்மாதிரி விருது. அமெரிக்க அரசின் சிறந்த நிகழ்ச்சி நடத்துனர் அங்கீகாரம் போன்ற பல விருதுகளுக்கு உரியவர்.
பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் இவர் நிகழ்த்தும் உரைகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
இவரது டாக் ஷாப் அகாடெமி நிறுவனம் ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட நடத்தி வருகிறது.
-
கிரானடா (நாவல்) ( Granada )
Rs. 2,470.00Original price was: Rs. 2,470.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreறள்வா ஆஷூர்
தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.
-
கழுகு தரை இறங்கிவிட்டது
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreஜாக் ஹிக்கின்ஸ்
தமிழில்: கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
சரியாய் பகல் ஒரு மணிக்கு, ஜெர்மனியின் ராணுவத் தலைமைக்கு ஒரு சிறு தகவல் வந்து சேர்ந்தது. ‘கழுகு, தரையிறங்கிவிட்டது’.
எதிரி நாடுகளுக்குள் பாராசூட் கொண்டு இறங்கி சண்டை செய்ய பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஜெர்மானிய வீரர்கள் குழு கர்னல் ஸ்டைனர் தலைமையில் இங்கிலாந்து நாட்டுக்குள் பத்திரமாக தரையிறங்கி விட்டது என்பதே இதற்கு அர்த்தம்.
கடற்கரையோரமாய் வார இறுதி நாட்களை அமைதியாக கழித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்லை ஜெர்மனிக்கு கடத்திக்கொண்டு செல்ல, ரகசியத் திட்டத்துடன் வந்து இறங்கிய கூட்டமாகும்.
நாம் மறந்துபோன, ஆச்சரியமிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் உலகப் போரின் சரித்திர சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் மீண்டுமொருமுறை உங்களை 1943க்கே அழைத்துச்செல்லும்.
இந்த பரபரப்பான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது அதே ராணுவ நாட்களின் பரபரப்பு புத்தக வடிவில்…உங்கள் கைகளில்…
-
நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (You Can Sell)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
நீங்கள் ஒரு வெற்றிகரமான விற்பனை நிபுணரை உருவாக்கும் நேர-சோதனை கொள்கைகளை நீங்கள் விற்கலாம். பயன்படுத்தப்படும் வார்த்தை கொள்கைகள்’ மற்றும் தந்திரோபாயங்கள் அல்ல. ஏனெனில் தந்திரோபாயங்கள் கையாளக்கூடியவை, அதேசமயம் கொள்கைகள் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெற்றிபெற நீங்கள் ‘வர்த்தகத்தின் தந்திரங்களை’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் பல முறை கேட்கிறீர்கள். இது உண்மையல்ல. இந்தப் புத்தகம் வித்தியாசமானது!
-
அமரர் கல்கி
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅனுஷா வெங்கடேஷ்
“பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை. காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.” -
மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )
Rs. 1,450.00Original price was: Rs. 1,450.00.Rs. 1,390.00Current price is: Rs. 1,390.00.or 3 X Rs.463.33 withRead moreறள்வா ஆஷூர்
தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?
– நாவலிலிருந்து…
-
காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு (A Briefer History of Time)
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஸ்டீஃபன் ஹாக்கிங் and லெனர்டு மிலோடினாவ்
தமிழில்: நாகலட்சமி சண்முகம்
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல்.
இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreநிவேதிதா லூயிஸ்
அம்மாக்கண்ணு யார்?
நீலனை ஏன் அவளுக்குப் பிடிக்காது?
அப்படி என்ன செய்துவிட்டான் அந்த நீலன்?
எதற்காக அம்மாக்கண்ணுவையும் அவள் குடும்பத்தையும் பிரிட்டிஷ் அரசு சிறையில் தள்ளவேண்டும்?
அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தேடி எதற்காகச் சிறைக்கு வந்தார் காந்தி?
இந்திய சுதந்திரப் போராட்டம் பல்லாயிரம் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் அவற்றில் அம்மாக்கண்ணுவின் பெயர் நமக்கு உடனடியாகத் தட்டுப்படப்போவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நல்ல தமிழ் நூல்களைக் கண்டறிந்து அச்சேற்றிய வா.வெ.சாஸ்த்ருலுவும் மறக்கடிக்கப்பட்டவர்தான். வ.உ.சியையே யார் என்று கேட்பவர்கள் இருக்கும்போது, தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கிய டாக்டர் தனகோடி ராஜுவை யாரேனும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் மறைந்த போன பல பக்கங்களுக்கு இந்நூலில் உயிரூட்டியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். நம் கவனத்தை ஈர்த்து, நம் சிந்தனைகளைக் கொள்ளை கொள்ளும் பல நிகழ்வுகளும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு சிறு புதையல்.
-
மாபெரும் இரகசியம் Maperum Irakasiyam ( The Greatest Secret )
Rs. 4,990.00or 3 X Rs.1,663.33 withRead moreரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ஞானத்தைத் தேடிச் செல்லும்படி ஏதோ ஒன்று அவருக்குள்ளிருந்து அவரை உந்தித் தள்ளியது. அவர் அந்தத் தேடலில் பதினான்கு ஆண்டுகளைச் செலவிட்டதன் விளைவாகக் கண்டுபிடித்த உலகளாவிய உண்மைகள் இந்நூலின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
மாபெரும் இரகசியம் மக்களை பௌதிக உலகிலிருந்து உயர்த்தி, அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள ஆன்மிகத் தளத்திற்குக் கூட்டிச் செல்லும். இந்நூலில் இடம்பெற்றுள்ள போதனைகள், நீங்கள் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சில பயிற்சிகளை வழங்குவதோடு, உங்களுடைய பயங்கள், ஐயப்பாடு, கவலை, வேதனை ஆகியவற்றைக் கரைக்கக்கூடிய ஆழமான உண்மைகளையும் வழங்குகின்றன. உலகம் நெடுகிலுமுள்ள பல்வேறு ஆன்மிக ஆசான்கள் உதிர்த்த ஞான முத்துகளால் நிரம்பி வழிகின்ற மாபெரும் இரகசியம், துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பேரானந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு நேரடியான பாதையை வாசகர்களுக்கு வழங்குகிறது.
-
உங்களால் வெல்ல முடியும் ( Ungalal Vella Mudiyum ))
Rs. 2,890.00or 3 X Rs.963.33 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
ஷிவ் கேராவின் “உங்களால் வெல்ல முடியும்” (You can win (Tamil) – Shiv Khera) புத்தகம், உலக வரலாற்றில் சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகும். எளிய நடையில் மனதில் ஆழமாக பதியகூடிய கருத்துக்கள். சிறுசிறு கதைகளுடன் உதாரணங்களுடன் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். சாதனை படைப்பவர்களுக்கான படிப்படியான கருவி.
-
அறிவியல் என்றால் என்ன? ( Ariviyal Endral Enna ) What is Science?
Rs. 3,630.00Original price was: Rs. 3,630.00.Rs. 3,290.00Current price is: Rs. 3,290.00.or 3 X Rs.1,096.67 withRead moreசுந்தர் சருக்கை
தமிழில்: சீனிவாச ராமாநுஜம்
நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, ஏரணம், பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இப்படியான நம்பிக்கைகளெல்லாம் உள்ளபடியே எந்த அளவுக்கு உண்மையானவை? ஆக, இந்தப் புத்தகம் அறிவியல் குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித்தருகிறது. அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு, ஏரணம் முதல் அறம் வரை என விரிவான தளங்களைக் கையாள்கிறது. இவற்றோடு, முக்கியமான சில தத்துவக் கருத்தாக்கங்களுக்கும் அறிவியல் கருத்தாக்கங்களுக்கும் சுந்தர் சருக்கை அளித்த எளிமையான விளக்கங்கள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன; இது தமிழ்ப் பதிப்பின் கூடுதல் சிறப்பம்சமாகும். அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம் மற்றும் பலவீனங்களோடும் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான புத்தகம் இது!
-
ஆட்கொல்லி விலங்கு
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஆட்கொல்லி விலங்கு
“அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.
ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது?
அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது?
வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது?
ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்?
காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்கும்?
தேடிப்போன விலங்கு கண்முன்னால் திரண்டு நிற்கும் அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது?
அடுத்து எந்த விலங்கு தோன்றுமோ எப்படித் தாக்குமோ என்று அச்சத்தில் உறைந்துகிடக்கும் கிராமத்து மக்களை மீட்டெடுக்க கென்னத் ஆண்டர்சன் தனது வேட்டையைத் தொடங்குகிறார். மனிதன் இயற்கையின்மீது பெரும் போர் தொடுக்கிறான். இயற்கை பதிலுக்கு மனிதனை வேட்டையாடத் தொடங்குகிறது. இந்தப் போரில் வெல்லப்போவது யார்? “
-
திருமுகம்: ஈரானிய நாவல் ( Thirumugam ) Kiss The Lovely Face of God
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreமுஸ்தஃபா மஸ்தூர்
தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.
-
உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி ( Ungal Aazhmanathin Atputha Sakthi )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreடாக்டர் ஜோஸப் மர்ஃபி
தமிழில்: மாலதி கிருஷ்ணா
உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.
-
ஆர்யபடரின் கணிதம்
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreபத்ரி சேஷாத்ரி
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.
ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி.
எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.