Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தமிழ் Books
Showing 241–300 of 622 results
-
ராமாயணம் (Sri Rama Lila)
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreவனமாலி
நாகலட்சுமி சண்முகம்மனித பரிபூரணத்தின் உச்சமாக பூமியில் அவதரித்த விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் கதை. வனமாலி ஆசிரமம், காலத்தால் அழியாத புராணமான ஸ்ரீ ராம லீலாவைப் படிக்கும் பண்டைய பாரம்பரியத்தைத் தொடர்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதப்பட்ட இந்நூல், வாசகர்களை கண்ணீரை வரவழைத்து, பக்தியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் யோகா வசிஷ்ட வசனங்கள் ஓதப்பட்டு, ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தை வழங்குகின்றன. ஸ்ரீ ராம லீலாவைப் படிப்பவர்களுக்கு வளமான கதைசொல்லல் மற்றும் ஆன்மீக நுண்ணறிவு ஆகியவற்றின் மாற்றத்தக்க அனுபவம் காத்திருக்கிறது.
-
ஜே.ஜே. சில குறிப்புகள் ( Je Je Sila Kurippugal )
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreசுந்தர ராமசாமி
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
நான் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகன் : ஓர் அம்பேத்கரியரின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreம. வெங்கடேசன்
இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்ட பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடமும் ஆர்.எஸ்.எஸ் எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; தேச விரோத, இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அளவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதையெல்லாம் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கப்படுகிறது.
தனது உண்மையான இலக்கு என்ன, கோட்பாடு என்ன என்பது பற்றியெல்லாம் பொதுவெளியில், ஊடகங்களில், கல்விப் புலங்களில் ஆர்.எஸ்.எஸ் பேசுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச்
சொல்லவேண்டும் என்ற எளிய நோக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையில் ஓர் அம்பேத்கரியராக இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார். -
விரும்பப்படாத ஒருவராக இருப்பதக்காண துணிச்சல் (The Courage to be Disliked) (virumbapadaadha oruvaraaha iruppadhatkaana thunichchal)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஇச்சிரோ கிஷிமி, ஃபூமிடாகா கோகா
PSV குமாரசாமி20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளை, இந்த நூல், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வாயிலாக எடுத்துரைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தத்துவஞானி, தன்னுடைய மாணாக்கனான அந்த இளைஞனிடம், நம்முடைய கடந்தகாலத் தளைகளிலிருந்தும், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய சொந்த வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார். இந்த விதமான சிந்தனை நமக்கு ஒரு விடுதலையுணர்வை அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நாமும் நம்மீது திணிக்கின்ற வரம்பெல்லைகளை அலட்சியம் செய்வதற்கும், நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்குமான துணிச்சலை இந்நூல் நமக்கு அளிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.
-
சைக்கிள் கமலத்தின் தங்கை ( Cycle Kamalaththin Thangai )
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஎஸ்.ராமகிருஷ்ணன்
நமக்குள் பொதுவான மொழியும், பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் கவிஞர் மிராஸ்லாவ் ஹோலுப். பேசப்படாத அந்த மௌனத்தின் பின்னுள்ள கதையை தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்காட்டுகிறார்.
அவரது கதையுலகம் புனைவின் விசித்திரங்களை கொண்டது. தோற்றவர்களின் வலியை, புறக்கணிக்கப்பட்டவர்களின் முணுமுணுப்பை, தனிமையில் பீடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை, தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகள் என்றே கூறவேண்டும்.
-
சக்தி (இரகசியம் #2) (Colour) ( The Power )
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withRead moreரோன்டா பைர்ன்
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
-
ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் (Think Like a Monk)
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreஜே ஷெட்டி
நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்: • உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது • எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது • அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது • மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது • சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது • நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர் • வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன் • இன்னும் பற்பல விஷயங்கள். . .
-
ரயில் நிலையங்களின் தோழமை ( Rail Nilaiyangalin Thozhamai )
Rs. 825.00or 3 X Rs.275.00 withRead moreஎஸ். ராமகிருஷ்ணன்
காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.
-
உருமாற்றம் / Urumaatram / The Metamorphosis Tamil
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஃபிரான்ஸ் காஃப்கா
தமிழில்: பேரா.ச.வின்சென்ட்
இந்த வாழ்க்கையும், வாழ்வின் மீதுள்ள பிடித்தங்களும் , மனமும் நம்மை உள்முகமாக வேறு ஒரு பக்கம் செலுத்திக்கொண்டிருக்க, வாழ்க்கை ஒரு இறுக்கமான இயந்திரத்தனமான வாழ்வைக் கையளித்தபோது , எப்போதேனும் நாங்கள் நினைத்திருப்போம்தானே? இந்த வாழ்வில் இருந்து வெளியேறுவது எப்படியென்று.
காஃப்காவின் ” உருமாற்றம்”அதன் ஒரு முயற்சியாகத்தான் எனும் நாவலைப் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான மனிதர்களால் அருவருப்பாகப் பார்க்கப்படுகின்ற கரப்பான் பூச்சியைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்ற ஒரு கதை.
ஒரு இளைஞன் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அதன் பின் நடப்பதெல்லாம் என்ன? இதுதான் கதை.
கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிற இளைஞன், எத்தகையதொரு கற்பனை, உங்களால் இப்படியொரு கற்பனையைச் செய்து பார்க்க முடிகின்றதா?
ஆம் காஃப்காவின் உருமாற்றம் அத்தகையதொரு முயற்சிதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்
-
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு ( Nermarai Sinthanaiyin Viyathaku Sakthi )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
-
வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreநிவேதிதா லூயிஸ்
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதன்மூலம் ஒரு புதிய வரலாற்றையும் இந்நூல் படைக்கிறது. மேல்கட்டுமானம் அல்ல, அடித்தளமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறார் நிவேதிதா லூயிஸ்.
இது ஒரு பயணத்தின் கதை. ஒரு நிலப்பரப்பின் கதை. நம் மண்ணின், நம் மனிதர்களின், நம் மரபுகளின் கதை.
-
இழக்காதே! பங்கு சந்தை: படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் / Izhakkathey!
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withRead moreசெல்லமுத்து குப்புசாமி
பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட.
அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.
-
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4) ( Pangusanthai: Portfolio Muthaleedugal )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
-
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பி விடாதீர்கள் (Don’t Believe Everything You Think)
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreஜோசப் நுயென்
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.
-
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withடி. தருமராஜ்
இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா, சாதி, அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து, நம் உணர்வு, ரசனை, பண்பாடு, மரபு, நிலம், மொழி, தத்துவம், வரலாறு என்று கிளைகளைப் பரப்பி, விரிந்துகொண்டே செல்கிறது. கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன.
இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.
கணித வரலாறு ( Kanitha Varalaaru )
Rs. 3,390.00or 3 X Rs.1,130.00 withகுட்டி இளவரசன் / Kutti Ilavarasan / The Little Prince Tamil
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஅந்த்வான் து செந்த் – எக்சுபெரி
தமிழில்: ச. மதனகல்யாணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”
இஸ்ரோவின் கதை : வியப்பூட்டும் விண்வெளிப் பாய்ச்சல்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreஹரிஹரசுதன் தங்கவேலு
இது இஸ்ரோவின் கதை. இது நம் தேசத்தின் கதை. நாம் ஒவ்வொருவரும் நம் இதயத்தில் பெருமிதத்தோடு ஏந்தி, கொண்டாடவேண்டிய ஒரு கதை. சோற்றுக்கே வழி இல்லாத ஒரு நாட்டுக்கு ஆகாயக் கனவுகளெல்லாம் தேவைதானா என்று இகழ்ந்தவர்கள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன கதையும்கூட. ஆனால், விண்வெளி, ராக்கெட், சாட்டிலைட், சந்திரயான் போன்றவற்றையெல்லாம் எல்லோரும் புரிந்துகொள்ள முடியுமா என்றொரு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினால் அதை முற்றாகக் களைந்துவிட்டு இதைப் படிக்க ஆரம்பியுங்கள். இதைவிடவும் சுவையான நடையில், இதைவிடவும் எளிமையாக இஸ்ரோவின் கதையை வேறு யாராலும் சொல்லிவிடமுடியாது.
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6) ( Mutual Fund )
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம. வள்ளியப்பன்
எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.
முறிந்த பாலம் ( Murintha Paazham )
Rs. 1,050.00or 3 X Rs.350.00 withRead moreதோர்ன்டன் ஒயில்டர்
தமிழில்: இரா. நடராசன்
தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.
இந்தியாவின் இருண்ட காலம் / Indiavin Irunda Kaalam
Rs. 3,300.00or 3 X Rs.1,100.00 withRead moreசசி தரூர்
தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச்சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.
சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது.
ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது. தவிரவும், காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது.
பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம், சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம்.
நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது.
கார்கடல் : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
Rs. 7,190.00or 3 X Rs.2,396.67 withRead moreஜெயமோகன்
மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையும் சினத்திற்கும் வஞ்சத்துக்கும் இறங்கவைக்கும் எல்லைகளையும்.
போர் ஏன் உலக இலக்கியங்களில் அத்தனை விரிவாகச் சொல்லப்படுகிறது? ஏனென்றால் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிகழ்ந்துகொண்டிருப்பது போர்தான். நுண்செயல்களாலான போர், அகப்போர், குறியீட்டுப்போர். அத்தனை போர்களையும் அப்பட்டமாகப் புறத்தே நிகழ்த்திப் பார்ப்பதே போர் என நிகழ்கிறது. அங்கே மனிதன் தன்னை முழுவிசையுடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் பிறமானுடருடன், அறியமுடியாத ஊழுடன் உரசிக் கொள்கிறான், அறிந்து மீள்கிறான், அழிகிறான்.
கார்கடல் முந்தைய நாவல்களில் பேருருவாக எழுந்த போர்க்களக் காட்சிகளை வெவ்வேறு கண்கள் வழியாக விரித்துரைத்து முன்செல்கிறது. மகாபாரதம் என்பதே போரின் கதைதான், அதன் அனைத்து நிகழ்வுகளும் போரிலேயே வந்து உச்சம் கொள்கின்றன. போரை அறிவதனூடாகவே அதன் முந்தைய நிகழ்வுகளனைத்தையும் நாம் அறியமுடியும். கார்கடல் மகாபாரத நிகழ்வுகள் அனைத்திலும் புதிய பார்வைகளை அளிக்கும் கதைப்பரப்பு.
கார்கடல் – வெண்முரசு நாவல் வரிசையில் இருபதாவது நாவல்.
மண்டியிடுங்கள் தந்தையே / Mandiyidungal Thandhaiye
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஎஸ்.ராமகிருஷ்ணன்
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை.
அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை.
இதுவே முதன்முறை, அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.
இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள்.
சோபியாவின் டயரிக்குறிப்புகள்.
டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள், பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள், எனத்தேடித்தேடி படித்தேன்.
சித்தார்த்தன் / Sithardhan / Siddhartha Tamil
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஹெர்மன் ஹெஸ்ஸே
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.
இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.
கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும் கழிவிரக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. 1922ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து பல மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறது. எளிமையான உரைநடையில், தேடலுள்ளவர் அனைவருக்கும் மிகவும் ஆழமான செய்தியை ஹெஸ்ஸே அனுப்பியுள்ளார்.
சத்தியத்திற்கான தேடலில் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறும் ஓர் இளைஞனைச் சுற்றிக் கதை சுழல்கிறது. ஒரு பிராமணச் சிறுவன் தன் தேடலைப் பின்தொடர்ந்து, அறிவொளி பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு தளத்திற்குச் செல்கிறான். அவன் தந்தைக்கு ஒரு பக்தியுள்ள பிராமணனாக, சமணனாக, பணக்கார வணிகனாக, காதலனாக, எளிய படகோட்டியாக வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
இதன்மூலம் அவன் தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் உணர்தல்களுக்கும் உட்படுகிறான், ஒரு பயிற்சியாளனாக பாராயணம் செய்யவோ, பக்தனாகத் தியானிக்கவோ இல்லை. சித்தார்த்தன் உலகத்துடன் கலக்க வருவதில்லை, இயற்கையின் தாளங்களுடன் எதிரொலிக்கிறான்; ஆற்றிலிருந்து பதில்களைக் கேட்க வாசகரின் காதைக் கீழே வளைக்கிறான்.
இந்தப் பதிப்பில் “வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதி இடம்பெறுகிறது. அதில் நாவல், நூலாசிரியர் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதற்கான வினாக்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன.
துணிந்தவனுக்கே வெற்றி ( Thuninthavanukke Vettri )
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஜாக் கேன்ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்சன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
- நீங்கள் விரும்பும் வெற்றியை அடைய வேண்டுமா?
- நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளைப் படைத்திட வேண்டுமா?
- உங்கள் பெருங்கனவுகளை நனவாக்கிட வேண்டுமா?
அவற்றை சாதிக்க வழிகாட்டுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் ஜாக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்சனும். அதற்குத் தேவையான உத்திகள் இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. உங்கள் சுயமதிப்பை வானளாவ உயர்த்தவும், உங்கள் தைரியத்திற்கு உயிரூட்டி, உரமிட்டு வளர்க்கவும், ஒரு வெற்றியாளனின் மனப்போக்கைத் தத்தெடுத்துக் கொள்ளவும் இப்புத்தகம் உங்களைத் தயார்படுத்தும். உங்கள் பயங்களை அடக்கியாளவும் வாழ்வின் சவால்களைச் சந்திக்கவும் துணியுங்கள், வெற்றி நிச்சயம்!
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் ( British Ulavaazhiyin Opputhal Vaakumoolam )
Rs. 590.00or 3 X Rs.196.67 withRead moreஆலிவர் ஹெம்பர்
சதித்திட்டங்களைத் தெரிந்து கொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.
அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.
கமல் / Kamal
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreபா. தீனதயாளன்
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை. கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது.
உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம். நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.
கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.
சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.
சிதறா கவனக் குவிப்பு (Hyperfocus) (Sidharaa Kavanak Kuvippu)
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreகிறிஸ் பெய்லி
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனை உயர்த்துகிறது? நாம் நம்முடைய வேலையை எளிதாக்கிக் கொள்ளாமல் அதைக் கடினமாக்கிக் கொள்வது எப்படி நாம் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பதைச் சாத்தியமாக்குகிறது? நாம் களைப்பாக இருக்கும்போது எப்படி நம்மால் படைப்பாற்றல்மிக்க வேலைகளைச் செய்ய முடிகிறது? ஒன்றின்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்க இதற்கு முன்பு ஒருபோதும் நாம் இவ்வளவு திணறியதில்லை.
குணங்குடி மஸ்தான் சாஹிப் : இந்திய சூஃபிகள் வரிசை
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreநாகூர் ரூமி
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.
முன்னவரும் மூத்தவருமான தக்கலை ஞானி பீரப்பாவைப் போல பாடல்கள் மூலமாக தன் செய்தியைச் சொன்னவர் குணங்குடியார். அவர் ஒரு சித்தர் என்று கருதப்படுவதற்கும் இது முக்கியமான காரணமாக உள்ளது. சாதாரணமாக அவரது பேச்சே பாடலாகத்தான் வந்துள்ளது. தொண்டி என்ற ஊரிலிருந்து அந்தக்கால சென்னையின் காவாந்தோப்பு என்ற பகுதியில் குணங்குடியார் தங்கியதால் அந்தப் பகுதி பின்னாளில் தொண்டியார் பேட்டையாகி பின் ‘தண்டையார் பேட்டை’யாகிவிட்டது!
சத்தியத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்ட அனைவருக்கும் குணங்குடியாரின் வாழ்க்கையில் வழிகாட்டும் செய்திகள் நிறைய உண்டு. அதுவும் நாகூர் ரூமியின் கைவண்ணத்தில் என்றால் கேட்கவா வேண்டும்!
ஆபிரஹாம் லிங்கன்: அடிமைகளின் சூரியன்/ Abraham Lincoln: Adimaigalin Sooriyan
Rs. 940.00or 3 X Rs.313.33 withRead moreபாலு சத்யா
ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும்.
தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.
விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வக்கீல், அமெரிக்க ஜனாதிபதி, உலகத் தலைவர்.
குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.
கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.
தலைக்கு மேலே கத்தி, லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும், மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும், அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாமல் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும்,
லிங்கனின் எளிமையான வாழ்க்கையும், அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும்.
சரித்திரத்தை மாற்றி எழுதிய ஆபிரஹாம் லிங்கனின் அசாதாரணமான வாழ்க்கையை எளிய, இனிய நடையில் விவரிக்கிறார் பாலு சத்யா.
இலங்கை முஸ்லிம்களை புரிந்துகொள்ளல்
Rs. 900.00Original price was: Rs. 900.00.Rs. 800.00Current price is: Rs. 800.00.or 3 X Rs.266.67 withRead moreஅ.வா. முஹ்சீன்
தவறான புரிதலானது இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று முஸ்லிம்களைப் பற்றி, ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற தவறான அபிப்பிராயங்கள், இரண்டு முஸ்லிம்கள் தம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்கள். இந்நூல் இந்த இரண்டையும் பற்றி பேசுகிறது. இலங்கைச் சூழலில், முஸ்லிம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், இலங்கையைத் தாண்டி, உலக அளவில் முஸ்லிம் சமூகங்கள் அக்கறை கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகிறது.
கலந்துரையாடப்படவும் விவாதிக்கப்படவும் கூடிய பல விடயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது. தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் சமூகங்களின் ஐக்கியம் மிகப் பெருமளவில் அவசியமாகியுள்ள இன்றைய நிலையில், இந்நூல் அத்தகைய ஐக்கியம் பற்றி மேலும் அக்கறை கொள்வதைத் தூண்டுகிறது.
எண்ணெய் அரசியல் / Ennai Arasiyal
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreகேர்ரி லீச்
தமிழில்: நா. தர்மராசன்
உலகச் சீர்குலைவு ஒன்று புதிதாகத் தலைதூக்குகிறது. இதில் இயற்கை வளங்களுக்காக நடத்தப்படும் போர்கள் அவசரமாக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த வளங்களைக் கைப்பற்றுவதில் உலகின் சக்திவாய்ந்த அரசுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான இராணுவ பலத்துடன் கூடிய அயல்நாட்டுக் கொள்கைகள் எண்ணெயின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
உலகின் தென்பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்களின் இறையாண்மை, பண்பாட்டு ஒற்றுமை, மனித உரிமைகள், அழிவின் விளிம்பிலிருக்கும் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றைக் காப்பாற்ற இந்தப் போரில் கட்டாயப்படுத்தி இழுக்கப்படுகின்றன.
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஹோல்கர் கெர்ஸ்டன்
தமிழில்: உதயகுமார்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.
இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.
மகிழ்ச்சியான மணவாழ்க்கை (Mahilchiyana Manavazhkai) The Forgotten Secrets of Magical Marriage
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreநாகலட்சுமி சண்முகம்
ஒரு அற்புதமான வாழ்க்கைத் துணையுடன் அற்புதமான திருமணத்தை அனுபவிக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் நேரம் வரும்போது, பெரும்பாலானோர் திருமணத்தை அறியாமலேயே ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும் போது, அவர்கள் ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் மற்றும் என்ன தவறு நடந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்த புத்தகம் மகிழ்ச்சியான திருமணமான தம்பதிகளின் சிறந்த நடைமுறைகளை உங்களுக்குக் கற்பிக்கிறது மற்றும் பெரும்பாலான தம்பதிகள் தடுமாறும் பொதுவான ஆபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்று உங்களுக்குச் சொல்கிறது
தீயின் எடை : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
Rs. 5,290.00or 3 X Rs.1,763.33 withRead moreஜெயமோகன்
குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.
எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.
தங்கப்புத்தகம் ( Thangapuththagam )
Rs. 2,150.00or 3 X Rs.716.67 withRead moreஜெயமோகன்
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது. கனவில் எல்லாமே குறியீடுகள். ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது. இது மெய்யான திபெத் அல்ல. இது நிக்கோலஸ் ரோரிச் தன். ஓவியங்களில் சித்தரித்த திபெத். ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம். அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண். இந்தக்கதைகளில் ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது.
தாய் ( Thaai )
Rs. 3,630.00Original price was: Rs. 3,630.00.Rs. 3,390.00Current price is: Rs. 3,390.00.or 3 X Rs.1,130.00 withRead moreமாக்ஸிம் கார்க்கி
தமிழில்: தொ. மு. சி. ரகுநாதன்
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள். இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள். இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.
நிமித்தம் / Nimiththam
Rs. 2,890.00Original price was: Rs. 2,890.00.Rs. 2,690.00Current price is: Rs. 2,690.00.or 3 X Rs.896.67 withRead moreஎஸ்.ராமகிருஷ்ணன்
நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா?
ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள்.
இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது.
இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.
புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான்.
வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம்.
நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது.
தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன.
மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.
எர்னஸ்டோ சே குவேரா / Ernesto Che Guevrara Tamil
Rs. 3,590.00or 3 X Rs.1,196.67 withRead moreஐ.லாவ்ரெட்ஸ்கி
தமிழில்: சந்திரகாந்தன்
பன்முகத் தன்மை வாய்ந்த இளம் புரட்சியாளனான சேகுவேராவின் வாழ்க்கை, லட்சியம், போராட்டம் குறித்து அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.
ஓடாதே / Odathe
Rs. 660.00or 3 X Rs.220.00 withRead moreசுஜாதா
இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டேயிருக்கிறது.
ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள்.
ஏன் துரத்தினார்கள்?
எதற்காக நிறுத்தினார்கள்?
எதுவும் புரியவில்லை!
ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.
நம்புதலின் மேஜிக்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreகிளாட் ப்ரிஸ்டல்
தமிழில்: மீரா ரவிஷன்கர்
மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் விசையை விடுவி – அதீத சக்தியைக் கொண்ட உன் ஆற்றலை கண்டுபிடி!
நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ!!!
வாழ்வில் தேவையானவற்றைப் பெற மேஜிக் ஃபார்மூலா இருக்கா? இந்தப் புத்தகம் அதிசயம் என்றாலும் மிகையாகாது. இதில் எல்லோரும் பயன்படுத்தி பலன் கண்ட ஆக்க பூர்வமான முறைகள் உள்ளன. உங்கள் வாழ்வின் கரம் சிறப்பாகி, உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடையலாம்.
நீங்கள் உங்கள் உலகின் படைப்பாளி. உங்களின் உள்ளே ஆளுமை விசை உண்டு. அது உங்கள் மனப்பிரபஞ்சத்தில் நீங்கள் வரைந்திருக்கும் படங்களை நிஜ உலகில் உண்மையாக்கும் சக்தி வாய்ந்தது, உங்களிடம் தேவை – இது வேலை செய்யும் என்ற நம்பிக்கை!
உங்கள் வாழ்வினுள் மேஜிக்கைக் கொண்டு வாருங்கள்!
அவசரம் உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
கவனமின்றி அல்லது போதுமான அளவுக்கு அக்கறையின்றி நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன வேலைகளால் நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நம் வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக் நம் சூழலை எப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? ஆளில்லா விவசாயத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தொழிலாளர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை நாம் அறிவோமா? செல்வம் ஒரு பக்கம் சேர்ந்துகொண்டே போகும்போது வறுமை ஏன் முடிவில்லாமல் அதிகரித்துக்கொண்டே போகிறது?
இயந்திரமயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் நம் பிரச்னைகளைத் தீர்த்துவிடுமா? கம்ப்யூட்டர் நம் தலைவிதியை நல்லபடியாகத் திருத்தி எழுதிவிடுமா? தேசம் செழிப்படைய ஜிடிபியில் கவனம் செலுத்தினால் போதுமா?
நம் சிக்கல்கள் தீரவேண்டுமானால் முதலில் நம் சிக்கல்கள் என்னென்ன என்பதை நாம் சரியாக உணரவேண்டும். அப்போதுதான் நமக்கான தீர்வுகள் கிடைக்கும். சோம. வள்ளியப்பனின் இந்நூல் நம் எண்ணங்களையும் வாழ்வையும் சரியான திசையில் செலுத்துவதோடு வளமான ஒரு எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தையும் வகுத்து நம் கரங்களில் அளிக்கிறது.
முதுநாவல் ( Mudhunaaval )
Rs. 2,150.00or 3 X Rs.716.67 withRead moreஜெயமோகன்
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன.
அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.
உறுதி மட்டுமே வேண்டும்
Rs. 920.00or 3 X Rs.306.67 withRead moreசோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு. வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல. உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
அக்னிச் சிறகுகள்: சுயசரிதம்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஏ.பி.ஜே.அப்துல் கலாம், அருண் திவாரி
தமிழில்: கவிஞர் புவியரசு
ஒவ்வொரு சாமானியனும் தனது முழு மன உறுதியாலும் கடின உழைப்பாலும் வெற்றியை அடையும் தனது கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் தனது கதையில் உத்வேகத்தையும் வலிமையையும் காணலாம். ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ என்பது தொலைநோக்கு விஞ்ஞானி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும், அவர் மிகவும் எளிமையான தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். டாக்டர் கலாமின் நுண்ணறிவுகள், தனிப்பட்ட தருணங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த புத்தகம். அது அவருடைய வெற்றிப் பயணத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகிறது.
தீர்க்கதரிசி
Rs. 690.00or 3 X Rs.230.00 withRead moreகலீல் ஜிப்ரான்
கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.
ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.
உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.
வெற்றிவாசலின் திறவுகோல் ( Vettri Vaasalin Thiravukkol) The Keys To Success
Rs. 990.00Original price was: Rs. 990.00.Rs. 890.00Current price is: Rs. 890.00.or 3 X Rs.296.67 withRead moreஜிம் ரோன்
புத்தகங்கள் படிப்பது ஒரு வகையான இன்பம். புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல பழக்கம். நாங்கள் உங்களுக்கு பல்வேறு வகையான புத்தகங்களைக் கொண்டு வருகிறோம். இந்தப் புத்தகத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். எடுத்துச் செல்வது எளிது. இது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு சிறந்த பரிசாக இருக்கலாம்.
சிக்கனம் சேமிப்பு முதலீடு / Sikkanam Semippu Mudhaleedu
Rs. 850.00or 3 X Rs.283.33 withRead moreசோம.வள்ளியப்பன்
சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா?
ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி.
அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும், சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும், கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும்.
ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும்.
செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி?
வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்?
முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது?
சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா?
பங்குச்சந்தையில் பணம் போடலாமா?
தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா?
அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா?
நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது.
எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது.
இவ்வுலகை மாற்றுவது எப்படி? / Ivvulahai Maatruvadhu Eppadi?
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஎரிக் ஹோப்ஸ்பாம்
தமிழில்: சா. சுரேஷ்
அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது.
”முதலாளித்துவம் நீடித்திருக்கிற வரையில் மார்க்சும் நீடித்திருப்பார்” என்கிற தனது மையமான கருத்தை மிக வலிமையாக முன்வைக்கிறார் ஹோப்ஸ்பாம்;
இது சீரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற இளம் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்”
ஸீரோ டிகிரி ( Zero Degree )
Rs. 2,650.00or 3 X Rs.883.33 withRead moreசாரு நிவேதிதா
ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வுப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல். இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல். Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.
அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. – சாரு நிவேதிதா
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் ( Selvantharakkum Sulaba Vinganam ) The Science of Getting Rich
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
அன்னா கரீனினா 2 பாகங்கள் ( Anna Karenina )
Rs. 9,900.00Original price was: Rs. 9,900.00.Rs. 8,900.00Current price is: Rs. 8,900.00.or 3 X Rs.2,966.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: நா. தர்மராஜன்
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.
மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.
இமைக்கணம் : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withRead moreஜெயமோகன்
மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது.
19 வயது சொர்க்கம் ( 19 Vayadhu Sorgam )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreராஜேஷ்குமார்
தன் நண்பனின் வீட்டில் தன் புதுமனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறான் நாயகன், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், சிலநாட்களில் அவனுக்கொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடைகிறது. அவனது புதுமனைவி காணாமல் போய்விட்டால் என்னு ஊருக்கு வந்தவன் அவளைக் காணாமல் பதறிப் போகிறான். எல்லா இடங்களிலும் அவளைத் தேடுகிறான். காவல்துறை உள்ளே நுழைகிறது. அவன் கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு சாதமாக அமைய மறுக்கிறது. அவளுக்கு என்ன நடந்தது? எங்கே சென்றாள்…? அவனுக்கு மறுபடியும் அந்த… 19 வயது சொர்க்கம் கிடைக்குமா? ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் 19 வயது சொர்க்கம்.
வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil
Rs. 820.00or 3 X Rs.273.33 withRead moreஎன்.சொக்கன்
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்.
அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை.
அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு.
இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.
விண்ணளவு சாதனை: உங்களிடம் மறைந்து கிடக்கும் சக்தியை விடுவித்து வெற்றிக்கனியைப் பறிக்கத் தேவையான உபாயங்களும் உத்திகளும்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“இந்த அருமையான புத்தகம் உங்களுடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு திறவுகோல் – இதன் சக்திவாய்ந்த கொள்கைகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில்!” – ஆக் மேன்டினோ, ஆசிரியர் ‘உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்’
நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (Naval Ravikanthin Naatkurippuhal) The Almanack Of Naval Ravikant
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஎரிக் ஜோர்கன்சன்
செல்வந்தராக ஆவது என்பது வெறும் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல; மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போது நம்மோடு பிறந்த விஷேச குணம் அல்ல. இந்த அபிலாஷைகள் நம்மால் எட்டப்பட முடியாதவை அல்ல. செல்வத்தை உருவாக்குவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் கற்றுக் கொள்ளப்படக்கூடிய திறன்களே.
அத்திறன்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் கற்றுக் கொள்வது? நம்முடைய முயற்சிக்கு வழிகாட்டுகின்ற கொள்கைகள் எவையெவை?
நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர், ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர். செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொகுப்புதான் இந்நூல். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் எப்படி அடைவது என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் ஒரு நூல் அல்ல இது. மாறாக, நீங்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கான உங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.
இரண்டாவது தாலி ( Irandavathu Thaali )
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreராஜேஷ்குமார்
சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை.
ஒரு சமயத்தில் தன் உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின் அப்பா தன்னுடனே இருக்கும் அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.
காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும் துரோகம்செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.
குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.
கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும் செய்யும்.
பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் இரண்டாவது தாலி.
கறுப்புப் பணம்: எப்படி உருவாகிறது? தடுக்கமுடியாதா? நம்மால் செய்யமுடிந்த ஏதேனும் உள்ளதா? / Karuppu Panam
Rs. 599.00or 3 X Rs.199.67 withRead moreரமணன்
எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?
ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்னையா?
கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும்போது எதுவும் செய்வ தில்லை.
ஏன் இந்த முரண்?
சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமானகறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகின்றன.அரசாங்கம் தலையிட்டு இதனை மீட்டெடுக்க முடியாதா? நீதிமன்றத்தால் எதுவும் செய்யமுடியாதா?
சில பெரிய வங்கிகள் ஹவாலா முறையில் பணம் ஈட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை என்னாயிற்று? இதுவரை யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா?
வெளிநாடுகளில் இந்தப் பிரச்னை இல்லையா? அங்கெல்லாம் எப்படி கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்? கறுப்புப் பணம் என்பது தீராத ஒரு வியாதி. நம் தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தை அது சிறிது சிறிதாக அரித்துத் தின்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நோய்க் கிருமியின் தோற்றம், பரவல், பலம், அபாயப் பண்புகள் என்று அனைத்தையும் இந்தப் புத்தகம் படிப் படியாக அறிமுகப்படுத்துகின்றது. தேசிய வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தின் துணைகொண்டு இதனை ரமணன் எழுதியிருக்கிறார்
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,790.00Original price was: Rs. 3,790.00.Rs. 3,490.00Current price is: Rs. 3,490.00.or 3 X Rs.1,163.33 withRead moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.