Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தமிழ் Books
Showing 61–120 of 620 results
-
மனப்போக்குதான் எல்லாமே (Manapokkuthaan Ellame)
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartஜெஃப் கெல்லர்
தமிழில்: PSV குமாரசாமி
உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும், அந்த ஆற்றலை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதையும் சக்தி வாய்ந்த மூன்று வழிகளின் வாயிலாக உங்களுக்குக் காட்டுவார்.
சிந்தனை! மனத்திலிருந்துதான் வெற்றி தொடங்குகிறது. மனப்போக்கின் சக்தியால் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்க முடியும்.பேச்சு! உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். நீங்கள் பேசுகின்ற விதத்தால் உங்களுடைய இலக்குகளை நோக்கி உங்களை உந்தித் தள்ள முடியும்.
செயல்பாடு! ஓய்ந்து உட்காராதீர்கள்! உங்களுடைய கனவுகளை எதார்த்தமாக மாற்றக்கூடிய திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
விரைவில், நீங்கள் புத்துணர்ச்சியூட்டப் பெறுவீர்கள், புதிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்பீர்கள், பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு முறியடிப்பீர்கள், உங்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையிலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்கள் உறவுகள் மேம்படும். உங்களுக்குத் தேவையானதெல்லாம், உங்களுடைய மனப்போக்கையும் உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றுவதற்கான முறையான செயற்திட்டம் மட்டுமே! -
வெற்றித் திறன் ( Vettrith Thiran )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartஜிக் ஜிக்லர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஜிக் ஜிக்லர் மக்கள் மேலாண்மை திறன்களை வளர்ப்பதன் மூலம் தங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் எவ்வாறு அதிகமான வெளியீடை பெறுவது என்பதை வாசகர்களுக்குக் காட்டுகிறது. அவர் நல்ல தலைமைத்துவத்தின் பண்புகளை வெளிப்படுத்துகிறார் மற்றும் மோசமான நிர்வாக நடைமுறைகளை சமாளிப்பதற்கும் சரிசெய்வதற்கும் குறிப்பிட்ட தீர்வுகளை வழங்குகிறார். நிகழ்வுகள் மற்றும் தெளிவான விளக்கப்படங்கள் நிறைந்த, சிறந்த செயல்திறன் எந்தவொரு தொழிலிலும் அதிகபட்ச செயல்திறனை அடைய மேற்பார்வையாளர்கள், சக பணியாளர்கள் மற்றும் துணை அதிகாரிகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிமுறைகளை வழங்குகிறார்.
-
காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் ( Kaalam Oru Varalaattru Surukkam ) A Brief History Of Time
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஸ்டீபன் ஹாக்கிங்
தமிழில்: நலங்கிள்ளி
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.
-
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் தோழர்கள் தொகுப்பு / Iraithoothar Muhammad (PBUH) mattrum Thozhargal Thohuppu
Rs. 11,900.00Original price was: Rs. 11,900.00.Rs. 10,120.00Current price is: Rs. 10,120.00.Read moreதாரிக் ரமதான், நூருத்தீன்
இறைத்தூதர் முஹம்மது
மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.
தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு
நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.
-
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
-
இந்திய ஆட்ச்சியாளர்கள் தொகுப்பு / Indhiya Aadchiyaazhargal Thohuppu
Rs. 9,380.00Original price was: Rs. 9,380.00.Rs. 8,440.00Current price is: Rs. 8,440.00.Read moreவில்லியம் டேல்ரிம்பிள், மொஹிபுல் ஹசன்
திப்பு சுல்தான்
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது.
கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.
அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.
கடைசி முகலாயன்
‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்
‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்
‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!
கேளுங்கள்!
இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.
இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
-
மலைகளும் எதிரொலித்தன ( Malaikalum Ethiroliththana )
Rs. 4,590.00or 3 X Rs.1,530.00 with -
வீரர்களின் வரலாற்று தொகுப்பு / Veerarhalin Varalatru Thohuppu
Rs. 6,480.00Original price was: Rs. 6,480.00.Rs. 5,832.00Current price is: Rs. 5,832.00.Add to cartஎஸ். எல். வி. மூர்த்தி
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
செங்கிஸ்கான்
செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக – ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.
போர்களின்போது செங்கிஸ்கான் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியைத் தாண்டும். காட்டு மிராண்டி , ரத்தக் காட்டேரி என்று பல சரித்திர மேதைகளால் சித்தரிக்கப்பட்ட அதேவேளையில், மங்கோலியர்கள் செங்கிஸ்கானைத் தங்கள் தேசத்தந்தையாக, பொன்மனச்செம்மலாக, கடவுளாக இன்றும் மதிக்கிறார்கள்.
பெண்மையை மதித்த – சாதி வேற்றுமைகளை வெறுத்த இவர் கொண்டுவந்த சில நியமங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சி சிந்தனைகள் எப்படி இவர் மனதில் உருவாகின என்னும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.
எதிரிகளை துவம்சம் செய்ய அவர் காட்டியது ரத்தவெறி பிடித்த ஓநாய் முகத்தை. குடிமக்களுக்கு நல்லது செய்யக் காட்டியது மருள்விழி மானின் சாந்த சொரூபத்தை. இருதுருவங்களான ஓநாயும் மானும் ஒரே மனித நெஞ்சிற்குள் குடியிருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே! சாத்தியப்படுத்தியிருக்கிறாரே இந்த மனிதர்!
உலக வரலாறு சில பார்வைகள் (Glimpses of world history) என்ற தனது நூலில் நேருகூட வரலாற்றிலேயே மாபெரும் இராணுவத் தளபதி செங்கிஸ்கான்தான். அலெக்சாண்டரும் சீசரும் இவர் முன்னால் கத்துக்குட்டிகள் என்றாரே.
அது எதனால்?
பதில் காண படியுங்கள்!
-
தமிழ் மொழி வரலாறு
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartதெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ. பொ. மீனட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல். தமிழ் மொழி வரலாற்றில் அக்கறை கொண்டு அறிவு பெற விழையும் எல்லோர் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது.
-
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது ( Yaarukkaha Indha Mani Olikkirathu )
Rs. 6,790.00or 3 X Rs.2,263.33 withAdd to cartஎர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: சி. சீனிவாசன்
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான்.
எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
-
வேடிக்கைப் பார்ப்பவன் / Vedikkaip Paarpavan
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartநா. முத்துக்குமார்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார்.
இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்.
வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். -
முதல் உலகப் போர் ( Mudhal Ulagap Por )
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withAdd to cartமருதன்
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்?
ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?
இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு. மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.
-
கெட் எபிக் ஷிட் டன் ( Get Epic Shit Done Tamil )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 with -
நடுநிசி நூலகம் / The Midnight Library Tamil / Nadunisi Noolaham
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartMatt Haig
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிட்டுகிறது. அக்கட்டம்வரை, அவளுடைய வாழ்க்கை துன்பத்திலும் பின்வருத்தங்களிலும் தோய்ந்த ஒன்றாகவே இருந்து வந்திருந்தது.
இதுவரை, தான் தன்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்ததோடு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்திருந்ததையும் அவள் உணர்கிறாள். ஆனால், இப்போது எல்லாமே முற்றிலுமாக மாறவிருக்கின்றது. அவள் தன்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக வாழ்வதற்கான வாய்ப்பை அந்நூலகத்திலுள்ள நூல்கள் நோராவுக்கு வழங்குகின்றன.
முன்பு அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவரின் உதவியுடன், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பின்வருத்தத்தையும் நீக்குவதும், தனக்கான ஒரு கச்சிதமான வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதும் இப்போது அவளுக்குச் சாத்தியமாகியுள்ளது. ஆனால், விஷயங்கள் எப்போதும் தான் கற்பனை செயது வந்துள்ளதைப்போல இருக்கவில்லை என்பதை அவள் உணர்கிறாள்.
விரைவில், அவளுடைய தேர்ந்தெடுப்புகள் அவளையும் அந்த நூலகத்தையும் பெரும் ஆபத்துக்குள் சிக்க வைக்கின்றன. காலம் கடப்பதற்குள் வாழ்க்கையின் இந்த உச்சகட்டக் கேள்விக்கான பதிலை அவள் வழங்கியாக வேண்டும்.
வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான வழி எது?
-
இரண்டாம் உலகப் போர் ( Irandam Ulagap Por )
Rs. 2,790.00or 3 X Rs.930.00 withAdd to cartமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
-
ரஜினியின் வாழ்க்கை மந்திரங்கள் / Rajini’s Mantras / Rajiniyin Vazkai Mandhirangal
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withAdd to cartP.C. Balasubramanian
“எனது ரசிகர்கள்மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” – ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த, அவருக்கே உரிய ‘வாழும் பாணி’ யின் உதவியுடன் வாசகர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கைகளில் தொடர்ந்து முன்னேறி வளம் பெறலாம்? – என உணர்த்தும் நூல் இது.
இந்த ரஜினியின் மந்திரங்கள்’ என்னும் நூலில் பல புத்தகங்களை ஏற்கனவே படைத்து, ‘மிக்க உயர்ந்த அளவில் விற்பனையாக்கி வெற்றிகண்ட PC பாலசுப்பிரமணியன் ரஜினிகாந்த ஆற்றிய குறிப்பிட்ட பற்பல உரைகள், மற்றும் பொது மக்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஆகியவையில் இயல்பாக வெளிப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் இடையீடுகள் முதலியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கைப்பாடங்களைச் சிறப்புத் தொகுதியாக வெளியிட்டிரிக்கிறார்.
தனது ரசிகர்களால் ‘தலைவர்’ என்று மிக்க அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் பல லட்சக்கணக்கான மக்களின் மனதுகளில் சிறந்த ஊக்குவிப்பான எண்ணங்களை உருவாக்கும் திறமை உள்ளவர் அவருடைய பெரும் வெற்றியின் கதை ஒரு பஸ் கண்டக்டர் என்ற நிலையிலிருந்து இந்தியத் திரைப்பட உலகில் பெருவாரியான மக்களின் பேரன்புக்குப் பாத்திரமாகி ‘சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்த வரலாறு நிஜமாகவே அளவற்ற வியப்பைத் தருவதாகும்.
அவரது சொந்த வாழ்வின் கதை ஒரு மனிதர் எப்படித் தனது தனிமனித இயல்புகளையும், பெருமதிப்புக்குரிய தனது வாழ்க்கியத் தத்துவகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல் தனது குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதை உணர்த்திக் காட்டிய உயர்தரமான ப்ளுபரிஸ்ட் ஆகும்.
மேற்படியான அவரது உயர்ந்த வாழ்க்கை வரலாற்றிலிருந்து குறிப்பிடத்தக்க, பற்பல நிகழ்வுகளை இந்த நூலில் தொகுத்து, இந்த நூலின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் எப்படி ஒரு தனிமனிதர் எந்தச் சூழ்நிலையிலும் அதற்கேற்ப நல்ல முறையில் அமைத்துக்கொள்ளாக் கூடிய மனோபாவம், அனுபவங்களிலிருந்து சரியான வாழும் முறைகளை அமைத்துக் கொள்ளும் விருப்பம், விடாமுயற்சி மற்றும் சரியான நடைமுறைத் தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டு தனிச்சிறப்புடன் புகழ்பட வாழமுடியும் என்று நன்கு சிந்தித்திருக்கிறார். அப்படி அவர் எல்லாக் காலங்களிலும் தனது வாழ்வில் இதுவரை தொடர்ந்து விளங்கியுள்ளார் என்பது அவரை ஒரு மிகவும் விரும்பத்தக்க மிக்க சீர்மைவாய்ந்த விக்கிரஹமாக ஆகியிருப்பது உண்மை
மேற்கூறிய ‘ரஜினியின் மந்திரங்கள்ல் ஒவ்வொன்றும் மிகமிக எளிமையானதும், யாரும் மேற்கொண்டு செயல் படுத்தக்கூடிய வாழும் முறையாகவும் அமைந்துள்ளது. அது ஒவ்வொன்றும் சமூகத்தின் மீதும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிசினஸ் சைக்காலஜி ( Business Psychology Tamil )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withதெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி.
· வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது?· அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது?
· அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது?
பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்.
வாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் உங்களுடைய போட்டியாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களைவிடச் சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும்.
இந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது.
ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர்.
-
ஊக்கமூட்டும் சுயமுன்னேற்ற தொகுப்பு : விமானத்தின் பயணத்திட்டம் மற்றும் கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை / Ukkamuttum Suyamunetra Thogupu
Rs. 4,880.00Original price was: Rs. 4,880.00.Rs. 4,390.00Current price is: Rs. 4,390.00.Add to cartபிரையன் ட்ரேசி
பி.எஸ்.வி.குமாரசாமி
ராபின் ஷர்மா
விமானத்தின் பயணத்திட்டம்
வாழ்வில் பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கும், மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்குமான ஒரு திட்டத்தை வடிவமைப்பது எப்படி என்பதை ஒரு விமானப் பயண உருவகத்தின் மூலம் இந்நூல் விளக்குகிறது.
ஒரு விமானப் பயணத்தைப்போல, வெற்றியும், அதிர்ஷ்டத்தையோ, எதிர்பாராத வாய்ப்புகளையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாத சக்திகளையோ சார்ந்த ஒன்றல்ல என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பின்னாலிருந்து அடிக்கின்ற சாதகமான காற்று ஒரு விமானப் பயணத்தை விரைவுபடுத்தலாம்; முகத்திற்கு எதிராக அடிக்கின்ற எதிர்க்காற்று தாமதங்களை உருவாக்கலாம்; ஆனால், ஒரு விமானி, இந்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்பியல் விதிகளோடு ஒத்திசைவாகச் செயல்பட்டு, சென்றடையத் திட்டமிட்டுள்ள இடத்தை அடைகின்ற விதத்தில் தன்னுடைய விமானத்தைத் திறமையுடனும் இலகுவாகவும் கையாள்கிறார். வெற்றியும் அதைப் போன்றதுதான்.
கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.
இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.
-
பணத்தின் பயணம்: பண்டமாற்று முதல் பிட்காயின் வரை… ( Panathin Payanam )
Rs. 3,790.00or 3 X Rs.1,263.33 withAdd to cartஇரா.மன்னர் மன்னன்
உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும். உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது.
கற்காலம் தொடங்கி இன்றைய கலர்ஃபுல் காலம் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சியை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அறிந்துகொள்ளலாம். பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறையில் தொடங்கி, தங்கம் போன்ற விலை உயர்ந்த நகைகளைப் பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தி, கால ஓட்டத்தில் கரன்சிகளாக உருவெடுத்தது வரையிலும், பல்லவர் கால வரலாற்றில் பணம் தொடர்பாகப் பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
இந்தியாவின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் கால பண மதிப்பிலான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பணத்தின் சுவாரஸ்யப் பயணத்தை எளிய வார்த்தைகளால் விளக்கியிருப்பதோடு, சமீபத்திய உதாரணங்களுடன் தொகுத்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. சவால்கள் நிறைந்த இன்றைய உலக வாழ்க்கையில் நாம் திரட்டும் பொக்கிஷத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முறை, நாணவியல் கூறுகளின் அடிப்படையில் இன்றைய பணத்தின் மதிப்பு என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.
ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது… இனி, பணம் பேசும்! பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல். சரக்குப் பணம், வங்கிகள், பங்குச் சந்தைகள், பொருளாதார மோசடிகள் – இவற்றின் வரலாறும் உள்ளே அத்தியாயங்களாக… மொத்தம் 60 அத்தியாயங்கள், 488 பக்கங்கள். விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு.
-
நான் புரிந்துகொண்ட நபிகள் ( Naan Purinthu Konda Nabigal )
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஅ.மார்க்ஸ்
பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தையும் முன்வைத்து இயங்குவதால் அது மிகவும் செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. நபிகள் ஒரு இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.
மானுடராக நம்முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் அடியாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக விளங்குகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள். ஒரு இறைத்தூதராக மட்டுமின்றி நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற. மகனின் மரணத்தில் அழுது குலுங்குகிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதராகவும் அவர் நம்முன் தோன்றுகிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும், அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாகவும் வெளிப்படும் சில முக்கிய இறையியல் சிந்தனைகளையும் நான் புரிந்துகொண்ட வகையில் இங்கே முன்வைத்துள்ளேன்.
——- முன்னுரையிலிருந்து
-
வாழ்வின் அற்புதமான ரகசியங்கள் / Vazvin Atputhamana Rahasiyangal / Life’s Amazing Secrets Tamil
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartகோர் கோபால் தாஸ்
தமிழில்: சந்தர் சுப்ரமணியன்
மும்பை மாநகரின் மிகநெரிசலான போக்குவரத்துக்கு இடையே பயணம் செய்து கொண்டிருக்கும்போது கோர கோபால் தாஸ் அவர்களுக்கும், அவருடைய நண்பர் ஹேரிக்கும் இடையேயான உரையாடலே இந்நூல் மக்கள் எதிர்கொள்ளும் நிலைகளையும் ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியத்தைக் கண்டு கொள்ளும் வகைகளையும் தொடர்ந்த இனிய வாழக்கைக்கான திறவுகோலைக் காண்பதற்குமான வழிமுறைகளையும் இந்த உரையாடலில் நாம் காணலாம்.
நீங்கள் உங்கள் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளவோ உங்களுடைய உண்மையான திறமையைக் கண்டுகொள்ளவோ உங்கள் பணியை எவ்வாறு திறம்படச் செய்தல் இயலும் என்பதை புரிந்து கொள்ளவோ நீங்கள் வாழும் இந்த உலகத்துக்கு நீங்கள் எதைத் திருப்பி அளித்தல் இயலும் என்பதை அறிந்து கொள்ளவோ விரும்பினால் அதற்கான பயணத்தை அறிமுகப்படுத்தும் இந்நூல் அந்தப் பயணத்தில் மறக்கவியலாத அனுபவங்களுடனும் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகள் குறித்த அரிதான பல நுண்ணறிவுச் செய்திகளையும் துறவி கோர் கோபால தாஸ் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்
உலக அளவில் மிகப்பலரால் பின்பற்றப்படுகின்ற மிகவும் பிரபலமான வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும் துறவியாக விளங்கும் கோர் கோபால் தாஸ் வாழ்க்கையில் அவா பெற்ற ஞானத்தை கோடிக்கணக்கான மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய முதல் நூலான “வாழ்வின் அற்புதமான ரகசியங்கள் வாழ்க்கையில் அவர் அடைந்த அனுபவங்களையும், படிப்பினைகளையும் சாறாகக் கொடுக்கும் நூலாகும் உங்கள் எண்ணங்களைத் தூண்டும் விதத்திலும் நகைச்சுவை உணர்வுடனும் அமைந்த இந்நூல் நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கும் உதவும் நூலாக அமையும்
-
கியோஸாகியின் பிசினஸ் ( Kiyosakiyin Business Bundle )
Rs. 4,580.00Original price was: Rs. 4,580.00.Rs. 4,000.00Current price is: Rs. 4,000.00.Read moreராபர்ட் கியோஸாகி
பிசினஸ் ஸ்கூல்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாய்ப்புகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
-
நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுயஉடன்படிக்கைகள் (Niraivaana Vazkaikana Naangu Suya Udanpadikkaihal)
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartடான் மிகெல் ரூஸ்
தமிழில்: PSV குமாரசாமி
40 மொழிகளில் 60 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்துள்ள, உலகப் பிரசித்தி பெற்ற நூல்.
“டான் மிகெல் ரூஸின் புத்தகம் தனிமனித சுதந்திரம் மற்றும் சுயவிழிப்புணர்வுக்கான சிறந்த வழிகாட்டி.”
–டாக்டர் தீபக் சோப்ரா, சர்வதேசப் புகழ்பெற்ற நூலாசரியர், பேச்சாளர்“ஏராளமான படிப்பினைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகச் சிறந்த ஊக்குவிப்புப் புத்தகம்.”
–வெயின் டயர், பிரபல நூலாசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்“கார்லோஸ் காஸ்டனேடாவின் பாரம்பரிய வழியில் டோல்டெக் ஞானத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மக்களுக்குக் கொண்டு செல்வதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் டான் மிகெல்.”
–டேன் மில்மேன்,புகழ்பெற்ற சுயமுன்னேற்றப் புத்தக நூலாசிரியர் -
வைரமுத்து கவிதைகள்
Rs. 4,690.00or 3 X Rs.1,563.33 withAdd to cartவைரமுத்து
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்க்கிறேன். — முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர்
-
இப்பொழுது ( Ippoluzhu ) The Power of Now
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartஎகார்ட் டோலே
தமிழில்: N. கனகமணி
‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா
எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
-
உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்: நாஜி வதை முகாமிலிருந்து (Ulahileye Mahilchiyana Manidhar)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஎடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.
அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.
-
எளிய வேதவழி கணிதம் ( Eliya Vedhavazhi Kanidham )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withAdd to cartதவல் பதியா
கணக்கிடலின் கடினத்தைப் பொறுத்து,நூல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.-முதனிலை,இடைநிலை,மேல்நிலை.எளிதாகப் புரிந்து கொள்வதற்குத் தேவையான விளக்கம் தரும் அளவுக்கு வினாக்கள் செய்து காட்டப்பட்டுள்ளன.எல்லா அத்தியாயத்தின் முடிவிலும்,பயிற்சி வினாக்கள் தரப்பட்டுள்ளன.
-
இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள் / Israel Patriya Paththu Kattukadhaikal / Ten Myths About Israel Tamil
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartஇலான் பப்பே
தமிழில்: பிரேம்
இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஃபலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் மிக முக்கியமான புத்தகம். இஸ்ரேலைக் கட்டமைக்க உதவிய ‘கட்டுக்கதைகளும்’, தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் ஃபலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கிடும் மதிப்புமிக்க கருத்தாயுதம். ஃபலஸ்தீன் மீதான காலனிய ஆக்கிரமிப்பின் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெளியிடப்பட்ட முன்னோடியான இந்தப் புத்தகத்தில், துணிச்சல் நிறைந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலான் பப்பே, சமகால இஸ்ரேலின் தோற்றம் பற்றியதும் அடையாளம் பற்றியதுமான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.
பப்பே ஆராய்ந்துள்ள இந்தப் ‘பத்து கட்டுக்கதைகளும்’ ஊடகங்களில் திரும்பத்திரும்ப முடிவின்றிச் சொல்லப்படுபவை, இராணுவத்தால் செயல்படுத்தப்பட்டவை, உலக நாடுகளின் அரசாங்கங்களால் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டவை, அந்தப் பிராந்தியத்தின் அநீதியான தற்போதைய நிலையை அப்படியே நிலைத்திருக்கச் செய்பவை. ‘ஃபலஸ்தீனம் யூதர்களின் பூர்விக பூமி; ஆனால் பால்ஃபோர் பிரகடனத்தின்போது அது ஆளில்லாத வெற்று நிலமாக இருந்தது’ என்ற வாதம் தொடங்கி, இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் ஸியோனிசத்தின் பங்கு என்னவாக இருந்தது என்பது வரை ஆராய்கின்றார்
1948ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டுத் தாமாக முன்வந்து வெளியேறினார்களா என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், 1967 போர் ‘வேறு வழியில்லாமல்’ இஸ்ரேல் நடத்திய போர்தானா என்றும் கேள்வியெழுப்புகின்றார். கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களின் தோல்வியைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகளைக் குறித்து விவாதிக்கும் பப்பே, ‘இரு நாடுகள்’ தீர்வு ஏன் சாத்தியமற்றது என்பதை விளக்குகின்றார்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 3 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Original price was: Rs. 1,990.00.Rs. 1,190.00Current price is: Rs. 1,190.00.or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
தாந்தேயின் சிறுத்தை / Thantheyin siruthai
Rs. 2,290.00Original price was: Rs. 2,290.00.Rs. 1,500.00Current price is: Rs. 1,500.00.or 3 X Rs.500.00 withAdd to cartசாரு நிவேதிதா
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது.
அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார்.
வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார்.
மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,990.00or 3 X Rs.1,663.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 4 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Original price was: Rs. 1,990.00.Rs. 1,190.00Current price is: Rs. 1,190.00.or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 5 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Original price was: Rs. 1,990.00.Rs. 1,190.00Current price is: Rs. 1,190.00.or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல் ( Magilchiyaaga Iruppathatkaana Thunichal ) The Courage To Be Happy
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஇச்சிரோ கிஷிமி and ஃபூமிடாகா கோகா
தமிழில்: PSV குமாரசாமி
- சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது.
நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது. ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார்.
ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய “துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
-
தனிமனித வளர்ச்சி விதிகள் 15 (thanimanidha valarchi vidhihal 15)
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
- நியூயார்க் டைம்ஸ் விற்பனை பட்டியலில் முதலிடம்
“உலகில் நாம் எது செய்தாலும் அதற்கு பன்மடங்கு மெருகூட்டுவது எமது ஆளுமை. தனிமனித வளர்ச்சி விதிகள் 15 என்ற இந்தப் புத்தகம் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தது.” — நுஸ்ரி – காலி, இலங்கை ( K. M. Nusry – Galle, Sri Lanka)
ஒரு நபர் வளர உதவுவதற்கு எப்போதும் உறுதியாக இருக்கும் முயற்சித்த மற்றும் உண்மையான கொள்கைகள் உள்ளனவா? பதில் ஆம் என்று ஜான் மேக்ஸ்வெல் கூறுகிறார். அவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருக்கிறார். முதல் முறையாக அவர் நம் திறனை அடைய என்ன தேவை என்பதை அவர் சேகரித்த அனைத்தையும் கற்பிக்கிறார்.
அவரால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியுமான முறையில் ஜான் கற்பிக்கிறார். . .
கண்ணாடியின் சட்டம்: உங்களுக்கான மதிப்பைச் சேர்க்க நீங்கள் உங்கள் மதிப்பைப் பார்க்க வேண்டும்
விழிப்புணர்வுச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள உங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்
மாடலிங் சட்டம்: பின்தொடர உங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதபோது உங்களை மேம்படுத்துவது கடினம்
ரப்பர் பேண்டின் சட்டம்: நீங்கள் இருக்கும் இடத்திற்கும் நீங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கும் இடையிலான பதற்றத்தை இழக்கும்போது வளர்ச்சி நின்றுவிடும்.
பங்களிப்புச் சட்டம்: உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வது மற்றவர்களை வளர்க்க உங்களை அனுமதிக்கிறதுஇந்த புத்தகம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள உதவும், அதன் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
-
பிரைட் அண்ட் பிரஜுடிஸ் ( Pride and Prejudice Tamil )
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withAdd to cartஜேன் ஆஸ்டின்
எலிசபெத் பென்னட் முதல் முறையாக ஒரு நடன நிகழ்ச்சியில் ஃபிட்ஸ்வில்லியம் டார்சியை சந்தித்தபொழுது, திமிர்பிடித்த அருவருப்பான மனிதனென்று அவனை அலட்சியப்படுத்துகிறாள். தாங்கிக்கொள்ள முடியாத அளவு துடுக்குத்தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாமல் அவளுடன் நடனமாடும் யோசனையைக் கூட மறுக்கிறான் டார்சி.
வாழ்க்கை அவர்களை ஒருவருக்கெதிராக மற்றவரை நிறுத்தும்பொழுது டார்சி அவளது அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வால் கவரப்பட, எலிசபெத் அவன் மீதான தன் உணர்ச்சிகளைக் குறித்து வியக்க துவங்குகிறாள். ஆனால் டார்சி அவளது கடைசி தங்கை லிடியாவை அவதூறிலிருந்துக் காப்பாற்ற, இதுவரை அகம்பாவத்தினால் அவளைக் குறித்து தன் கருத்தில் பாரபட்சமாக இருந்துவிட்டோமோ என்று சிந்தித்தாள்.
போராடும் இரு உள்ளங்களின் கதை இது என்றாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு நையாண்டியாக இதனை ஜேன் ஆஸ்டின் நெய்துள்ளார். இரண்டு நூந்தாண்டுகளுக்கு முன்னால் பதிப்பிடப்பட்டாலும் இன்றளவிலும் இது வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருகிறது.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 6 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Original price was: Rs. 1,990.00.Rs. 1,190.00Current price is: Rs. 1,190.00.or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
காலை எழுந்தவுடன் தவளை! ( Kaazhai Elunthavudan Thavalai ) Eat That Frog
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் தவளைகளை சாப்பிடுகிறார்கள்.
ஒரு பழைய பழமொழி உள்ளது, நீங்கள் தினமும் காலையில் முதல் முறையாக ஒரு தவளை சாப்பிட்டால், நீங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய மிக மோசமான காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு கிடைக்கும். டிரேசியைப் பொறுத்தவரை, தவளை சாப்பிடுவது உங்கள் சவாலான பணியைச் சமாளிப்பதற்கான ஒரு உருவகமாகும் – ஆனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை எழுந்தவுடன் தவளை! ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது, இதனால் இந்த முக்கியமான பணிகளை நீங்கள் கச்சிதமாக செய்து அவற்றை திறமையாகவும் செயல் விளைவுடையதாகவும் நிறைவேற்ற முடியும்.
பிரையன் ட்ரேசி பயனுள்ள நேர மேலாண்மைக்கு என்ன முக்கியம் என்பதை துள்ளியமாக கூறுகிறார்: முடிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு. வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தகம், இன்று உங்கள் முக்கியமான பணிகளைச் செய்வதை உறுதி செய்யும்!
-
பின்லாந்து காட்டும் வழி ( Finland Kaattum Vazhi ) 100 Social Innovations from Finland
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஇல்க்கா டாய்பாலே
தமிழில்: காயத்திரி மாணிக்கம்
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது.
இந்தப் புத்தகம் பின்லாந்தில் ஏற்பட்ட திகைக்கவைக்கும் 108 சமூகக் கண்டு பிடிப்புகளை எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. சமையலறையில் தொடங்கி அந்நாட்டின் நாடாளுமன்றம்வரை: மருத்துவம் தொடங்கி வர்த்தகம்வரை; அறிவியல் தொடங்கி அடிப்படைக் கட்டுமானம்வரை; கலாசாரம் தொடங்கி பழக்கவழக்கங்கள்வரை ஒவ்வொரு துறையையும் குறிப்பிடத்தக்கமுறையில் வளப்படுத்திய சமூகக் கண்டுபிடிப்புகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
உதாரணத்துக்கு, மருத்துவத் துறையில் என்னென்ன புதுமையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்; எல்லோருக்கும் தரமான கல்வி சென்று சேர்வதை எப்படி உறுதிபடுத்திக்கொள்வது; கல்வியின் தரத்தை எப்படி நிர்ணயம் செய்வது: மருத்துவம், கல்வி போன்றவற்றை ஓர் அரசு இலவசமாக வழங்கலாமா; சமூக மாற்றத்துக்கு மக்கள் செய்யவேண்டியது என்ன; ஓர் அரசின் கடமைகள் என்னென்ன என அனைத்தும் இந்நூலில் உள்ளன.
- மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்நூல் தற்சமயம் 17 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
பனி | Snow Tamil
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartஓரான் பாமுக்
தமிழில்: ஜி. குப்புசாமி
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’.
சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக்.
ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘கா’வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.
-
சூப்பர் சேல்ஸ் சக்சஸ் ஃபார்முலா / Super Sales – Success Formula
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withஜி.எஸ்.சிவகுமார்
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!- விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?- இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?- உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?- பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?- வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?- பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?- இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட, நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.பிசினஸ் டிப்ஸ் ( Business Tips Tamil )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி… இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும்.பிராப்ளம்ஸ்கி விடுதி / Problemski Hostel Tamil
Rs. 990.00or 3 X Rs.330.00 withAdd to cartடிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
தமிழில்: லதா அருணாச்சலம்
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு.
சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது.
நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ முற்றிலும் ஒரு புதிய முயற்சி.
பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை ( Palestine – Israel Por: Oru Varalaatrup Paarvai )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartநாகேஸ்வரி அண்ணாமலை
‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்
‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி ( Ninaivaatral )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartவில்லியம் வாக்கர் அட்கின்சன்
“நான் வாசித்துள்ள புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமானது இந்தப் புத்தகம் தான். நினைவாற்றல் எவ்வளவு முக்கியமானது என்பதில் தொடங்கி, எமது மனதை மற்றும் உடலை பயன்படுத்தி நினைவாற்றலை வளர்ப்பதை பற்றி, புத்தகங்களில் இருந்து வாழ்க்கையில் பயன்படுத்த விடயங்களை பெறுவது முதல் அனைத்தும் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.” — நிர்மலா – யாழ்ப்பாணம், இலங்கை ( Nirmala – Jaffna, Sri Lanka )
“எல்லா அறிவும் நினைவு மட்டுமே.” நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஏராளமான தகவல்கள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. நமது அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து முக்கியமான சிறிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்வது வரை, நமது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான தரவுகளை மனப்பாடம் செய்வது வரை, நமது மனத் திறன்களின் செயல்திறனை முடிவில்லாமல் நம்புகிறோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் விரும்புவது போல் அது திறமையாக இருக்காது. ஒரு விளக்கக்காட்சியை வழங்குவதை மறந்துவிட்டு, புள்ளிவிவரங்களை நினைவில் கொள்ள முடியாத சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காண்கிறோம். நாங்கள் முன்பு சந்தித்த ஒருவரைச் சந்திக்கிறோம், ஆனால் இப்போது அவர்களின் பெயர் என்னவென்று தெரியவில்லை, நினைவில் இல்லை. நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும், அதனால் விஷயங்களை நொடியில் நினைவுபடுத்த முடியும். நினைவாற்றலில் வில்லியம் வாக்கர் அட்கின்சன், அதை எவ்வாறு உருவாக்குவது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவது, நமது நினைவகத்தை மேம்படுத்த, வளர்ப்பதற்கு மற்றும் பயிற்சியளிக்க எளிதான மற்றும் பொருந்தக்கூடிய முறைகளை வழங்குகிறது.
இந்தப் புத்தகம், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும்; விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.
லீ குவான் யூ: பெருந்தலைவன்
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartபி. எல். இராஜகோபாலன்
லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டு திடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார்.
என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும், நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இனவெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும், வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்யுனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை.
மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார்.
சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது.
தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி, தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி ( Aazhmanathitku Appal Ulla Athisaya Sakthi )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஜேம்ஸ் ஜென்சன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.
இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்
ஜெமினி சர்க்கிள் / Gemini Circle
Rs. 1,290.00Original price was: Rs. 1,290.00.Rs. 990.00Current price is: Rs. 990.00.or 3 X Rs.330.00 withRead moreசோம. வள்ளியப்பன்.
எளிய மக்களின் கதைகளை எளிய மொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெவ்வேறு பாணிகளைக் கையாண்டு அக்கதைகளைச் சிக்கலானவையாக மாற்றிவிடுகிறார்கள் பலர். அப்படி மாற்றினால் மட்டுமே அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சோம. வள்ளியப்பனின் எழுத்து அந்த வகையில் மாறுபட்டது. சமுதாயத்தில் நம்மைச் சுற்றிப் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, பலதரப்பட்ட உணர்வுகளை, அவரவர் நிலைப்பாடுகளை சிக்கலில்லாத, குழப்பமில்லாத நடையில் விவரித்துக்கொண்டு செல்கிறார் அவர். அந்த எளிமை அதற்குண்டான வசீகரத்தை எப்படியோ பெற்றுக்கொண்டு விடுகிறது. நீங்களும் அதை உணர்வீர்கள். ஜீவனுள்ள இந்தக் கதைகள் உங்களோடு நேரடியாகப் பேசும். தாக்கத்தையும் ஏற்படுத்தும். சோம. வள்ளியப்பனின் எழுத்தில் ‘நெஞ்சமெல்லாம் நீ’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘பட்டாம்பூச்சியின் கண்ணாமூச்சி காலங்கள்’ என்னும் குறுநாவலும் முன்னதாக வெளிவந்துள்ளன.
ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் ( Zennum Motor Cycle Paramarippu Kazhaiyum )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreராபர்ட் எம். பிர்சிக்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் மற்றும் பேரா.ச.வின்சென்ட்
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம் பெறாமலேயே இந்தியாவை விட்டுச் சென்றார்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு இவருடைய முதல் புத்தகமான ‘ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் – பண்புகள் பற்றிய விசாரணை’ வெளியானது. இன்று வரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.
இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் 8 ) / Insurance (Alla Alla Panam 8)
Rs. 1,690.00Original price was: Rs. 1,690.00.Rs. 1,490.00Current price is: Rs. 1,490.00.or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப் பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.”
தொட்டதெல்லாம் பொன்னாகும்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreசோம. வள்ளியப்பன்
சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற, வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன் விரிவும் செறிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.
TCS: ஒரு வெற்றிக் கதை
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreஎஸ். ராமதுரை
கி. இராமன்ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள்.
வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.
ஒரு ஆன்மாவின் தேடல் ( Memoirs Of A Vagrant Soul )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withஇறைத்தூதர் முஹம்மது ( Iraithoothar Muhammed PBUH )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreதாரிக் ரமதான்
தமிழில்: எம். யூசுப் ராஜா
மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.
[RARE] ஸ்டாலின்கிராடு சண்டை (The Battle of Stalingrad)
Rs. 1,690.00Original price was: Rs. 1,690.00.Rs. 1,090.00Current price is: Rs. 1,090.00.or 3 X Rs.363.33 withRead moreஅ. வசிலேவ்ஸ்கி
குளிரும் மந்தாரமும் கொண்ட அந்த 1942 ஆம் வருட நவம்பர் 19 காலை வோல்கா ஆற்றின் ஸ்டெப்பி சமவெளியைப் பீரங்கித் தாக்குதல் கேட்டே இராத சத்தத்துடன் துயிலெழுப்பியது. இது, வோல்கா நதிக்கரை நகரமான, பாசிஸ்டுகளால் முற்றுகையிடப்பட்ட ஸ்டாலின்கிராடு தாக்குதலுக்குண்டாகியது. தனது பரப்பிலும் முக்கியத்துவத்திலும் ஸ்டாலின்கிராடு சண்டை, கடந்தகாலத்தின் அனைத்து சண்டைகளைவிட மிகுதிவாய்ந்தது. ஆறரை மாத காலத்திற்குள்ளாகப் பெரும் நிலப்பரப்பில் சண்டை நடந்தது. இதில் ஒரே சமயத்தில் இரண்டு மில்லியன்களுக்கும் மேலாக மக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். எதிரியின் துருப்புகள் சோவியத்- ஜெர்மானிய போர் முனையில் சண்டையிட்ட படையமைப்பு அளவில் நான்கில் ஒரு பகுதியாகிய ஒன்னறை மில்லியன்கள் படைவீரர்களையும் அதிகாரிகளையும் இழந்தன. இரண்டாவது உலகப் போரின் திருப்புக்கட்டமாகிய ஸ்டாலின்கிராடு சண்டையின் வெற்றியைப் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
மனதோடு ஒரு சிட்டிங் ( Manathodu Oru Sitting )
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreசோம. வள்ளியப்பன்
மனம் பற்றிய ‘இன்னொரு புத்தகம்’ அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி, என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைக்கிற புத்தகம். நுட்பமான பார்வை, எவரும் சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான அணுகுமுறைகள் கொட்டிக்கிடக்கிற பொக்கிஷம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ள, நிம்மதியாக வாழ, அற்புதமான விளக்கங்கள். முழுக்க முழுக்க மனது பற்றிய புத்தகம். மனதை புரிந்துகொள்ள, கைகொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க. மொத்தத்தில் மனதை ஆள… மனதோடு ஒரு சிட்டிங். மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரான சோம. வள்ளியப்பன் எழுதிய மனம் பற்றிய ‘உஷார் உள்ளே பார்’ ஒரு தளம் என்றால், மனதோடு ஒரு சிட்டிங், அடுத்தத் தளம், அடுத்த நிலை, அடுத்தக் கட்டம். ‘இட்லியாக இருங்கள்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’ போன்ற வெற்றிப் புத்தகங்கள் எழுதிய சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல் இது.
அலுவலகத்தில் உடல்மொழி ( Aluvalahathil Udalmozhi )
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஆலன் & பார்பரா பீஸ்
தமிழில்: PSV குமாரசாமி
ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளை புரிந்துகொண்ட சரியான முடிவை எடுப்பது எப்படி என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
நெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreமருதன்
அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
பித்தன் The Prophet (Piththan)
Rs. 850.00or 3 X Rs.283.33 withRead moreகலீல் ஜிப்ரான்
கலீல் கிப்ரான்( Kahlil Gibran ) – என்ற ஞானி லெபனான் நாட்டவர். இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர். இவருடைய தாய்மொழி அரபி. ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர், ”THE PROPHET” என்னும் மிகச் சிறந்த நூலை இவர் ஆங்கிலத்தில் இயற்றினார். இதை ஸ்ரீஅருண் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மூலநூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம்.