Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தமிழ் Books
Showing 481–540 of 620 results
-
ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம் ( Fidel Castro: Simma Soppanam )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreமருதன்
க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்ட வம்சத்தில் இருந்து வந்தவரல்லர் அவர். மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர். ஆனால் தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர்.
சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. வீரமும், விடுதலை வேட்கையும் நெïசுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இது.
-
பணம் தரும் மந்திரம் / Panam Tharum Manthiram
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎஸ். கே. முருகன்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
-
பதினோரு நிமிடங்கள் ( Pathinoru Nimidangal )
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withRead moreபாவ்லோ கொய்லோ
உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்.
-
தென்னிந்தியக் கிராம தெய்வங்கள்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreஹென்றி ஒயிட்ஹெட்
எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்ட பிறகும் இன்றும் முக்கியத்துவம் இழக்காமல், பல புதிய வெளிச்சங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு வண்ணமயமான ஆய்வு நூல் இது.
சமயப் பரப்புரைக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த கிறிஸ்தவ குருமாரான நூலாசிரியர் ஹென்றி ஒயிட்ஹெட் சுமார் 40 ஆண்டுகாலம் தென்னிந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறார். அப்போது வெவ்வேறு கிராமங்களில் மக்களிடையே நிலவிய பலவிதமான வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. போகிற போக்கில் கண்டதையும் ஒரு சில தகவலாளிகள் சொன்னதைக் காதில் கேட்டு வாங்கியும் நூல்கள் எழுதிக்குவித்த மற்ற ஐரோப்பியர்கள் போலல்லாமல் ஒயிட்ஹெட் விரிவாகவும் ஆழமாகவும் கள ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கிய நூல் இது.
தெய்வங்களைப் பற்றிய நூல் மட்டுமல்ல இது. பலியிடும் முறைகள், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள் என்று தமிழக மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்யும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் விரிகிறது. திராவிடவியலில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.
-
கொடூரக் கொலை வழக்குகள்: பதைபதைக்கச் செய்யும் நிஜக் கதைகள் ( Kodoorak Kozhai Vazhakkugal )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreவைதேகி பாலாஜி
ஆட்டோ சங்கர், பூலான் தேவி, அஜ்மல் கசாப், வீரப்பன், நொய்டா படுகொலை போன்ற ஒட்டுமொத்த இந்தியாவையும் பதைபதைக்க வைத்த கொடூரமான கொலை வழக்குகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
நினைத்துப்பார்க்கவே அஞ்சும் கொலைபாதகக் குற்றங்களை இவர்களில் சிலர் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும் சிலர் இன்னதென்றே கண்டுபிடிக்க முடியாத காரணங்களுக்காகவும் கொன்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வழக்கும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கைமுறை, பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? கிரிமினல்களைத் தண்டிப்பதன்மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது?
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகப் பரந்த அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அன்றைய பத்திரிகைகளில் சுடச்சுட அலசப்பட்டவை. பொதுவெளியில் அச்சத்துடன் விவாதிக்கப்பட்டவை. நூலாசிரியர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய பரபரப்பையும் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
-
சேமிப்பும் முதலீடும் – உங்களை கோட்டீஸ்வரராக்கும் வழிகாட்டி ( Semippum Muthaleedum )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreசிவகாசி மணிகண்டன்
ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். அதைப் பற்றி மட்டுமே பத்து அத்தியாயங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றிருக்கிறது.
அனைத்து நிதித் தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படிப் பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்த நூல். நாணயம் விகடன் வார இதழில் சேமிப்பும் முதலீடும் எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப எந்தத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்பதையும், முதலீட்டைப் பாதுகாக்கும் அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியும், முதலீட்டை சரியாகத் தேர்வு எப்படி என்பதையும் உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சேமிப்பையும் முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் நிறைவான, நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் என்பதை எடுத்துக்கூறுகிறது இந்த நூல்.
-
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்! ( Get Smart TAMIL )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
பெரும்பணம் ஈட்டுகின்ற, வெற்றிகரமாக விளங்குகிற மக்களைப் போல சிந்திப்பதும் செயல்படுவதும் எப்படி
-
எண்ணங்களை மேம்படுத்துங்கள்!
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreடாக்டர் எம். ஆர். காப்மேயர்
தமிழில்: பி. சி. கணேசன்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை. ஏற்கனவே மாபெரும் சிந்தனையாளர்கள் இவற்றை அறிந்திருந்தார்கள். ஆகவேதான் அவர்கள் அத்தனை பெரிய சிந்தனையாளர்களாக- வரலாற்றில் இடம் பெற முடிந்தது. இந்நூலில் கூறப்படும் வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள். இவை உங்கள் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக் கூடியவை. மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்றால் இதோ 80 வழிகள் உங்களுக்காக திறந்து கிடக்கின்றன.
-
உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withRead moreவில்லி ஜாலி
தமிழில்: ஆலிரத் அசோக்குமார்
“என்னுடைய வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டு நான் மனதளவில் மிகவும் சோர்வடைந்து இருந்த போது, Flash Books‘இன் சிபாரிசில், உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் புத்தகத்தை வாங்கி வாசித்தேன். 300 பக்கங்களுக்கு மேல் ஒரு நிமிடத்தில் வாசிக்க முடியுமானவாரு பல பாடங்கள் இருப்பதால் இலகுவாக வாசிக்கக்கூடியதாக இருந்தது. நான் மீண்டு வருவதற்கு தேவையான பாடங்கள் பல இருந்ததால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு ஆனால் புதிய மனிதனாக திரும்ப முடிந்தது. நண்றி”
– நிரன்ஞன் – வவுனியா, இலங்கை (Niranjan – Vavuniya, Sri Lanka)
“இந்த நூல் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!” — லெஸ் பிரவுன்
இந்த புத்தகத்தில் வில்லி ஜாலி உங்கள் எதிர்காலத்தை உருவாக்க உதவும் கருவிகளையும் வெற்றியின் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோல்களையும் வழங்குகிறார். நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதற்குப் பதிலாக, அந்தக் கனவை நனவாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த வழிகாட்டியில் 151 ஒரு நிமிட செய்திகள் உள்ளன. ஒவ்வொரு செய்தியும் ஒரு நிமிடம் மட்டுமே இருப்பதற்கான காரணம், உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரே ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று ஆசிரியர் நம்புகிறார். அறுபது வினாடிகளில், உங்கள் கனவுக்குப் பின் செல்ல நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்கள் வாழ்க்கையை மாற்ற இது ஒரு நிமிடம் மட்டுமே எடுக்கும், அனைவருக்கும் ஒரு நாளைக்கு ஒரே மாதிரியான 1440 நிமிடங்கள் இருப்பதாக ஜாலி கூறுகிறார்.
எனவே, இந்த விலைமதிப்பற்ற நிமிடங்களை அதிகம் பயன்படுத்துவதே முக்கியமான பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலும் பலவற்றைச் செய்வது எப்படி என்று இந்தப் புத்தகம் கற்றுக்கொடுக்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் அதிக அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பை கொண்டு வர உதவுகிறது. வெற்றிபெற, சாத்தியமற்றதைக் கனவு காண்பது அவசியம் என்று ஆசிரியர் கூறுகிறார். உங்கள் கனவு பெரியதாக இருக்கும் போது, நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சிறியதாக தோன்றும். தேர்வுகள் செய்யும்போது, மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது உங்களுடையது என்று ஜோலி கூறுகிறார். வெற்றி என்பது அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக அது ஒரு தேர்வு என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
-
தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withஎஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
‘இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது’ என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின்.
இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் சாய்வுகளின்றி, தகுந்த ஆதாரங்களோடும் ஏற்கத்தக்க வாதங்களோடும் இஸ்லாமியப் படையெடுப்புகளின் வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.
சோழப் பேரரசின் வீழ்ச்சியில் தொடங்கி தக்காணத்தில் நடந்த முகமதியர்களின் படையெடுப்புகள், கில்ஜிக்களின் ஆட்சியில் நடைபெற்ற அழிவுகள், துக்ளக்கின் படையெடுப்புகள் என்று விரிந்து செல்கிறது இந்நூல். இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நூல்களுள் ஒன்று என்று இதனைச் சொல்லமுடியும்.
ஷேர் மார்க்கெட் (Share Market)
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசொக்கலிங்கம் பழனியப்பன்
பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர்.
அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் – விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி… போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
தோழர்கள்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreகி. ரமேஷ்
கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர்? தங்கள் வாழ்க்கைமுறையையும் நெறியையும் அவர்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கின்றனர்? உழைக்கும் மக்களின் வாழ்வில் அவர்கள் செலுத்திய, செலுத்திவரும் தாக்கம் எத்தகையது? இந்தக் கேள்விகள் முன்பைவிடவும் இன்று தீவிரமும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதாகும். கோட்பாடுகளின்மூலம் விளக்குவது ஒரு வகை என்றால் அக்கோட்பாட்டை ஏற்று நடைமுறையில் பின்பற்றிவரும் தோழர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கம்யூனிசத்தை விளக்குவது இன்னொரு வகை. இந்நூல் இதைத்தான் செய்கிறது.
சிங்காரவேலர், ஜீவா, ஈ.எம்.எஸ்., பி. சீனிவாச ராவ், அமீர் ஹைதர் கான், சங்கரய்யா, சுர்ஜித், பி. ராமமூர்த்தி போன்ற தோழர்களின் போராட்ட வாழ்வையும் சமூக, அரசியல் பங்களிப்புகளையும் எளிமையாகவும் செறிவாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் கி. ரமேஷ். வாழ்க்கைக் குறிப்புகளோடு அவரவர் காலத்து அரசியல், சமூகப் பின்னணியையும் இணைத்து வழங்குவது இந்நூலின் சிறப்பு.
பங்குச்சந்தை அனாலிசிஸ் (அள்ள அள்ளப் பணம் – 2) Panguchanthai Analysis
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது ‘அள்ள அள்ளப் பணம் – 1’. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள். நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது.
- எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்?
- எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!
வெற்றிச் சூத்திரங்கள் பன்னிரண்டு ( Vettri Soothirangal Pannirendu )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreபிரையன் டிரேசி & ஜே. சுரேந்திரன்
பழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘ சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார்.
சர்வைவா ( Surviva )
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஅதிஷா
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொழில்நுட்பமும் பூமியின் முகத்தையே மாற்றின. அயல் கிரக ஆராய்ச்சிகள், நானோ, ரோபோ என மனிதனின் தொழில்நுட்பத் தேடல்கள் பல வகைகளில் பல தளங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உலக நாடுகள் எல்லாம் பல துறைகளில் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ‘சர்வைவா’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் டெக்னோ தொடர் கட்டுரைகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றின் தொகுப்பு நூல் இது! ‘தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்’ என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றாலும் அந்த மாற்றங்களால் மனித குலம் செழிக்கவேண்டும், பூமியில் அமைதி பூக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? ( Koondup Paravai Yen Paadugirathu )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreமாயா ஏஞ்சலோ
தமிழில்: அவை நாயகன்
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ. கறுப்பெழுத்தின் முன்னோடி. மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.
அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர். ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.
வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி / Vettri Vaaypukalukkana Kadaisi Vazhikaatti ( The Last Prospecting Guide You’ll Ever Need )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreபாப் பர்க்
உங்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதா?
நம்மில் சிலருக்கே! பாப் பர்க் பயனுள்ள ஆய்வுகளின் ரகசியங்களைக் கற்றுக்கொண்டார், இப்போது அவர் தனது நிரூபிக்கப்பட்ட, நேரத்தைச் சோதித்த நுட்பங்களை உங்களுக்கு வழங்குகிறார்! இந்த சக்திவாய்ந்த வழிகாட்டியில், திறமையான மற்றும் வலியின்றி தகுதிவாய்ந்த வேட்பாளர்களை எவ்வாறு சேகரிப்பது என்பதை ஆரம்பநிலை மற்றும் சாதகமாக அவர் காட்டுகிறார். உங்கள் பக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் கடைசி வருங்கால வழிகாட்டி மூலம், நீங்கள் விரும்பும் அனைத்து வணிக வாய்ப்புகளையும் எவ்வாறு வளர்ப்பது என்பதை நீங்கள் சரியாகக் கற்றுக் கொள்வீர்கள்.
நீங்கள் மென்மையான வன்முறையாளரா?
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreகார்குழலி
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை.
எனில், எந்தச் சொல் தவறானது என்பதை எப்படி உணர்வது? மென்மையாகவும்கூட ஒருவரைத் துன்புறத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?
கார்குழலி இந்நூலில் தன்னுடைய அனுபவப் பகிர்வுகளின்மூலம் முன்னெடுக்கும் உரையாடல் முக்கியமானது. எங்கே தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கிறார். நம் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்ட நூல்.
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் ( Athikamaha Sinthippathai Niruthungal ) Stop Overthinking Tamil
Rs. 1,850.00or 3 X Rs.616.67 withRead moreநிக் டிரென்டன்
தமிழில்: PSV குமாரசாமி
நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார்.
உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்:
- எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி
- உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி
- ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
- மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி
தலைமை செயலகம்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசுஜாதா
‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம். சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
மாற்றம் எனும் மந்திரம்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreசைமன் பெய்லி
உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நீங்கள் தயாரா? நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ சந்தையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறீர்களா? அல்லது நாட்டில் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழல்களை எப்படிச் சமாளிப்பது என்ற கவலை உங்களை அரித்துக் கொண்டிருக்கிறதா? அல்லது புதிய விடிவெள்ளிக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ‘ஐயோ! மீண்டும் திங்கட்கிழமை வந்துவிட்டது!’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது எல்லாமே சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கழுத்துவரை இழுத்து மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள். இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. வருங்காலம் குறித்த பயமும். மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழ்நிலைகள் குறித்த அச்சமும் எல்லா இடங்களிலும் படமெடுத்து ஆடிக் கொண்டிருப்பதால், நன்னம்பிக்கை மனோபாவம் தேய்பிறையாக ஆகிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்னம்பிக்கை மனோபாவத்திற்கு மாறவும், நமக்காக ஒரு சிறப்பான வருங்காலத்தைப் படைக்கவும் துடித்துக் கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் போன்றவர்களுக்காகத்தான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, நம்முள் ஒளிந்திருக்கும் அளவற்ற ஆற்றலை அறுவடை செய்ய இப்புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும். இன்றைய சவாலான சூழலில், தங்களை மாற்றிக் கொண்டு, மாற்றத்திற்கான கிரியாஊக்கியாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்ற ஊழியர்கள், மேலாளர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கானதுதான் இந்நூல். உங்களுடைய வாழ்க்கையில் நீண்டகால நோக்கில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் ஊக்குவிப்பு, உள்நோக்கு, தெளிவான வழிகாட்டுதல் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்தில் காண்பீர்கள்.
பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1) ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில் உறைய வைத்த வழக்குகள், விசாரணை விவரங்கள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஎஸ். பி. சொக்கலிங்கம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பாவ்லா கொலை வழக்கின் பின்னணி என்ன? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர்? ஒருகாலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னராக மின்னிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறியது எப்படி? ஆளவந்தார் கொலை வழக்கை இன்றளவும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது ஏன்? பல புதிய சிக்கல்களைக் கொண்டிருந்த நானாவதி கொலை வழக்கு எவ்வாறு தீர்க்கப்பட்டது? சிங்கம்பட்டி கொலை வழக்கு, வெம்பன் வழக்கு, மரியாகுட்டி கொலை வழக்கு என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட, திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட சில பிரபலமான கொலை வழக்குகளின் முழுமையான பின்னணி இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
கொலை, கொலைக்கான காரணம், கொலையாளியின் பின்னணி, துப்புத் துலக்கப்பட்ட விதம், விசாரிக்கப்பட்ட முறை, குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட விதம் என்று படிப்படியாக விவரித்து இறுதியாக எத்தகைய தீர்ப்புகளை இந்த வழக்குகள் பெற்றன என்பதை விறுவிறுப்பான முறையில் விவரித்துள்ளார் வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம். கற்பனை கிரைம் கதைகள் எல்லாம் பக்கத்தில்கூட வரமுடியாது.
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3) ( Pangusanthai: Futures and Options )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
தமிழகத்து பிசினஸ்மேன்கள் ( Thamizhakaththu Businessmankal)
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஏ.ஆர். குமார்
வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம்.
பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது.
போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது!
இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்’ எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது.
உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய… உள்ளே வாருங்கள்!
வேர்கள் ( Vergel ) The Roots
Rs. 9,900.00Original price was: Rs. 9,900.00.Rs. 8,990.00Current price is: Rs. 8,990.00.or 3 X Rs.2,996.67 withRead moreஅலெக்ஸ் ஹேலி
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.
வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.
அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்,
இன்றே செய்வீர்! அதை நன்றே செய்வீர்! ( Indre Seyveer, Athai Nandre Seyveer ) Do it Today!
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreடாரியஸ் ஃபோரூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காலம் தாழ்த்துவதிலிருந்து மீள்வதற்கும், உங்களுடைய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், அதிகமானவற்றைச் சாதிப்பதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய, என்னுடைய கட்டுரைகளில் மிகச் சிறந்த 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நான் இதில் கொடுத்துள்ளேன்.
ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கு அவை உங்களுக்கு வழி காட்டும். காலம் தாழ்த்தினால் உங்களால் ஆக்கபூர்வமானவராக இருக்க முடியாது. நீங்கள் ஆக்கபூர்வமானவராக இல்லாவிட்டால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான், காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து நான் போராடி மீண்ட விதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் நான் இப்புத்தகத்தைத் துவக்கியிருக்கிறேன். இழப்பு, வேதனை, அர்த்தம் ஆகியவற்றின் ஊடான ஒரு தனிப்பட்டப் பயணம் இது. அதன் பிறகு, அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு பாதையில் நான் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். நம்முடைய காலம் முடிவதற்குள் நம்முடைய உச்சபட்ச ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreதரம்பால், டி. எம். முகுந்தன்
பி. ஆர். மகாதேவன்பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக்கும் 200-300 ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் அரசினால் சீர்குலைக்கப்பட்டவற்றைச் சுதந்தரம் பெற்றதும் தெளிவான சிந்தனையும் திடமான முயற்சிகளும் இருந்திருந்தால் மீட்டெடுத்திருக்கலாம். பசுவைப் பாதுகாத்து வளர்ச்சியைப் பரவச் செய்திருக்கலாம். இடையிலான முரண்பாடுகளை இந்தியர்கள் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துகொள்ளும்போதுதான் இந்த மீட்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமாகும்.
FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎன். சொக்கன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம். என். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.
ரேபிடெக்ஸ் ஆங்கிலம் பேசும் பாடநெறி (RAPIDEX English Speaking Course)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஆர்.கே குப்தா / R.K Gupta
“Rapidex English For Tamil Speakers என்பது சரளமாக ஆங்கிலம் பேச விரும்பும் தமிழ் பேசும் நபர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொற்கள், இலக்கணம் ஆகியவற்றில் குழப்பம் காரணமாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை இல்லாத தமிழர்களுக்கு இது ஏற்றது.
இந்தப் புத்தகம் தமிழ் பேசும் நபர்கள் தமிழ் மூலம் ஆங்கிலத்தை திறமையாக கற்கவும், சிக்கலான வாக்கியங்கள் மற்றும் உச்சரிப்புகளை எளிதாக நினைவில் வைக்கும் உத்திகள் மூலம் எளிமையாக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மற்ற மொழி புத்தகங்களிலிருந்து தனித்து நிற்கும் தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது.”
நோர்வீஜியன் வுட் ( Norwegian Wood Tamil )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreஹாருகி முரகாமி
தமிழில்: க.சுப்பிரமணியன்இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.
செல்வாக்குமிக்கத் தலைமைத்துவத்திற்கான வெற்றி ரகசியங்கள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஷான் டாயில்
தமிழில்: குமாரசாமி
நீங்கள் ஒரு தலைவரா? நீங்கள் உங்கள் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறீர்களா? வருங்காலத்தில் செல்வாக்குமிக்க ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா? பிறர் பாசத்துடனும் நேசத்துடனும் பிரமிப்புடனும் பின்தொடர்ந்து வர விரும்பும் ஒரு தலைவராக உருவெடுக்கத் தேவையான அபாரமான உத்திகள், அருமையான யோசனைகள் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். ஒரு தலைவருக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புநலன்கள் எவை என்பதையும், அவற்றை எப்படி முறைப்படி நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பதையும் இந்நூலில் ஷான் டாயில் சுவாரசியமான முறையில் எடுத்துரைக்கிறார்.
பிரியாணியும் புளியோதரையும்: சமகால அரசியல் விமர்சனங்கள்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreஅரவிந்தன் நீலகண்டன்
“மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு.
உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது. சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையும் முரண்களையும் அரவிந்தனின் இந்நூல் ஆராய்கிறது.
எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்த கட்சிக் கொள்கைக்கும் ஒப்புக்கொடுக்காமல் துணிவோடும் சிந்தனைத் தெளிவோடும் மிகச் செறிவான உரையாடலை அரவிந்தன் இதில் நிகழ்த்துகிறார். வெறும் பரபரப்புச் செய்திகளாக நாம் கடந்து சென்றுவிட்ட பல நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் உளவியலையும் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் உதவும்.”
[RARE] நெஞ்சை ஈர்க்கும் வானவியல் ( Nenjai Eerkum Vaanaviyal ) This Fascinating Astronomy
Rs. 2,790.00Original price was: Rs. 2,790.00.Rs. 1,690.00Current price is: Rs. 1,690.00.or 3 X Rs.563.33 withRead moreவி. கொமரோவ்
தமிழில்: ஏ. நடராஜன்
இந்நூல் இயற்பியல் மற்றும் வானியல் தத்துவங்களை அலசி ஆராய்கிறது. பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வலர்கள் ஊன்றிப் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம் உண்டு. வானியலில் ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படிக்கும் போது நாமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். படிக்கும் ஒவ்வொருவரும் வானியலின் பிரமாண்டத்தை உணர முடியும். வானியல் மற்றும் இயற்பியலாளர்களின் கொள்கைகள் எவ்வாறு பரிணாமம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கேற்ற அற்புதமான நூல்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசோம. வள்ளியப்பன்
அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.
உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.
தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.
‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.
விகடன் 1000 ( Vikatan 1000 )
Rs. 6,590.00Original price was: Rs. 6,590.00.Rs. 5,990.00Current price is: Rs. 5,990.00.or 3 X Rs.1,996.67 withRead moreவிகடன் பிரசுரம்
வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று, பல பதிப்புகள் கண்டது விகடன். இதோ, கண் மூடிக் கண் திறப்பதற்குள் மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. தாய்ப் பத்திரிகையான ஆனந்த விகடன் தவிர, ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், டாக்டர் விகடன், விகடன் தடம் என, பல்வேறு ரசனைகள் கொண்ட வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேக பத்திரிகைகளை வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம்.
ஆனந்த விகடன் உள்ளிட்ட விகடன் குழுமப் பத்திரிகைகள் அனைத்திலிருந்தும் அற்புதமான கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட மெகா புத்தகமாக கன கம்பீரமாக மலர்ந்துவிட்டது.
விகடன் இயர் புக் 2023 / Vikatan Year Book 2023
Rs. 2,290.00Original price was: Rs. 2,290.00.Rs. 1,990.00Current price is: Rs. 1,990.00.or 3 X Rs.663.33 withRead moreவிகடன்
ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 11-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2023 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ பொது அறிவுத் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்தாகும்.
விகடன் மேடை / Vikatan Medai
Rs. 2,890.00Original price was: Rs. 2,890.00.Rs. 2,590.00Current price is: Rs. 2,590.00.or 3 X Rs.863.33 withRead moreவிகடன்
தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை… என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு மேடையேற்றிய பகுதிதான் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘விகடன் மேடை’. வாசகர்களின் ‘நச்’ கேள்விகளுக்கு, பிரபலங்களின் ‘பளிச்’ பதில்கள் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியது.
‘விகடன் மேடை’யில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அதுதான் உங்கள் கைகளில் தற்போது தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஆளுமைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகள், சந்தித்த வெற்றி&தோல்விகள், தனிப்பட்ட விருப்பு& வெறுப்புகள்…. போன்றவற்றைக் காண அவர்களின் பிரத்யேக பக்கங்களைப் புரட்டத் தயாராகுங்கள்!
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Original price was: Rs. 2,790.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும்
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreகிட்டி ஃபெர்கூசன்
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
ஸ்டீபன் ஹாக்கிங்கை நோய் மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் (21am Nutraandukaana business)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாய்ப்புகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
இதோ உதவி!: நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகள்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreடாக்டர் எம். ஆர். காப்மேயர்
தமிழில்: தர்மகீர்த்தி மற்றும் கங்காசுதன்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும் – உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 93 எளிய வழிகள் – அத்தனையும் நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள் அடங்கியுள்ளன.
நீங்கள் என்ன விரும்பினாலும் சரி – அது உங்களுக்குச் சித்திக்கும்.
நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும்.
வாழ்வில் லட்சியங்களை எளிதில் நீங்கள் எய்த முடியும்.
இப்போதே இந்நூலை வாங்கிப்படிக்கத் தொடங்குங்கள்.
வெற்றி உங்கள் கதவைத் தட்டுகிறது.
இதோ வழிகள் 93.
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 2
Rs. 3,490.00Original price was: Rs. 3,490.00.Rs. 2,690.00Current price is: Rs. 2,690.00.or 3 X Rs.896.67 withRead moreகொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
‘இந்தியாவின் வரலாறு’ (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை) எனும் நூலில் புதிய கால மற்றும் அண்மைக் காலத்தில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது, இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
இப்பிரச்சினை சம்பந்தமான சோவியத் மற்றும் அயல்நாட்டு நவீன ஆராய்ச்சிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
நெல்சன் மண்டேலா ( Nelson Mandela )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreதா.பாண்டியன்
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.
திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; படித்துப் பயன்பெறும்.
செங்கிஸ்கான் ( Genghis Khan Tamil )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreமிட்ச் ஆல்பம்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
–எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
–பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்“அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
–யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்“தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
–ராபர்ட் பிளை, நூலாசிரியர்“மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
— ஏமி டேன் நூலாசிரியர்“நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
–டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்“சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
–ஜெஃப் டேனியல்ஸ்உணவின் வரலாறு ( Unavin Varalaaru )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreபா.ராகவன்
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்? பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா?
உணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது. நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.
[RARE] தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்
Rs. 1,790.00Original price was: Rs. 1,790.00.Rs. 1,090.00Current price is: Rs. 1,090.00.or 3 X Rs.363.33 withRead moreலெனின்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு:
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி, சோசாலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் பிரச்சனை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேடலோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
பெரியார் ( Periyar )
Rs. 940.00or 3 X Rs.313.33 withRead moreஆர். முத்துக்குமார்
- இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை.
- அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும்.
- பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.
- இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது.
- தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.
மகாராஜாவின் பயணங்கள்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreஜகத்ஜித் சிங்
அக்களூர் ரவிசீனா, ஜப்பான், ஜாவா என்று உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்த ஒரு மகாராஜாவின் இதயத்தை அள்ளும் பயண அனுபவங்கள்.
ஒரு மகாராஜாவின் கண்களைக் கொண்டு உலகைப் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பயண நூல்களுக்கு எப்போதும் சிறப்பிடம் கொடுக்கப்படுவது வழக்கம். கிரேக்கப் பயணிகளும் சீனப் பயணிகளும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால் பண்டைய இந்தியாவை நம்மால் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா?
இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கிருந்து பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் தங்கள் அனுபவங்களை அவ்வாறு எழுதி வைத்திருக் கிறார்களா என்று பார்த்தால் பெருமளவு வருத்தமே மிஞ்சுகிறது. அந்த வருத்தத்தை ஈடுசெய்யும் வகையில் ஒரு மகாராஜா மிகவும் சுவையான, மிகுந்த பயனளிக்கும் பயணக் குறிப்புகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். பிரிட்டிஷ் காலத்தில் கபுர்தலா எனும் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜாவாக இருந்த ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர்தான் அவர்.
மூன்று முறை உலகை வலம் வந்த இந்த மகாராஜா சீனா, ஜப்பான், ஜாவா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து எழுதிய பயண நூல் முதல் முறையாகத் தமிழாக்கம் பெறுகிறது. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் அட்டகாசமான நடையில் எழுதியிருக்கிறார் ஜகத்ஜித் சிங். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்நாடுகள் எப்படி இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு. அக்களூர் இரவியின் அழகிய மொழியாக்கத்தில் ஒரு வண்ணமயமான உலகம் நம்முன் விரிகிறது.
அர்த்தமுள்ள இந்துமதம் ( Arthamulla Indumatham )
Rs. 4,390.00or 3 X Rs.1,463.33 withRead moreகண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.
[RARE] மகிழ்வூட்டும் மின்னணுவியல் (Entertaining Electronics)
Rs. 2,990.00Original price was: Rs. 2,990.00.Rs. 2,190.00Current price is: Rs. 2,190.00.or 3 X Rs.730.00 withRead moreஇ . செடோவ்
தமிழ் எஸ் . சுந்தர சீனிவாசன்
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
மாஸ்டர் (திரைக்கதை) ( Master Thiraikathai )
Rs. 2,200.00or 3 X Rs.733.33 withமறக்கப்பட்ட வரலாறு
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஜெ. ராம்கி
“மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும்.
பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் போன்றோரைக் கடைசியாக எப்போது நாம் கடந்து வந்தோம்?
இவர்கள் உருவாக்கிய புயல் எந்த அளவுக்கு இன்று நம் நினைவில் இருக்கிறது?
வரலாற்றின் இண்டு இடுக்குகளில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு காலத்தில் பெரும் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மீட்டெடுத்து வந்து அளிக்கிறார் ஜெ. ராம்கி. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு துப்பறியும் கதைபோல் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.”
விளம்பர மாயாஜாலம் ( Vilambara Maayajaalam )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான்.
விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை.
இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள். வீதியில் இறங்கினால், விளம்பரத் தட்டிகள். விட்டால் நம் முதுகிலேயே விளம்பர போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடு-வார்கள். இவ்வளவு லட்சம் விளம்பரங்களுக்கு இடையே, மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் மனத்தில் பதியுமாறு விளம்பரம் செய்வது எப்படி?
விளம்பரம் என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத் திட்டத்தை எப்படி முடிவுசெய்வது?
வெற்றிகரமான விளம்பரங்களை எப்படி உருவாக்குவது?
விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகப்படுத்துவது எப்படி?
விளம்பரங்களில் பெண்கள் அதிகம் தோன்றுவது ஏன்?
வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
‘மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம்.
மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே? உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது! சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் – ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம்.
மிரட்டும் மர்மங்கள்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreநன்மாறன் திருநாவுக்கரசு
அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையில் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்?
கண் இல்லாத மனிதன், பேய் வீடு, ரத்தக்காட்டேரி, மரணக் கிணறு, சிவப்புப் பிசாசு, இறந்த பின்பும் துடிக்கும் இதயம் என்று தொடங்கி உலகம் முழுக்க நடைபெற்ற அல்லது நடைபெற்றதாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன.
அஞ்சிக்கொண்டும் அலறிக்கொண்டும் வாசிக்கவேண்டிய நூல். இருள் கவிந்திருக்கும்போது படிக்காமல் இருப்பது நலன் பயக்கும்.
கூட்டு விளைவு: உங்கள் வருமானத்தையும் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வெற்றியையும் முடுக்கிவிடுங்கள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreடேரன் ஹார்டி
தமிழில்: PSV குமாரசாமி
“நீங்கள் நினைத்துள்ளதைக் காட்டிலும் மேலான வெற்றியைச் சாதிப்பதற்குத் தேவையான யோசனைகளின் தங்கச் சுரங்கமாக இந்தூல் விளங்குகிறது”
– பிரையன் டிரேசி, ‘விண்ணளவு சாதனை’ நூலின் ஆசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்50 உத்வேகம் தரும் பேச்சுகள் (50 Inspirational Speeches)
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreவரலாற்றின் முக்கிய தருணங்கள் பல புகழ்பெற்ற பேச்சாளர்களின் வார்த்தைகளால் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களின் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் உலகின் சில முக்கிய நிகழ்வுகளை பாதித்தன – போர்கள், அரசியல் எழுச்சிகள், சமாதான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்பில் திருத்தங்கள் மற்றும் நாடுகளுக்கு சுதந்திரம் கூட.
இத்தகைய சொற்பொழிவாளர்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர். 50 உத்வேகம் தரும் உரைகளில், ஒவ்வொரு பேச்சும் ஒரு சிறிய அறிமுகத்துடன் உள்ளது, இது பேச்சைச் சுற்றி நடந்த நிகழ்வுகள், அது உரையாற்றிய நபர்கள் மற்றும் பேச்சு ஏற்படுத்திய விளைவுகள் பற்றிய கண்ணோட்டத்தை அளிக்கிறது. ராணி எலிசபெத் I இன் பேச்சு முதல் ஸ்பானிய அர்மடாவை எதிர்கொள்ளவிருந்த அவரது துருப்புக்களைத் தூண்டுவது, பராக் ஒபாமாவின் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை உரை வரை, நீங்கள் படிக்கவிருக்கும் உரைகள், உத்வேகத்தை அளிப்பது போல் அறிவூட்டுவதாகவும், நுண்ணறிவு தருவதாகவும் இருக்கும்.
இமோஷனல் இன்டெலிஜண்ஸ் : இட்லியாக இருங்கள் Emotional-Intelligence
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreசோம வள்ளியப்பன்
‘நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்
அது ஏன் இதுவரை அமையவில்லை?
நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?
இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள்.
ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?
இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.
1984 ஜார்ஜ் ஆர்வெல்
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: மஹாரதி
நவீன இலக்கியத்தின் மிக உறுதியான படைப்புகளில் ஒன்று.
உலக யுத்தத்திற்குப்பின்பு, பூமியைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டன மூன்று கண்டத்து வல்லரசுகள். அவற்றில் ஒன்றான ஒஷானியாவைக் களமாகக் கொண்டது இந்தப் புதினம். அன்றைய காலகட்டத்தின் அரசியல் கட்டுமானங்களைப் பற்றிய ஆர்வெல்லின் அற்புதமான, நேர்த்தியான விமர்சனம், சீரழிந்த எதிர்கால வலைகளில் சிக்கிக்கொண்ட வின்ஸ்டன் ஸ்மித் ஊடாகவும், அரசுப்பணியின் போது தான் சந்தித்த ஜூலியாவுடன் கொண்ட அவனது காதல் விவகாரத்தின் ஊடாகவும் திறனோடு பயணிக்கிறது. ஆனந்தமான வாசிப்பைத் தரும் 1984.
உலகத்தின் சமூக, அரசியல் கட்டுமானங்கள் மீது புத்திசாலித்தனமான, மிகமுக்கியமாக, அமரத்துவம் பெற்ற ஓர் அங்கதத் தாக்குதலையும் நிகழ்த்தும் புதினமாக மிளிர்கிறது.