Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தமிழ் Books

Showing 541–600 of 620 results

  • Sale!
    Out of Stock

    [RARE] ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும்

    Original price was: Rs. 2,290.00.Current price is: Rs. 1,690.00.
    or 3 X Rs.563.33 with

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

     

    மக்கள் நலன்களும் ஆளும் வர்க்கங்களது நலன்களும் எதிரும் புதிருமாய் அமைந்து முட்டி மோதிக் கொள்வதை அவர் ஒத்துக் கொள்ள மறுத்தார். வர்க்கங்களுக்கு எல்லாம் “அப்பாற்பட்டவையாய்த்” தாம் கருதிய தேசிய இலட்சியம் என் பதன் பெயரால் சமுதாயப் போராட்டத்தை அவர் எதிர்க்க முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியிற்கும் ஜனநாயக முகாமுக்கும் ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் தோன்ற இவையே காரணம்.

     

    தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மலிந்திருக்கும் கொலைகளும் கொடூரங்களும் வாசகருக்குப் பரபரப்பூட்டுவதற்காக விவரிக்கப்படும் கற்பனை சிருஷ்டிகள் அல்ல, குரூர அனுபவங்க களால் வதைபட்ட ஓர் இதயத் தின் அடியாழத்திலிருந்து வெடித்தெழும் குமுறல்கள் அவை.கொலை புரிந்தோரும் கற்பழித்தோரும் வன்மனத்தோரும் சிறைச்சாலையில் அவருடன் இருந்தனர், மற்றும் பழி பாவம் அறியாத எத்தனையோ பேர் விதிவசத்தாலோ, ஜாராட்சியின் கண்மூடித்தனத்தாலோ, நீதித்துறையாரின் தவறுகளாலோ இவர்கள் மத்தியில் தள்ளப்பட்டிருந்தனர்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    முத்துலட்சுமி ரெட்டி

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    வி. ஆர். தேவிகா
    அக்களூர் ரவி

     

    இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கமுடியுமா, இவ்வளவு துணிச்சலோடு போராடியிருக்கமுடியுமா, இந்த அளவுக்கு நவீனமாகவும் புரட்சிகரமாகவும் ஒருவர் அப்போதே சிந்தித்துச் செயல்பட்டிருக்கமுடியுமா என்று வியக்கவும் ஏங்கவும் வைக்கிறார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
     

    போராடிப் போராடித்தான் ஒவ்வோர் அடியையும் அவர் எடுத்து வைக்கவேண்டியிருந்தது. அந்த ஒவ்வொரு அடியும் ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டு வந்தது. புதுக்கோட்டை மகாராஜா ஆண்கள் பள்ளியின் முதல் மாணவி. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினர். சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர். முதல் பெண் துணை சபாநாயகர். நகரக்குழுவின் முதல் பெண் உறுப்பினர்.
     

    பெண் உரிமைப் போராட்டத்துக்கு முத்துலட்சுமி வகுத்துக் கொடுத்த பாதை உறுதியானது. வீட்டுச் சிறை தொடங்கி சமூகக் சிறை வரை அனைத்திலிருந்தும் பெண்கள் விடுபடவேண்டும். என்னும் பெருங்கனவோடு வாழ்ந்தவர். அந்தக் கனவுக்காகத் தன் வாழ்நாளைக் கரைத்துக்கொண்டவர். உடலைப் பாதிக்கும் நோயோடு போராட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார் என்றால் பெண்களைப் பீடித்துள்ள சமூக நோய்களை எதிர்க்க குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மனிதகுலம்

    Original price was: Rs. 3,950.00.Current price is: Rs. 3,790.00.
    or 3 X Rs.1,263.33 with

    ருட்கர் பிரெக்மன்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “அருமை. பிரெக்மனின் வரலாற்று விவரிப்பு, மனித இயல்பு குறித்தப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் இது நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.”
    — சூசன் கெயின்

    “இந்நூலின் கருப்பொருள் மிக முக்கியமானது, இதன் வீச்சு பிரம்மாண்டமானது, கதை கூறும் விதம் வசீகரமானது. இது ஓர் அருமையான புத்தகம்.”
    –டிம் ஹார்ஃபோர்டு

     

    “மனிதகுலத்தை வெறுப்போரின் முழக்கங்களுக்கு இது சாவுமணி அடித்துள்ளது. கதிகலங்கிப் போயுள்ள உலகிற்கு நம்பிக்கையளிக்கின்ற ஒரு கலங்கரைவிளக்கமாக இந்நூல் திகழ்கிறது.”
    –டேனி டோர்லிங்

     

    “மனிதர்களின்” உள்ளார்ந்த நற்குணம் மற்றும் இயல்பான கண்ணியத்தின்மீதான அசாதாரணமான, ஆணித்தரமான நம்பிக்கைப் பிரகடனமாக இந்நூல் வெளிப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற அளவு நாம் காட்டுமிராண்டித்தனமான, மட்டுமீறிய பேராசையுடைய, வன்முறையான, எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடுகின்ற மூர்க்கத்தனமான ஒரு விலங்கு அல்ல என்ற வாதத்தை ருட்கர் பிரெக்மன் ஆணித்தரமாகவும் நம்பத்தக்க விதத்திலும் இதில் எடுத்துரைக்கிறார்-சான்றுகள் இதற்கு நேரெதிராக இருக்கின்றபோதிலும்!”
    — ஸ்டீபன் ஃபிரை, நடிகர்

     

    “சில நூல்கள் நம்முடைய யோசனைகளுக்குச் சவால்விடுகின்றன. ஆனால், ‘மனிதகுலம்’ என்ற இந்நூல், அந்த யோசனைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவோ, அந்த அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. இந்நூல் முன்வைக்கின்ற துணிச்சலான வாதம், நம்முடைய சமுதாயம், ஜனநாயகம், மனிதனின் அடிப்படை இயல்பு ஆகியவை குறித்து உங்களை மீண்டும் சிந்திக்க வைக்கும். மனிதன்மீதான நம்பிக்கை முற்றிலுமாக மறைந்துவிட்ட ஓர் ஆழ்கடலில், இவ்வுலகிற்கு இப்போது தேவைப்படுகின்ற, உறுதியான, மூழ்கடிக்கப்பட முடியாத, உயிர்காக்கும் படகாக இந்நூல் விளங்குகிறது.”
    –டேனியல் எச். பிங், நூலாசிரியர்

     

    “மனிதர்கள் அடிப்படையில் தன்னலவாதிகள், இனிமையற்றவர்கள் என்ற ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, மனித இயல்பைப் பற்றிய ஒரு துல்லியமான, நமக்கு நம்பிக்கையூட்டுகின்ற ஓர் ஓவியத்தை இந்நூல் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகின்ற, நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த சிந்தனையாளர்களில் ருட்கர் பிரெக்மனும் ஒருவர்.”
    –ஆடம் கிரான்ட், நூலாசிரியர்

    or 3 X Rs. 1,263.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] மூன்று தடியர்கள் ( Three fat Men )

    Original price was: Rs. 2,990.00.Current price is: Rs. 2,490.00.
    or 3 X Rs.830.00 with

    யூரி அலேஷா

    தமிழில்: பூ. சோமசுந்தரம்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும்போது என்ன சொல்ல வேண்டும்?

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    ஷாட் ஹெம்ஸ்டெட்டர், பிஹெச்.டி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்தான் நீங்கள்

     

    இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபேச்சு உத்திகள், உங்கள் வாழ்க்கைமீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும்.

     

    தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது, எப்படி அவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் அடிப்படையில் கொள்கைகளின் அமைந்த ஒன்றுதான் சுயபேச்சு. இதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான உத்தியை உபயோகித்து, உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவாகியுள்ள எதிர்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான, நேர்மறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விஜயநகர பேரரசு

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    எஸ். கிருஷ்ணன்

     

    தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
     

    நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
     

    விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    காதலில் இருந்து திருமணம் வரை ( Kadhalil Irunthu Thirumanam Varai )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சோம வள்ளியப்பன்

     

    கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.

    காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கதாநாயகன் (இரகசியம் #4) ( Kadhanayagan ) (Colour)

    Rs. 3,950.00
    or 3 X Rs.1,316.67 with

    ரோன்டா பைர்ன்

     

    ஹீரோ என்பது பன்னிரண்டு ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டியவர்களின் ஞானத்தின் தொகுப்பாகும். அவர்களின் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்தது, ஆனால் அவை அனைத்தையும் அவர்கள் வெற்றிகரமாக கடந்தனர். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு ஹீரோ இருக்கிறார், எழுந்திருக்க காத்திருக்கிறார். ரோண்டா பைர்ன் இந்தப் புத்தகத்தில் தனது நம்பிக்கைகளை வலுப்படுத்துகிறார், அந்த உத்வேகம் நம்மைச் சுற்றி இருக்கிறது, மகிழ்ச்சியும் தைரியமும்தான் ஒருவர் தங்கள் வாழ்க்கையை வீரமாக மாற்றிக்கொள்ளும் மிகப்பெரிய பலம்.

    or 3 X Rs. 1,316.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் : இந்திய சூஃபிகள் வரிசை

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    நாகூர் ரூமி

     

    சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்.
     

    சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார்.
     

    நாகூர் ரூமியின் இந்நூல் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது.
     

    இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வாழ்வின் கீதம் / Vaazhvin Geetham

    Rs. 2,300.00
    or 3 X Rs.766.67 with

     ஓஷோ

     

    இருளைக் கண்டு பயம் என்பது நாம் தனியாளாக விடப்படுவதனால் ஏற்படும் பயத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் தனிமையின் பயம், இருளின் பயத்தோடு சேர்ந்து வருகிறது.

    வெளிச்சத்தில் நீ முற்றிலுமாக தனிமையில் இல்லை, உன்னால் மற்றவர்களைப் பார்க்க முடியும்.

     

    பதிலாக இருளில் எத்தனை பேர் அங்கே உட்கார்ந்திருந்தாலும் நீ தனிமையில்தான் இருக்கிறாய் மற்றவர்கள் தெரிவதில்லை.

    மற்றவர்கள் அங்கே இருக்கிறார்களா, இல்லையா என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியாது. மனிதன் இருளில் தனிமையில் இருக்கிறான். யாராவது தனிமையில் இருக்க விரும்பினால் அவர்கள் இருளுக்குள் நுழைய வேண்டும்.

     

    யோகா, தியானம், சமாதி ஆகிய இவையாவும் இருளுக்குள் ஊடுருவும் தன்மையைக் குறிக்கும் பிற வார்த்தைகளே இந்த விஷயங்களை ஒரு அறிமுகம் போல நான் ஏன் சொல்கிறேன் என்றால், இருளை உன்னால் நேசிக்க முடியா விட்டால், வாழ்வின் மிகப் பெரிய உண்மைகளை அறியாமல் நீ வழி மாறிப்போய்விடுவாய்.

     

    அடுத்த முறை நீ இருளுக்குள் இருக்க நேரிட்டால், அதனுள் நேரிடையாகப் பார், அது உன்னை பயமுறுத்தவில்லை என்பதை நீ உணர்வாய். உன்னைச் சுற்றி இருள் இருந்தால், அதனுள் ஒன்றிவிடு, அதனுள் சென்றுவிடு. ஒளி உனக்கு ஒருபோதும் கொடுக்க முடியாத ஒன்றை இருள் உனக்கு கொடுப்பதை நீ காண்பாய்.

     

    வாழ்வு அன்னையின் கருவறை இருளில்தான் பிறக்கிறது. நாம் இருளுக்குள்ளிருந்து பிறப்பு எனும் கதவு வழியாக வருகிறோம், இறப்பு எனும் கதவு வழியாக இருளில் மறைந்து போகிறோம்.

    or 3 X Rs. 766.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சில நேரங்களில் சில மனிதர்கள் ( Sila Nerangalil Sila Manitharkal )

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    ஜெயகாந்தன்

     

    “சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்

     

    இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? ( Che Guevara Puradchiyaalar Aanathu Eppadi? )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    மருதன்

     

    அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.

     

    தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.

     

    ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரயுக நாயகன் வேள்பாரி (VOL-I & II) / Veerayuga Nayagan Velpari

    Rs. 11,490.00
    or 3 X Rs.3,830.00 with

    சு.வெங்கடேசன்

     

    தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
     

    பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
     

    பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

    or 3 X Rs. 3,830.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    சிவகாமியின் சபதம் ( Sivagamiyin Sabatham )

    Original price was: Rs. 5,940.00.Current price is: Rs. 5,700.00.
    or 3 X Rs.1,900.00 with

    கல்கி

     

    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது.

     

    முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

     

    மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும்.

     

    எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி… வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

    or 3 X Rs. 1,900.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உறுபசி / Urupasi

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை.

     

    சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது.

    எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] அனைவருக்குமான இயற்பியல்: இயக்கம், வெப்பம் ( Physics for Everyone: Motion and Heat)

    Original price was: Rs. 3,290.00.Current price is: Rs. 2,490.00.
    or 3 X Rs.830.00 with

    எல். லாண்டாவேர் அ. கிட்டகரோட்ஸ்கி

    தமிழில்: டாக்டர். இ. பழனியாண்டி

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விளக்குகள் பல தந்த ஒளி

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    லில்லியன் எயிஷ்லர் வாட்சன்

     

    எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் புத்தகங்கள் நான்கு. அவற்றை வாசிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம்..! எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள மூன்றாவது புத்தகம், விளக்குகள் பல தந்த ஒளி ( Light From Many Lamps) லில்லியன் எயிஷ்லர் வாட்சன் எழுதிய இந்தப் புத்தகம் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாகச் சுடர் விடுகிறது. நாற்பது வருட காலமாக என்னை வழிநடத்திச் செல்லும். ஒரு அரிய பொக்கிஷமாக இருந்து வருகிறது. — A.P.J Abdul Kalam

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அள்ள அள்ள பணம் 5: பங்குச்சந்தை டிரேடிங் ( Pangusantha: Trading )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with
    சோம வள்ளியப்பன்
    பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். “அள்ள அள்ளப் பணம்” என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது “இண்ட்ரா டே டிரேடிங்” எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். தீ, நெருப்பு கொஞ்சம் கவனமாக இல்லை என்றால் பொசுக்கிவிடும். ஆனால் அந்த நெருப்புதானே விட்டில் பூச்சிகளை விரும்பி அழைக்கிறது. விட்டில் பூச்சிகள் போல பொசுங்கிவிடாமல், கனமான ஆமை ஓட்டை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம். டிரேடிங்கில் வெல்ல நிறைய கணக்கு தெரிந்திருக்க வேண்டும். கேண்டில்கள், வேவ்கள் போன்ற வரைபடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள முடியும். சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைபிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.
    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பொன்னியின் செல்வன் (Vol.1 – Vol. 5) / Ponniyin Selvan

    Original price was: Rs. 13,190.00.Current price is: Rs. 12,290.00.
    or 3 X Rs.4,096.67 with

    கல்கி

     

    பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.
     

    சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை – அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
     

    இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல…

    or 3 X Rs. 4,096.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் ( Intha kulathil Kallerinthavarkal )

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    வைரமுத்து

     

    வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது.

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சிகரங்களை நோக்கி ( Siharangalai Nokki )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    கவிப்பேரரசு வைரமுத்து

     

     

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 2 (Marx Engels Selected Works in 12 Volumes)

    Original price was: Rs. 1,990.00.Current price is: Rs. 1,190.00.
    or 3 X Rs.396.67 with

    கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்

     

    பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

    Rs. 6,600.00
    or 3 X Rs.2,200.00 with

    சி. சரவணகார்த்திகேயன்

     

    ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக‌ மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த‌ உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!
    or 3 X Rs. 2,200.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் ( Thadaikatkele Vettrikkaana Padikkattugal )

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    ரயன் ஹாலிடே

    தமிழில்: PSV குமாரசாமி

     

    தற்போதைய மற்றும் வருங்காலத் தலைவர்கள் ஒவ்வொருவரின் படுக்கைக்கு அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு நூல்.!”
    –ராபர்ட் கிரீன் ‘த 48 லாஸ் ஆஃப் பவரி நூலின் ஆசிரியர்

     

    “தத்துவத்தை வகுப்பறைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து, அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கு, அதாவது நம்முடைய அன்றாட வாழ்விற்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் ரயன். வாழ்க்கைக்கான ஒருவிதமான கையேடான இதை நீங்கள் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்து, எந்தவொரு தடையையும் தகர்க்கவும் எந்தவொரு சச்சரவையும் தீர்க்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது:
    –ஜிம்மி லோனி ‘ரோம்ஸ் லாஸ்ட் சிட்டிசன்’ நூலின் ஆசிரியர்

     

    “முதலில் மார்கஸ் ஆரீலியஸ் வந்தார். அதையடுத்து பிரஷ்ய நாட்டு இராணுவத் தலைவர் இரண்டாம் ஃபிரெடரிக் வந்தார். இப்போது ரயன் வந்துள்ளார். தடைகளையும் சவால்களையும் அரவணைத்துக் கொள்வதன் மூலம் உங்களால் எவ்வாறு ஓர் அற்புதமான வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்ள காட்டுகிறது.” முடியும் என்பதை இப்புத்தகம்
    –கிரிஸ் கில்லபோ ‘த $100 ஸ்டாரிட்டப் நூலின் ஆசிரியர்

     

    விரக்தி “இந்த சுவாரசியமான நூலில், ரயன், செம்மையாக வாழ்வதற்கும் சிறப்பாகத் தலைமையேற்று நடத்துவதற்கும். வழிகாட்டுகின்ற பாதையில் பிரகாசமான வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார். தோல்விகள், தடைகள், போன்றவற்றை எப்படி நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதைக் காட்டியுள்ளதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லத் தேவையான பல உத்திகளை அவர் நமக்கு அளித்துள்ளார். இதைப் படித்துப் பயன் பெறுங்கள்.”
    –நான்சி எஃப் கொஹன், வரலாற்றியலாளர், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல்

     

    “என் வாழ்க்கை தடைகளால் சூழப்பட்டிருந்தது. அவற்றைக் கடந்து வெற்றியை அடைவதற்குக் கடும் பயிற்சி தேவை. ரயனின் நூல் அதற்கான ஒரு சரியான வழிகாட்டி”
    –ஜேம்ஸ் ஆல்டுசெர் ‘சூஸ் யுவர்செல்ஃப்’ நூலின் ஆசிரியர்

     

    “ரயனின் இப்புத்தகம், பேரரசர் அலெக்சாண்டரிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ்வரை எண்ணற்றச் செயல்வீரர்களால் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த சுயஆளுமைக்கான உத்திகளைப் பிழிந்தெடுத்துச் சாறாகக் கொடுத்திருக்கிறது. நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுடைய வாழ்க்கை ஒரு புரட்சிகரமான விதத்தில் மாறும்.”
    –ஸ்டீவன் பிரெஸ்ஃபீல்டு, ‘த வார் ஆஃப் ஆர்ட்’ நூலின் ஆசிரியர்

     

    “இந்நூல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
    –கமல் ரவிகாந்த் ‘லிவ் யுவர் ட்ரூத்’ நூலின் ஆசிரியர்

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மார்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் ( Marketing Panja Maapathahangal )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

     

    சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும்.

     

    மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் தினம் இதனைத் தவறாகச் செய்து கையைச் சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மார்க்கெட்டிங்கில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மிக அழகாக நமக்கு விளக்குகிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. சாதாரணத் தவறுகள் அல்ல இவை. மாபாதகங்கள். இந்தப் பாதகச் செயல்களைச் செய்வோருக்கு மீளாத பாவம் வந்துசேரும். இந்தத் தவறுகளால் அவர்களுடைய நிறுவனங்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படலாம்.

     

     

    ஏன், நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். இந்தப் பஞ்ச மாபாதகங்களைப் பற்றிப் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது. குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கமுடியும் என்று சொல்லலாம். சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் முந்தைய நூல்களான ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’, ‘விளம்பர மாயாஜாலம்’ ஆகியவை இந்த நிர்வாகத் துறைகளில் தமிழில் வெளிவந்த முதல் நூல்கள். பல எம்.பி.ஏ கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களாக உள்ளன. இந்த நூலும் அதே வரிசையில் வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்வோருக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விடை: வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பது எப்படி என்ற கேள்விக்கான விடை ( The Answer )

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    ஆலன் பீஸ் & பார்பரா பீஸ்

    நாகலட்சுமி சண்முகம்

     

    வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதை எவ்வாறு கண்டுபிடிப்பது, பின்னர் அதைச் சாத்தியமாக்குங்கள்

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் ஆகியோரின் இந்த அற்புதமான புத்தகம், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்தே தொடங்குகிறது என்பதைக் காட்டும்.

    விடை:

    – மாற்றத்தை நோக்கி முதல் படி எடுத்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுகிறது

    – உங்கள் வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது

    – மூளையின் வெற்றியை இயக்கும் திறன் பற்றிய புதிய அறிவியல் ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது

    – ஆலனும் பார்பராவும் முரண்பாடுகளை சமாளிப்பதற்கான தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

    பேரழிவு தாக்கியபோது, உத்வேகம் தரும் குருக்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸின் வாழ்க்கையை ​​தோல்வியை இறுதி வெற்றியாக மாற்றுவது எப்படி என்பதை அறிய அவர்கள் அறிவியலின் பக்கம் திரும்பினர். மூளையின் புதிய ஆய்வுகளை அவர்கள் கண்டுபிடித்தனர், இது உங்கள் மனநிலையை நீங்கள் எவ்வாறு மறுபரிசீலனை செய்யலாம் என்பதைக் காட்டுகிறது, இது வாய்ப்புகளைப் பார்க்க உதவுகிறது, சிரமங்களை அல்ல. பதிலில், பீஸ்கள் தங்கள் அனுபவங்களை நேர்மையுடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் விரும்புகின்றபடி மாற்றுவது என்பதை உங்களுக்குக் காட்டுகின்றனர்.

    எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால் ஆனால் மாற்றுவதற்கான முதல் படி செய்ய உதவி தேவைப்பட்டால் பதில் எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்:

    – நீங்களே சரியான கேள்விகளைக் கேளுங்கள்

    – வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்ற நம்பிக்கையைப் பெறுங்கள்

    – உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்து வாழ்க்கையில் ஒரு உண்மையான போக்கை நிறுவுங்கள்

    பதிலில், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்து தொடங்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பொன்னியின் செல்வன்: சுருக்கப்பட்ட வடிவம்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    கல்கி

     

    இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில்.
     

    வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கானவர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்துகொண்டே இருக்கும் மகத்தான வரலாற்றுப் புதினம் இது.
    தமிழ் வரலாற்றின் பொற்காலம் என்று புகழப்படும் சோழர்களின் காலத்தை இந்நாவல் போல் நம் கண் முன்னால் கொண்டுவரும் இன்னொரு அற்புதப் படைப்பு இதுவரை தமிழில் எழுதப்படவில்லை. சோழர்களின் வரலாற்றைச் சரித்திர நூல்களிலிருந்து அறிந்துகொண்டதைக் காட்டிலும் பொன்னியின் செல்வனிலிருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்தோடு கற்றிருக்கிறார்கள்.
     

    தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனின் அழகிய, கையடக்க வடிவம் இந்நூல்.
     

    ஒரு மகத்தான சாகச உலகம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
     

    முழுக்க, முழுக்க கல்கியின் எழுத்துகளிலிருந்தே சுருக்கப்பட்டிருப்பதால் மூல நூலின் நடையும் சுவையும் நூறு சதவிகிதம் இதிலும் இடம்பெற்றிருக்கின்றன.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு

     

    · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

     

    · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?

     

    · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?

     

    · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?

     

    · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?

     

    தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.

     

    வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அசுரன் : வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் (Asura: Veelthapattavarkalin Veera Kaaviyam)

    Rs. 4,490.00
    or 3 X Rs.1,496.67 with

    ஆனந்த் நீலகண்டன்

     

     

    அசுர வெற்றி மற்றும் தோல்வியின் ஒரு காவியக் கதையாகும், இது ராவணனின் கதையில் புதிய வெளிச்சம் போடுகிறது, வெற்றி பெற்ற அசுரர் மக்கள், புகழ்பெற்ற இந்திய காவியமான ராமாயணத்தில் சொல்ல ஒரு வித்தியாசமான கதை இருந்தது. 3000 ஆண்டுகளாக, ராவணனின் கதை, இருள் என்ற தீய அரக்கனைக் கடவுளின் அவதாரமான ராமனின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் இப்போது, ராவணனின் குரல் மௌனத்திலிருந்து வெளிவருகிறது, அவர் ராவணாயணத்தை, தோற்கடிக்கப்பட்டவர்களின் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

     

     

    பத்ரா, ஒரு பொதுவான அசுரர், ராவணனை ஒரு இளம் தலைவராகப் பின்தொடர்கிறார், அவர் தங்கள் மக்களுக்கு சிறந்த உலகத்தை உறுதியளிக்கிறார். ராவணன் தனது மக்களை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறான், தேவர்களிடமிருந்து (கடவுள்கள்) ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான், ஆனால் அசுரர்கள் தங்கள் அவலநிலை மாறாமல் இருப்பதை விரைவில் உணர்கிறார்கள். ராவணனின் லட்சியங்கள் மற்றும் செயல்கள் மூலம், உலகின் வரலாறு மாற்றப்பட்டது, மேலும் பத்ராவின் வாழ்க்கை ஹீரோக்களுக்கும் வில்லன்களுக்கும் இடையிலான போரில் தோல்வியுற்றவரின் கதையாக மாறுகிறது. அசுர பாரம்பரிய கதைக்கு சவால் விடுகிறார் மற்றும் வெற்றி பெற்றவர்களின் நிகழ்வுகளின் பதிப்பால் நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த அசுர மக்கள், அவர்களின் போராட்டங்கள் மற்றும் ராவணனின் கதை பற்றிய சிந்தனையைத் தூண்டும் முன்னோக்கை முன்வைக்கிறது.

    or 3 X Rs. 1,496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    நாகூர் ரூமி

     

    காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்.

     

    மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச் செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய மக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்ற நேர்மையால் கவர்ந்தவர்.
     

    விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து, தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து, எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர். தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர். ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம் போகமுடியாது என்ற நிலையை போக்கியவர். கல்விக் கண் திறந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக, முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். பதவியை பெரிதாக நினைக்காதவர். முதல்வர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தவர். நேருவுக்கு பிறகு இரண்டு முறை நாட்டின் பிரதமர்களை முடிவு செய்தவர். லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பிரதமர்களாக தேர்வு செய்தவர்.
     

    ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் உயிராக கருதியவர். கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். தனக்கென்று சொந்தமாக வீடுகூட இல்லாதவர். ஒரு செண்ட் நிலம் கூட சம்பாதிக்காதவர். காந்தியின் கடைசி வாரிசாக வாழ்ந்து, அவருடைய பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மகத்தான தலைவர். காமராஜ் ஒரு சகாப்தம். பள்ளிகள் இருக்கும்வரை அவர் புகழ் இருக்கும். அணைகள் இருக்கும் வரை அவர் புகழ் அணையாது.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    ஒரே ஒரு விஷயம்

    Original price was: Rs. 2,290.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    கேரி கெல்லர் & ஜே பாபசான்

     

    நாகலட்சுமி சண்முகம்

     

    ஒரே ஒரு விஷயம்: அற்புதமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியகரமான உண்மைகள், 2013 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசான் ஆகியோரால் எழுதப்பட்டது. புத்தகம், தி ஒன் திங், நமது வெற்றியைத் தடுக்கும் பொய்கள், நம் நேரத்தைத் திருடி, நோக்கத்தில் நம் செறிவை அதிகரிக்கும் திருடர்கள் போன்ற தடைகளை சமாளிக்க நம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பழக்கத்தை எவ்வாறு இணைக்க முடியும் என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்களின் வேலையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தடுக்கும் காரணிகளை நீக்குகிறது. புத்தகம் படிக்க எளிதானது மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்களில் கணிசமானதாகும்.

     

    ஒருவருடைய வழியில் வரும் குழப்பமான கவனச்சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.

     

    இந்த புத்தகம் தினசரி வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு அவர்களின் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும், பெரும் நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு உணர்வை சமாளிக்கவும் மற்றும் ஒரு சிறந்த காலப்பகுதியில் சிறந்த முடிவுகளை அடையவும் உதவுகிறது.

     

    உங்கள் வாழ்க்கை – வேலை, தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகம் என்றால் ஒன் திங் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண முடிவுகளை அளிக்கிறது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பணமே ஓடி வா

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with
    சோமா. வள்ளியப்பன்
     

    சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.’அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.
    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    சோம வள்ளியப்பன்

     

    “கம்ப ராமாயணம் என்பது பக்தி இலக்கியமோ தமிழ்க் காவியமோ மட்டுமல்ல. அள்ள அள்ளக் குறையாத பெரும் செல்வக் குவியல்களைக் கொண்ட பேரதிசயம் அது. அறிவியல், அரசியல், சமூகவியல் என்று தொடங்கி இன்று நாம் நவீனம் என்று கருதும் பல துறைகளுக்கான ஆரம்ப வித்துகளை கம்பர் அன்றே விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். சோம. வள்ளியப்பனின் இந்நூல் கம்ப ராமாயணத்தில் புதைந்து கிடக்கும் மேலாண்மைச் சிந்தனைகளை அகழ்வாய்ந்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.

    நமக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்துக்கொள்வது, அவற்றை நோக்கி எவ்வாறு பயணம் செய்வது, பயணம் செய்வதற்குத் தகுந்த பயிற்சிகளை எங்கிருந்து பெறுவது என்று தொடங்கி தனி நபர்களுக்கும் மேலாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பல ஆழமான, அற்புதமான ஆலோசனைகளை இந்நூல் நமக்கு அளிக்கிறது. நவீன நிர்வாகவியல் கோட்பாடுகளை கம்பனின் வரிகளோடு மிகப் பொருத்தமாக இணைத்து ஒரு ரசவாதத்தை சோம. வள்ளியப்பன் இந்நூலில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். மேலாண்மையும் இலக்கியமும், பழமையும் புதுமையும், இலக்கிய நயமும் நவீன உத்திகளும் இந்நூலில் ஒன்றிணைகின்றன. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமை கொள்ளவேண்டிய நூல்.”

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நேரத்தை உரமாக்கு

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    சோம. வள்ளியப்பன்

     

    திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு.

    படிப்பு, தகுதி, செல்வம், புகழ், திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான்.

    சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான, ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல், மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu

    Original price was: Rs. 6,180.00.Current price is: Rs. 5,870.00.

    ராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்

     

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

     

    கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

     

    பணம்சார் உளவியல்

     

    பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

     

    “மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்

     

    “ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்

     

    “மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்

     

    பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.

     

    “பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

    or 3 X Rs. 1,956.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு ( Kiddathatta Anaithaiyum Pattriya Surukkamaana Varazhaaru ) ) A Short History of Nearly Everything

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    பில் பிரைசன்

    ப்ரவாஹன்

     

    அறிவியல்… அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே! அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

     

    ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ.தூரம் பயணம் செய்தார் பில்பிரைசன்…. உலகில் வாழும் 2,000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது… அறிவியலை, நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. — Junior Vikadan

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இந்திய நாகரிகம்

    Rs. 3,390.00
    or 3 X Rs.1,130.00 with

    நமித் அரோரா

     

    இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர். இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் நூல் இது.
     

    நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம், இக்ஷ்வாகு வம்சத்தவரின் தலைநகரமான நாகார்ஜூனகொண்டா, பௌத்தர்களின் கல்வி மையமான நாளந்தா, புரியாத புதிரான
    கஜுராஹோ, ஹம்பியின் விஜயநகரம், இறுதியாக வாரணாசி, மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோ போலோ போன்ற புகழ்பெற்ற பயணிகளின் சுவையான கதைகளையும் பொருத்தமான இடங்களில் அறிமுகப்படுத்துகிறார்.
     

    தெளிவான, நேர்த்தியான நடையில், நம்முடைய முன்னோர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் எவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை நெறிப்படுத்துகின்றன, எஞ்சியவை எப்படி காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன என்று காட்டுகிறார். நம்முடைய ரத்த நாளங்களில் கலந்துவிட்ட வரலாற்றின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது இந்நூல்.

    or 3 X Rs. 1,130.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி

     

    நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பயன்படுத்தப்படவில்லை, தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச

     

    வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள்.

    முதன் முறையாக இந்நூல் இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. விரிவான அடிக்குறிப்புகளுடன் வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது. * முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, சித்தர் பாடல் தொகுப்பு போன்ற நூல்களை செர்மனில் மொழிபெயர்த்தவர்.வீரமாமுனிவரின் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல மாலை பாடல்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அழகியல், பன்முகப் பண்பாட்டு உரையாடல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறார்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] வேதியலைப் பற்றி 107 கதைகள் ( 107 Stories About Chemistry )

    Original price was: Rs. 1,990.00.Current price is: Rs. 1,190.00.
    or 3 X Rs.396.67 with

    எல். வ்லாசோவ் , டி.ட்ரிபோனோவ்

    தமிழில்: டாக்டர் கணேசன்

     

    இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் வேதியியலின் மிகவும் முக்கியமான சுவையான பிரச்சினைகளை மட்டுமே குறிப்பிட முயன்றுள்ளனர். இந்தப் புத்தகம் மூலகப் படியமைப்பு அட்டவணையை விவரித்து அதற்கு விளக்கம் தருகிறது; விசித்திரமான காட்சிப் பொருள்களைக் கொண்ட வேதியியல் பொருட்காட்சிக்கூடம் எனக் கூறத்தக்கதினுள் உங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறது: வேதியியலார் தயாரித்திருக்கும் மிகச் சிக்கலான பொருள்களைப் பற்றியும், தனிமங்களின் தனியொரு அணுவைக் கொண்டு அவர்கள் செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டது பற்றியும் உங்களுக்கு எடுத்துரைக்கிறது. வேதியியலைச் சேர்ந்த பல்வேறு பணித் துறைகளையும் அறிமுகப் படுத்துகிறது. மனித செயல்பாட்டின் எல்லா அரங்குகளிலும் வேதியியல் ஊடுருவிச் சென்றிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெற்றிக்கொடி கட்டு: ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    வில்லி ஜாலி

    தமிழில்: லலிதா கல்யாணசுந்தரம்

     

    வில்லி ஜாலி இந்த ஆண்டின் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். — டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல்

     

    ஜாலி தமது இலக்கை எட்டுகிறார். ஒரு பரந்து விரிந்த வாசகர் வரிசையை அவர் ஒருங்கிணைக்கிறார் — பப்ளிஷர்ஸ் வீக்லி

     

    வாழ்க்கையில் தாழ்ந்த நிலையில் நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகம் மேலே ஏறும் பாதையைக் காட்டும். ஒரு மிகப்பெரும் வாசிப்பு. –லெஸ் பிரவுன், ‘லிவ் யுவர் ட்ரீம்ஸ்’ இன் ஆசிரியர்

     

    ‘வெற்றிக்கொடி கட்டு-ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்’ புத்தகத்தைப் படிப்பது உங்கள் பிரச்சினைகளை வாய்ப்புகளாகவும், சவால்களை ஒளிமிகுந்த சந்தர்ப்பங்களாகவும் மாற்ற உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். –வாலி ‘ஃபேமஸ்’ ஆமோஸ், வாட்டர்மெலன் மாஜிக்கின் ஆசிரியர்

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வியாபார வியூகங்கள்

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with
    சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
    தலைசிறந்த பிசினஸ் ஜர்னல்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள், நிர்வாக மேதைகளின் ஆய்வுகள், அறிக்கைகள், அறிவுரைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வியூகங்கள் உங்களை வெல்லவைக்கும். எதிரிகளை மீளமுடியாமல் சிக்கவைக்கும். * ஸ்ட்ரடீஜிக் மானேஜ்மெண்ட் * பஸ்ட் திறனாய்வு * ஐந்து போட்டி சக்திகள் அமைப்பு * வேல்யூ செயின் * கம்பெனி விஷன் டாகுமெண்ட் * கோர் காம்பெடன்ஸ் * வியூக அறிக்கை * ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு * ஜெனரிக் வியூகங்கள் * ஸ்வாட் திறனாய்வு பயப்படாதீர்கள்… இந்தச் சிக்கலான கடினமான விஷயங்கள் அனைத்தையும் எளிமையாகத் தோளின்மீது கை போட்டபடியே பேசும் நண்பர்போல் வெகு ஜோவியலாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆன்மிக அரசியல்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    ஆர். ரங்கராஜ் பாண்டே

     

    ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கான தரத்துடன் ஆதாரங்களுடன் இந்த நூலில் ரங்கராஜ் பாண்டே தொகுத்தளித்திருக்கிறார்.
     

    ஆகமங்கள் தொடர்பாக நவீன கால முனைவர் பட்டம் பெற்ற தீபாதுரைசாமி, மரபார்ந்த சைவ ஆகம பண்டிதர் குளித்தலை இராமலிங்கம் என இரு தரப்பு நிபுணர் களிடம் நூலாசிரியர் மேற்கொண்ட உரையாடல் இந்த நூலுக்கு மகுடமாகத் திகழ்கிறது.
     

    பூணூல் அறுப்பு, நாத்திகர்களுக்குக் கோவிலில் என்ன வேலை, அறநிலையத்துறையின் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்தர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும், அனைத்து மதத்தினருக்கும் ஆலயத்தில் நுழைய உரிமை உண்டா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி அச்சமின்றி விவாதிக்கிறார் ரங்கராஜ் பாண்டே. சட்ட திட்டங்களில் நம்பிக்கைகொண்டவர்கள், மதச்சார்பற்ற நேர்த்தியான நிர்வாகத்தில் அக்கறைகொண்டவர்கள் ஆகியோரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஒரு யோகியின் சுயசரிதம்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    பரமஹம்ஸ யோகானந்தர்

     

    30–ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார் -ஒவ்வொரு மனிதனின் வாழ்க் கையிலும் உள்ள ஆனந்தம், அழகு மற்றும் மறைந்துள்ள எல்லையற்ற ஆன்மீகத் தன்மைகள்.

     

    ஆகியவற்றை நோக்கி நம் இதயங்களையும் மனங்களையும் திறந்த வண்ணம்தான்.இதன் ஆசிரியரால் நிறுவப்பட்ட ஸ்தாபன மாசிய யோகதா சத்சங்க சொஸைடி, ஆஃப் இந்தியா-விடமிருந்து மட்டுமே கிடைக்கப் பெறுகின்ற இந்த முழுமையான பதிப்பு 1946ம் வெருடப் பதிப்பிற்குப் பிறகு அவர் இணைத்த விரிவான விஷயங்களையும் சேர்த்து இறுதி பாலுக்கான அவரது அனைத்து அலாக்களையும் உள்ளடக்கியுள்ளாதாகும்மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னால் களைத் திறக்கும் புத்தகம்.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (The Communist Manifesto)

    Original price was: Rs. 1,390.00.Current price is: Rs. 890.00.
    or 3 X Rs.296.67 with

    கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்

    தமிழில்: ரா. கிருஷ்னையா

     

    “சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்தவமுடைத்த புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம்-இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது.”
    – லெனின்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மர்ம சந்நியாசி

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    எஸ். பி. சொக்கலிங்கம்

     

    ஒரு சமஸ்தானத்து இளவரசர் மாளிகையில் இறந்து விடுகிறார். சில வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு சந்நியாசி வருகிறார். வந்ததோடு நில்லாமல், நான்தான் இறந்துபோனதாகச் சொல்லப்படும் இளவரசர் என்கிறார் அவர். ஊரே பரபரப்பாகிறது. ராஜ வம்சத்து விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. சந்தியாசியை நம்பலாமா? ஆம் எனில் இறந்தவர் யார்? யாருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன? மர்மசந்நியாசி தான் இளவரசர் என்றால் இத்தனை வருடங்கள் அவர் எங்கு போயிருந்தார்? ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஒருவேளை வாரிசு இல்லாத சமஸ்தானத்தைக் கைப்பற்ற பிரிட்டிஷ் இந்திய அரசு போட்ட திட்டமா இது?
    விசித்திரமான, விறுவிறுப்பான, எண்ணற்ற ஊசிமுனை திருப்பங்களைக் கொண்ட இந்த மர்ம வழக்கை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் நூலாசிரியர் சொக்கலிங்கம். கற்பனையை விஞ்சும் உண்மை வரலாறு இந்நூல்.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] கடல்களும் மனிதனும் ( Ocean and Man )

    Original price was: Rs. 2,990.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    ப. ஸலோகின்

    தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன்

     

    இன்று உலகக் கடல்களின் மீட்பும் கடல் வளங்களை விவேகமாகப் பயன்படுத்துவதும் உலகப் பிரச்சினையாகும். உலகம் பூராவும் உள்ள மக்களின் கூட்டு முயற்சியால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க

    Rs. 640.00
    or 3 X Rs.213.33 with

    கோபிநாத்

     

    ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!

    or 3 X Rs. 213.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    யாஸீன் மௌலானா நாயகம்

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    நாகூர் ரூமி

     

    சமயங்களோடும் அற்புதங்களோடும் தொடர்பு கொண்ட சீர்காழிக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதம்தான் யாஸீன் மௌலானா நாயகம். நபிகள் நாயகத்தின் 33வது தலைமுறையில் வரும் இந்த ஞானி தன் அறிவாலும் அற்புதத்தாலும் செய்த சேவைகளும் சாதனைகளும் மகத்தானவை. பல நேரங்களில் சேவையே சாதனையாகவும் சாதனையே சேவையாகவும் ஆனதுண்டு.
     

    அரபிகள் வியக்கும் அரபி அறிவு. தமிழர்கள் வியக்கும் தமிழறிவு. மதம் பார்க்காத மானிட சேவை. இவற்றின் மொத்த உருவம்தான் யாஸீன் மௌலானா நாயகம் அவர்களது வாழ்க்கை பற்றிய தகவல்களை முழுமையாகவும் விரிவாகவும் இணையம் முதலான பொதுவெளியில் காணமுடியவில்லை.
     

    கவிதை, தத்துவார்த்த விளக்க உரைகள், பாமாலைகள், அரபு தமிழ் அகராதி என யாஸீன் நாயகத்தின் படைப்புலகம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. யாஸீன் நாயகத்தின் வாழ்வையும், சிந்தனைகளையும், சாதனைகளையும் சுருக்கமாக ஆவணப்படுத்துகிறார் நாகூர் ரூமி. இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] லெனின் நூல் திரட்டு தொகுதி 1 ( Lenin: Collected Works )

    Original price was: Rs. 1,990.00.Current price is: Rs. 1,390.00.
    or 3 X Rs.463.33 with

    லெனின்

     

    வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்

     

    மார்க்ஸியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்

     

    மார்க்ஸியமும் திருத்தல்வாதமும்

     

    ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கைலாய: மானசரோவர் யாத்திரை

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    இலந்தை சு.ராமசாமி

     

    ‘இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட. பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை; பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை.
     

    உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை. எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது. நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார். இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ‘அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு’ என்கிற பயண நூலை எழுதியவர்.’

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] லெனின் நூல் திரட்டு தொகுதி 2 ( Lenin: Collected Works )

    Original price was: Rs. 1,990.00.Current price is: Rs. 1,390.00.
    or 3 X Rs.463.33 with

    லெனின்

     

    ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்

     

    அரசும் புரட்சியும்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குற்ற விசாரணை / Kutra Visaranai

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    லெ கிளேஸியா

    தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா

     

    மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை ‘குற்ற விசாரணை’யை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.

     

    1963இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது. ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் ‘குற்ற விசாரணை’.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரசவாதி ( Rasavathi ) The Alchemist

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    பாலோ கொயலோ

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை

     

     

    • Grand Prix des lectrices de Elle for roman (1995)
    • Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
    • Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
    • 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்

     

    “ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” அந்தோனி ராபின்ஸ்

     

    “உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி

     

    “இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்

     

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி? ( Businessil thatkozhai Seythu Kolvathu Eppadi )

    Original price was: Rs. 990.00.Current price is: Rs. 890.00.
    or 3 X Rs.296.67 with

    சதிஹீஷ் கிருஷ்ணமூர்த்தி

     

     

    என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது?

     

    அப்படிச் செய்தால் என்னாகும்?

     

     

    எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்?

     

    எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்?

     

    ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை. இந்நூல் அதைத்தான் செய்கிறது என்பதால் ஒரு வகையில் இது உங்களுக்கான கசப்பு மருந்து. நீங்கள் எப்படியெல்லாம் மேலே மேலே உயரவேண்டும் என்றல்ல, எங்கெல்லாம் சறுக்குவீர்கள் என்பதைக் கவனத்துடன் இந்நூல் உங்களுக்குச் சுட்டிக்காட்டப்போகிறது. தெரிந்தும் தெரியாமலும் தொழிலில் தவறு செய்து தானும் தற்கொலை செய்துகொண்டு தன் தொழிலையும் கொல்லும் விதங்களை, விபரீதங்களை விவரிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். மார்க்கெட்டிங், பிராண்டிங் உலகின் முடிசூடா தாதாவாகத் திகழும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் உங்களைத் தற்கொலையிலிருந்து தடுத்து நிறுத்தப்போகிறது. அதோ சிகரம் என்று உற்சாகப்படுத்துவதற்குப் பதில், ஐயோ பள்ளம் என்று அலறி உங்களைத் தடுத்தாளப்போகிறது. நிஜமாக வெற்றி என்பது எந்தக் கட்டத்திலும் தோல்வி அடையாமல் இருப்பதிலிருந்துதான் தொடங்குகிறது அல்லவா?

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஸ்காந்த புராணம்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    ஸ்ரீ கோவிந்தராஜன்

     

    ‘இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட. பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை; பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை. உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை. எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது. நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார். இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ‘அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு’ என்கிற பயண நூலை எழுதியவர்.’
    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] புவியகத்தின் புரியாப் புதிர்கள் ( The Mystery of The Earth’s Mantle )

    Original price was: Rs. 1,490.00.Current price is: Rs. 790.00.
    or 3 X Rs.263.33 with

    அ. மலாஹவ்

    தமிழில்: ரா. கிருஷ்ணையா

     

    நமது புவியின் அகத்துள் இருப்பது என்ன? அதன் உள்ளடுக்கு மறைத்து வைத்திருக்கும் இரகசியங்கள் யாவை? மீயாழத்துறப்பணத் துளைகளில் செலுத்தப்படும் நுண்ணுணர்வுக் கருவிகள் இங்கு காணப் போவது என்ன? கொதிக்கும் மேக்மாக் குழம்பா, அல்லது மீத்திண்மத் திடப் பொருளா? கற்பனைக்கும் மீறிய மிக உயர்ந்த வெப்பநிலைகளா, அல்லது தனிமச் சுழியை அணுகும் கொடுங்குளிரா?

     

    எண்ணில் அடங்காத பல்வேறு கருதுகோள்களும் முன்வைக்கப்பட்டுள்ளன; ஆனால் விஞ்ஞானத்தால் இன்னமும் இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் அளிக்க இயலவில்லை.

     

    பூமியின் ஆழ் மண்டலங்களது இரகசியங்களை விஞ்ஞானிகள் எப்படி யெல்லாம் பாடுபட்டுத் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. நமது புவிக்கோளத்தின் அடியாழங்களை ஆராய்ந்து அறிவதற்காகத் தமது வாழ்வைப் பணித்துள்ள புவியியலாளர்கள் அயராது மேற்கொள்ளும் முயற்சி களின், ஆராய்ச்சிகளின் சிந்தையை அள்ளும் காவியமே இப் புத்தகத்தின் உள்ளடக்கம்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    1877 – தாது வருடப் பஞ்சம்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    வில்லியம் டிக்பி

     

    உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன.
     

    வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி நிற்கும் நூல்களில் ஒன்று, வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேய எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும் உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தைக் கூர்மையாகவும் நேர்மையாகவும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர்.
     

    உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத விநோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியைக் குத்திக் கிளறிவிடும் வரலாற்றின் கதையும்கூட.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிகாரம் அமைதி சுதந்திரம் ( Adhigaram Amaithi Suthandhiram )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சாரு நிவேதிதா

     

    நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை.அந்த சிதனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்…யாரையும் எதையும் நம்பாதீர்கள். உங்களை நப்புங்கள். உங்களைப் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பணம் சில ரகசியங்கள் ( Panam Sila Rahasiyangal )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with
    சோம. வள்ளியப்பன்
     
    எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.
    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more